Tuesday 14 January 2014

தீனா கொரலு OLD


தீனா கொரலு...

அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா.! இன்னிக்கு இன்னா கர்த்துன்னா..

நம்ம பேஸ்ற பேச்சி எப்டி இர்க்கணும்ன்னா... கேக்குற ஆளு சொம்மா அப்டியே மெல்ட்டு ஆயி நம்பளாண்ட சர்ண்டர் ஆவணும்.. உன் பேச்சி அல்லாரையும் இஸ்த்துகினு வர்ணும்...

அத்தே நேர்த்துல ஒன் பேச்சி கேக்யாதவங்க அடாடாடா நமக்கு இப்டியாப்பட்ட பேச்ச கேக்க மிடியாம போச்சேன்னு வர்த்தப்படணும்.அப்டி பேஸ்றது தான் நல்ல பேச்சி...

சுர்க்கமா பிரியற மேறி சொன்னா... நல்ல பேச்சின்றது...

"கேக்குறவன் குஜால் ஆவணும்.. கேக்காதவன் பேஜார் ஆவணும்"

சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

கேட்டார்ப் பிணிக்குந் தகையவாய்க் கேளாரும்

வேட்ப மொழிவதாம்ஞ் சொல்.




தீனா கொரலு...

அல்லாத்துக்கும் சலாம் உட்டுக்கிறேன்! இன்னிக்கு இன்னா கர்த்துன்னா..

சொந்தகார்னா இர்க்கவன் எப்டி இர்க்கணும் தெரிமாப்பா? உன் கய்யில துட்டு இர்க்கும் போது எவ்ளோ நெர்க்கமா இர்ந்தானோ அத்தே மேறி துட்டு இல்யாத போதும் இர்க்கணும்..

பழச மர்க்காம எப்யும் ஒரே மேறி இர்க்கறவன் தான் மெய்யாலுமே சொந்தக்காரன்.!இத்த உனக்கு யார் செஞ்சாலும் நீ ஆருக்கும் செய்யாத்தே...சுர்க்கமா பிரியற மேறி சொன்னா...

"பழச மர்க்காதே.....பண்த்தை மதிக்காதே".. 

சோக்கா சொல்லிக்கீராருபா "தல"

பற்றற்ற கண்ணும் பழமைபா ராட்டுதல்

கற்றத்தார் கண்ணே உள.



தீனா "கொரலு" 

வண்க்கம்ப்பா இன்னிக்கு இன்னா கர்த்துன்னா..

இப்ய இர்க்க கால்த்துக்கும் ஏத்தாமேறி அப்யே சொல்லிக்கீராரு நம்ம வள்ளுபரு அத்து இன்னான்னா...

தவமிர்க்குற சாமியாரு கண்க்கா வேசங்கட்டிக்கினு பின்யால அதுக்கு சம்பந்தமே அல்லாத வேலய பாத்துனுர்க்குற டுபாக்கூருங்கோ ரொம்ப்ய டேஞ்சிரு ஆனவங்கோ...

பொதர்ல மர்ஞ்சி நின்னுக்குனு பர்ந்து வர பறவிய வல வீசி புட்ச்சுடுவாங்களே வேடனுங்கோ அத்தெ மேறி ஊரு ஜன்த்த அல்லாம் ஏமாத்திருவானுங்கோ இந்த டுபாக்கூர் சாமிங்கோ.

சுர்க்கமா பிரியற மேறி சொன்னா...

"வேசம் கட்ன சாமியும் ஒன்யு..வேடன் விர்ச்ச வலையும் ஒன்யு"..

ரண்டாயிரம் வர்சத்துக்கு மின்னாடியே நம்ம தல சோக்கா சொல்லிக்கிற மேட்டருபா.!


தவம்மறைந்து அல்லது செய்தல் புதல்மறைந்து

வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று.




தீனா "கொரலு" 

வண்க்கம்ப்பா இன்னிக்கு இன்னா கர்த்துன்னா..

நல்லவங்கோ,பெர்ய மன்சங்கோ எப்யுமே நம்ய கூடவே இர்க்குறது தான்பா நல்யது! அவுங்கோ சங்காத்தமே வோணான்னு எவுனாச்சும் சொன்யா அத்து எப்டிருக்கும் தெரிமா?

நீயா தேடினு போயி பல பேர விரோத்தியா ஏத்துகினா எப்டி இர்க்குமோ அத்தே மேறி பத்து மடங்கு கஸ்டம்... பெர்ய மன்சன் சங்காத்தம் வோணான்னு சொல்றது..! 

சுர்க்கமா பிரியற மேறி சொன்னா....

"நல்லவங்கோ சங்காத்தம்... வோணாமின்னா சங்கூதும்"

சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

பல்லார் பகைகொளலின் பத்தடுத்த தீமைத்தே

நல்லார் தொடர்கை விடல்.



தீனா "கொரலு" 

வண்க்கம்ப்பா இன்னிக்கு இன்னா கர்த்துன்னா....

ஒல்கத்துல சொந்தக்கார்ன வுட தோஸ்த்து தான் அல்லாம்! ஆன்யா தோஸ்த்து நல்லவனா கெடிக்கிறது தான்பா கஸ்டம்.! எப்டியாப்பட்ட ஆளு உனுக்கு தோஸ்த்தா இர்க்கணும்?

பெர்ய மருவாதியான குட்ம்பத்துல பொர்ந்தவனா இர்ந்தாலும் "இத்த செஞ்சா பழி நம்ய மேல வுயுந்துடும்ன்னு"பழி பாவ்த்துக்கு பய்ந்து அப்பாலிக்கா ஒதுங்கி போரான் பாரு அவன் தான்பா நல்ய தோஸ்த்து..! அப்டியாபட்ட தோஸ்த்த நீ துட்டு கொட்த்தாவது தக்க வச்சிக்க..

சுர்க்கமா பிரியற மேறி சொன்னா...

"நாயமனவன் தோஸ்த்துன்னா... நாலு காசு பெர்சில்ல"

சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

குடிப்பிறந்து தன்கட் பழிநாணு வானைக்

கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு.



தீனா "கொரலு" 

வண்க்கம்ப்பா இன்னிக்கு இன்னா கர்த்துன்னா....

எப்ய பாத்யாலும் வாய்க்கு ருசியா துண்ணுகிட்டே இர்க்குறவங்கள பாத்துர்க்கியா? அப்டி துண்றது மட்யும் இல்லாம நாலு நல்லத காதால கேட்யு அறிவ வள்த்துக்கணுமாம்..!

உனுக்கு காத கொட்த்துர்க்கிறதே கேக்கத்தான் அத்த செய்யாம வக்கிணியா துண்ணுகிட்டே இர்ந்தா நீ இர்க்கறதும் ஒன்யுதான் சாவர்றதும் ஒன்யு தான்..,

சுர்க்கமா பிரியற மேறி சொன்னா....

"காதுக்கு போடாத பூட்டு... ஒன் வாழ்க்க ஆய்டும் வேஸ்ட்டு"

சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

செவியின் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்

அவியினும் வாழினும் என்?



தீனா "கொரலு" 

வண்க்கம்ப்பா இன்னிக்கு இன்னா கர்த்துன்னா.....

நெரியா துட்டு சேத்து வச்சவங்கோ இல்யாதவங்களுக்கு ஒத்வி செய்ணும்.. அப்டி ஒத்வி செய்யாம வூடு நெர்யா துட்டை மர்ச்சி வச்சினு இர்க்குறது எப்டி இர்க்கும் தெரிமா?

ஒல்க அழகி கண்க்கா ஊரே ஜொள் வுட்ற மேறி இர்க்க கன்னி பொண்ணு தன்யாவே வாழ்ந்து கியவி ஆயி செத்தது கண்க்கா ஒத்வி செய்யாதவன் துட்டு வீணாப் போய்டுமாம்..! 

சுர்க்கமா பிரியற மேறி சொன்னா... 

"தந்த்யு ஒதவாத பொன்னும்... தன்யா வாழ்ற பொண்ணும் வேஸ்ட்டாவே பூடும்"

சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

அற்றார்க்கொன்று ஆற்றாதான் செல்வம் மிகநலம்

பெற்றாள் தமியள்மூத் தற்று.



தீனா "கொரலு" 

வண்க்கம்ப்பா இன்னிக்கு இன்னா கர்த்துன்னா.....


ஒரு மன்சனுக்கு பகயா இர்க்குறது இன்னா தெரிமா? பூ கணக்கா சிர்ச்ச மூஞ்சி, சந்தோஸ்மான மன்சு இப்டி இர்க்குவறங்கோ கோவத்துல காண்டானா இன்னாகும்?

சிர்ச்ச மூஞ்சி டோமராகும் மன்செல்லாம் வெறியாகும் அந்தய நிம்சம் நீ மன்சனாவே இர்க்க மாட்ட..
மன்சனுக்கு கோவத்த வுட பெர்ய எதிரி எத்யுமே இல்ல கரீட்டா.! சுர்க்கமா பிரியற மேறி சொன்னா

"சிர்ச்சு வாய்ந்தா லாபம்... உனுக்கு பெர்ய எதிரி கோவம்...

சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"


நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்

பகையும் உளவோ பிற.



தீனா "கொரலு" 

வண்க்கம்ப்பா இன்னிக்கு இன்னா கர்த்துன்னா.....

பூமிய நாம கடப்பாரய எட்த்து தோண்ட சொல்லோ இன்னா செய்து? கம்முனு கிடக்குதா! அப்டி கம்முன்னு பொர்த்து இர்ந்தா தான் அத்து பூமா தேவி....! அத்தே மேறி....

உன்ய பத்தி தப்பா பேஸ்கூடாத வார்த்தய எவுனாவது பேஸ்னா அத்த பொர்த்துக்கினு கண்டுக்காம போனின்னா நீ பெர்ய நியாயஸ்தனாம்பா.! சுர்க்கமா பிரியற மேறி சொன்னா...

"வெட்னாலும் பொர்க்குது பூமி... திட்னாலும் பொர்க்குறவன் சாமி"...

சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை

இகழ்வார்ப் பொறுத்தல் தலை. 



தீனா "கொரலு" 

வண்க்கம்ப்பா இன்னிக்கு இன்னா கர்த்துன்னா.....

ஒரு மன்சனுக்கு சாவ விட இன்னா பெர்ய தொயரம் இர்க்கும்? சாவு வந்த்யாலே சோகந்த்தான்பா... ஆன்யா அந்த சாவே எப்ய தெரிமா சந்தோஸ்மா மாறும்..!!

ரொம்ப கஸ்டத்துல இர்க்க ஒரு ஏய உன்னாண்ட வந்து ஒதவி கேக்க சொல்லோ அத செய்ய மிடியாத நெலயில வர்ற சாவு இர்க்கே அதான் நல்ல சந்தோஸ்மான சாவாம்..! 

சுர்க்கமா பிரியற மேறி சொன்னா... 

" ஒதவி செஞ்சு வாழு..மிடியாட்டி சந்தோஸ்மா சாவு"....

சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

சாதலின் இன்னாதது இல்லை இனிது அதூஉம்

ஈதல் இயையாக் கடை.


தீனா "கொரலு" 

வண்க்கம்ப்பா இன்னிக்கு இன்னா கர்த்துன்னா.....

ஒரு கார்யத்த செய்ய சொல்லோ நாம நெரியா நேர்த்துல இன்னா பண்றோம்? அப்பால பாத்துக்கிலாம்ன்னு தள்யு வச்சிர்றோம்... ஆனா அத்த எப்படி செய்ணம் தெரிமா!?

எத்த உட்னே செய்ண்மோ அத்த தள்யி போடாம அப்யே செய்ணும்,அத்தே நேர்த்துல அப்பால செஞ்சுக்கிலாம்ன்னு இர்க்குற வேலய லேட்டா பாக்குறது தான் கரீட்டாம்..!

சுர்க்கம்மா பிரியற மேறி சொன்னா...

 "லேட்டா செய்றத லேட்டஸ்ட்டா செய்யி"...பாஸ்ட்டா செய்றத ஜுட்டா செய்யி"..

அட !!2ஆயிரம் வர்சத்துக்கு மின்னாடியே சோக்கா சொன்ன சூப்பர் ஸ்டாருப்பா நம்ம "தல"


தூங்குக தூங்கிச் செயற்பால; தூங்கற்க

தூங்காது செய்யும் வினை.



தீனா "கொரலு" 

வண்க்கம்ப்பா இன்னிக்கு இன்னா கர்த்துன்னா.....

உனுக்கு இன்னா கஸ்டம் வந்த்யாலும், சோறு துண்றதுக்கே லாட்டரி அட்ச்சாலும் நீ இன்னா பண்யனும்ன்னா நாயமா உழ்ச்சிகினே இர்க்கணும்.! அப்டி உழ்ச்சி நீ  தெள்ஞ்ச தண்ணி மேறி கூழு காச்சி குட்ச்சாலும் அத்து வட பாய்சத்தோட விர்ந்து துண்ணத்துக்கு சமானம்..!

முயற்ச்சி எட்த்து வாய்றது தான் வாய்க்கை..! அப்ய தான் நீ வாயற வாய்க்கை மீனிங்கா இர்க்கும்.. சுர்க்கமா பிரியற மேறி சொன்னா..!

"உழ்ச்சு குடிக்கிற கூழு... உனுக்கு விர்ந்து சோறு...

சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

தெண்ணீர் அடுபுற்கை யாயினும் தாள் தந்தது

உண்ணலினூங்கினியது இல்.



தீனா "கொரலு" 

வண்க்கம்ப்பா இன்னிக்கு இன்னா கர்த்துன்னா.....

என்ய மேறி படிக்காத்ய ஆளுங்கோ அல்லாம் இன்னாடா இப்டி படிக்காம பூட்டமேன்னு ஒரியாவர்த வுட பெர்ய பெர்ய பட்ப்பு பட்ச்ச அறிவாளிங்களாண்ட போயி அவுங்க பட்ச்சத...
கேட்யு தெர்ஞ்சிக்கணும்... அப்டி கேட்யு தெர்ஞ்சிக்க சொல்லோ இன்னாகும்?

கய்யி காலு தளந்துயு போனவுனுக்கு கய்யில குச்சி இர்ந்தா எப்டி ஒதவியா இர்க்குமோ அத்தே மேறி நீ கேட்டு வாங்கிக்கின அறிவு உனுக்கு பிரியோஜன்மா இர்க்கும் சுர்க்கமா பிரியற மேறி சொன்னா..

நல்லத அறிவா கேளு... அது தான் ஊன்றுகோலு..

சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

கற்றலன் ஆயினும் கேட்க அஃதொருவற்கு

ஒற்கத்தின் ஊற்றாம் துணை.



தீனா "கொரலு" 

வண்க்கம்ப்பா இன்னிக்கு இன்னா கர்த்துன்னா.....

இந்தய கால்த்துல ஒன்யே ஒன்யமட்டும் மர்க்கவே கூடாத்து! ஒர்த்தரு உனக்கு மின்னால செஞ்ச ஒதவிய மர்க்காம இர்க்கறது நாயம் கடியாத்து. ஆனா ஒன்ய மட்டும் மர்ந்துட்ணும்!

அத்து இன்னான்னா நம்க்கு ஆராச்சும் கெட்டுது பண்யி இர்ந்தா அத்த அந்த செகுண்டே மர்ந்துட்ணும்..! அதான்பா நாயம்... சுர்க்கமா பிரியற மேறி சொன்னா..

"நல்லத மர்க்காதே... கெட்டத மர்ந்துடு"

சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"


நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது

அன்றே மறப்பது நன்று.



தீனா "கொரலு" 

வண்க்கம்ப்பா இன்னிக்கு இன்னா கர்த்துன்னா.....

பண்க்காரனா இர்க்கவனுக்கே பெர்ய சொத்து இன்னாவா இர்க்கும்? அத்த வுடு.. பொதுவா அல்லா மன்சாளுக்குமே பெர்ய சொத்து இன்னா தெரிமா?

பண்ஞ்சு போயி அட்க்க ஒட்க்கமா தன்மியா போற கொணம் இர்க்கே அதான் பெர்ய சொத்தாம்... நீ எம்மாம் துட்டு வச்சினு இர்ந்தாலும் பெர்ய சொத்து பணிவு தான்பா! சுர்க்கமா பிரியற மேறி சொன்னா...

 "பணிவா இர்க்கவன் தான்பா பண்க்காரன்"

சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

எல்லார்க்கும் நன்றாம் பணிதல்;அவருள்ளும்

செல்வர்க்கே செல்வம் தகைத்து.



தீனா "கொரலு" 

வண்க்கம்ப்பா இன்னிக்கு இன்னா கர்த்துன்னா.....

யாராவது கிட்ச்சத வச்சினு சந்தோஸ்படறமா? வோணும் வோணும்ன்னு ஆசப்பட்டுகினே இர்க்கோம்.. சரி மன்சனா பொர்ந்தயவன் ஆசப்பட்றத்து கரீட்டுதான்...ஆனா எதுக்யு ஆசப்பட்டாலும் ஒண்யே ஒன்யுக்கு மட்யும் நாம ஆசப்பட கூடாத்து.! அது இன்னான்னா....

மர்ந்து போய்கூட இன்னொர்த்தரு கய்யில இர்க்குற பொருளுக்கு ஆசப்பட கூடாத்து! அப்டி ஆசப்படாம வாயறது தான் பெர்ம! அப்ய தான் நீ கெலிச்சிகினே இர்ப்ப....மீறி நென்ச்சா உனுக்கு சன்யன் சட போட்துன்னு அர்த்தம்...சுர்க்கமா பிரியற மேறி சொன்னா..

"அட்த்தவனோட காசு....அதுக்கு ஆசப்பட்டா நீ குளோசு"

சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

இறல் ஈனும் எண்ணாது வெஃகின் விறல் ஈனும்

வேண்டாமை என்னுஞ் செருக்கு.




தீனா "கொரலு" 

வண்க்கம்ப்பா இன்னிக்கு இன்னா கர்த்துன்னா.....


எப்யுமே எத்தாவ்து பிரிச்சினை வந்த்யா அல்றி அட்ச்சி ஓடி எப்டியாது அத்துல இருந்து தப்ச்சினு போக பாக்குறோம்.. ஆனா அந்தய மேறி பிரிச்சினை வர் சொல்லோ இன்னா பண்றதுன்னு அத்து வர்றதுக்கு மின்னாடியே யோஸ்ச்சமா? இல்யே.! அதான்பா சொல்றேன்

பிரிச்சினை வர்றத மின்னாடியே தெர்ஞ்சுகினு அப்டி வந்த்யா அத்தால ஒன்யும் ஆகாம சேதார்மில்லாம எஸ்கேப் ஆக பிளான் பண்றான் பாருஅவன் தான் மன்சன்.! அவுனுக்கு பிரிச்சினியே வர்றாது வந்த்யாலும் அத்த சொம்மா ஊதி தள்ளிர்வான்...!

சுர்க்கமா பிரியற மேறி சொன்னா...

"வர்றத மின்னாடியே யோசி... பிரிச்சின ஒனுக்கு தூசி".....

சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லை

அதிர வருவதோர் நோய்.


தீனா "கொரலு" 

வண்க்கம்ப்பா இன்னிக்கு இன்னா கர்த்துன்னா.....

ஒல்கத்துல அல்லாரும் எப்டி எப்டியோ வாய்ந்துனு இர்க்காங்கோ! ஆனா நாம வாயற அந்தய வாய்க்கய்க்கு அர்த்தம் இர்க்தா? இல்ல வாய்க்கய எப்டி வாயணும் தெரிமா?

ஒல்கத்துல இப்டி அல்லாம் தான் வாயணும்ன்னு நேர்மியான நல்ல வயி நெரியா இர்க்குது அந்தய வயில நாயமா ரிஸ்பிட்டா கண்ணும் கர்த்துமா வாயணும் அப்டி நீ வாய சொல்லோ...

உன்ய வான்த்துல இர்க்குற கடவுளா நென்ச்சி அல்லாரும் உன்ய மதிச்சு கய் எட்த்து கும்பிட்டுக்குவாங்கோ..... சுர்க்கமா பிரியற மேறி சொன்னா... 

"நல்ல மன்சன் தான்பா கடவுளு"...

சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்

தெய்வத்துள் வைக்கப்படும்.


தீனா "கொரலு" 

வண்க்கம்ப்பா இன்னிக்கு இன்னா கர்த்துன்னா.....

நீ உயச்சு சேத்து வெச்ச துட்ட எப்டி பத்ரமா வெக்குறது? வூட்ல பொட்டி போட்யு மூடி! இல்ல உடிக்க முட்யாத லாக்கருல! அல்லாட்டி பேங்குல! இல்ல பினான்சு கம்பெனில! இல்ல சேர் மார்க்கிட்டு பாண்டு பத்திரம்! இங்ய அல்லாம் கெடியாத்து... பின்ன எங்ய?

துண்றதுக்கு சோறில்லாம உன் மூஞ்ச பாத்து கய்யேந்தி வர்றான் பாரு ஏய! அவுனுக்கு வவுறாற சோறு போட்டின்னா போதும்.! அந்தய புண்யம் தான் பின்னாடி கால்த்துக்கு நீ சேத்த சொத்து! அதான் எப்யுமே பத்ரமா இர்க்கும்! அத்த பெர்ய பிஸ்தா கூட்ய திர்ட முடியாது.!

சுர்க்கமா பிரியற மேறி சொன்னா... 

"பசிக்கு போடு சோறு.. வாய்த்தும் உன்ன ஊரு.."

சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்

பெற்றான் பொருள்வைப் புழி.



தீனா "கொரலு"

வண்க்கம்ப்பா என் போட்டோவ இந்தய மூஞ்சி புக்குல போட்ட இன்னான்னு நம்ம ஆர்முகத்தாண்ட ஒர்யே சண்ட... கட்சில நம்ப போட்டாவ போட்ய ஒத்துகிட்டாரு.. மொத மொத என் மூஞ்சியும் இங்ய வர்து..! ஒரே குஜாலா இர்க்குப்பா... 

செரி.... இன்னிக்கு இன்னா கர்த்துன்னா....

நாம பேசிகினு இர்க்க பேச்ச எப்டி பேஸ்ணும் தெரிமா?அல்லாத்துக்கும் நல்லுது நட்க்குறா மேறி நால்யு நல்ய வார்த்த பேஸ்ணும்.!அத்துஅவுங்குளுக்கு பிரியோஜன்மா இர்க்கணும்..

அத்த வுட்டுட்டு தேவயே இல்யாம கெட்டுதயே பேசினு இர்ந்தா நாம பேஸ்றது ஆருக்குமே பிரியோஜனம் இல்யாம பூடும்... சுர்க்கமா பிரியற மேறி சொன்னா...

நல்யதயே பேசு... நாற வாய மூடு... 

சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

சொல்லுக சொல்லின் பயனுடைய சொல்லற்க

சொல்லின் பயனிலாச் சொல்.


தீனா "கொரலு"

வண்க்கம்ப்பா இன்னிக்கு இன்னா கர்த்துன்னா....

நாம அல்லாரும் நமக்கு தெர்ஞ்சவங்களுக்கு ஏதாவது ஒன்யுன்னா ரைட்டோ ராங்கோ அவுங்குளுக்கு சப்போட் பண்ணினு இர்ப்போம் கரீட்டா!ஆனா இந்த ஒல்கத்துல பொர்ந்தவங்கோ அல்லாம் எப்டி இர்க்கணும்ன்னா....

நம்ம தோஸ்த்தா இர்ந்தாலும், விரோத்தியா இர்ந்தாலும் இல்ல மூஞ்சே தெர்யாத புது ஆளா இர்ந்தாலும் நாயம் எந்தய பக்கத்துல இர்க்குதோ அந்தய பக்கம் தான் இர்க்கணும்.. தெராசு தட்டுல நெடுவுல நிக்கிற முள்ளு கணக்கா நாயத்து பக்கம் தான் நிக்கிணும்... அதான் நல்து

சுர்க்கமா பிரியற மேறி சொன்னா... "நாயமா நில்லு... அதான் தில்லு..."

சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

தகுதி என ஒன்று நன்றே பகுதியால்

பாற்பட்டு ஒழுகப் பெறின்.


தீனா "கொரலு"...

வண்க்கம்ப்பா இன்னிக்கு இன்னா கர்த்துன்னா...

இந்தய கால்த்துல நான் தான் பெர்ய ஜாதி என் ஜாதி தான் பெர்மயானத்து அப்டின்னு ஜாதி பெர்ம பேஸ்ற அப்பாடக்கர நாம பாத்தினு வர்றோம்... கரீட்டா! 

ஆனா மெய்யாலுமே உசந்த பெர்ய ஜாதி இன்னா தெர்யுமா? தாழ்ந்த ஜாதில பொர்ந்தாலும் பெர்ய பெர்ய பட்ப்பு பட்ச்சவங்கோ தான் பெர்ய ஜாதி... 

ஒன்யுமே படிக்காம தற்குறியா இர்க்கவன் பெர்ய ஜாதில பொர்ந்திருந்தாலும் அவன் கீழ் ஜாதி தான்.. சுர்க்கமா பிரியற மேறி சொன்னா..

பட்ச்சவன் தான் மேல் ஜாதி...

சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

மேல்பிறந்தார் ஆயினும் கல்லாதார் 
கீழ்ப்பிறந்தும்

கற்றார் அனைத்திலர் பாடு.


தீனா "கொரலு"

வண்க்கம்ப்பா இன்னிக்கு இன்னா கர்த்துன்னா....

பங்ளா கணக்கா வூடு, கட்டி கட்டியா தங்கம்,பொட்டி பொட்டியா துட்டு,கப்பலு மேறி காரு அல்லாம் இர்ந்தாலும் இத்தெல்லாம் எப்ய வோணா கய்ய வுட்டு போய்டும். ஆனா...

மன்சனா பொர்ந்தவனுக்கு எப்யுமே அயிஞ்சு போகாத்த சொத்து இன்னா தெர்யுமா? அவன் பட்ச்ச படிப்பு தான்! அது தான் ஒல்கத்துல நெல்யானத்து,எப்யுமே அயியாயது...

சுர்க்கமா பிரியற மேறி சொன்னா... துட்டு செலவாய்டும்..அறிவு நெலயாய்டும்...

சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு

மாடல்ல மற்றை யவை.


தீனா "கொரலு"

வண்க்கம்ப்பா இன்னிக்கு இன்னா கர்த்துன்னா....

கோவிலாண்ட இர்க்குற கொளத்த பாத்துர்க்கியா நீ! அத்துல மெதந்துனு இர்க்குமே பூவுங்கோ அந்த மேறி தான் மன்சனோட வாய்க்கயும்..!பிரியலையா? நல்யா கேட்டுக்க.! 

கொள்த்துல இர்க்குற தண்ணி எவ்ளோ உயர்மா இர்க்கோ அதே மட்யத்துல தான் பூவுங்கோ மெதக்கும்,,தண்ணி மேல்ய ஏறுனா பூவும் ஏறும் கீய இறங்குனா கூடவே இறங்கும்..

அத்தே மேறி ஒன் மன்சுல நெனய்க்குற நல்யத வுடாப்புடியா நென்ச்சுகினே இரு.! கஸ்டமோ சந்தோஸ்மோ எப்யுமே அந்தய நென்ப்பு கூட்யவே இர்ந்தா நீ வாய்க்கயில கெலிக்கலாம்.!

சுர்க்கமா பிரியற மேறி சொன்னா...   "எண்ணம் போல வாய்க்கை"

சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"


வெள்ளத்தனைய மலர் நீட்டம்; மாந்தர் தம்

உள்ளத்தனையது உயர்வு.


தீனா "கொரலு"

வண்க்கம்ப்பா இன்னிக்கு இன்னா கர்த்துன்னா....

ஒல்கத்திலியே படா நல்லது இன்னா? மன்சு நெர்யா சந்தோஸ்த்தோட்ய கஸ்டப்பட்றோ ஜன்ங்குளுக்கு துட்ட அள்ளி கொடுக்குறது அதானே... ம்ஹூம்..அத்தில்லபா..!

காஸ்,பணம்,துட்டு,மணி இல்லின்னாலும் மூஞ்சிய குஜாலா வச்சிகினு சிர்ச்சிக்கினே நாலு நல்ய வார்த்த பேஸ்ற பாரு அதான் நல்து....நீ செய்ற தர்மத்த விட இத்துதான் பெர்சு...

சுர்க்கமா பிரியற மேறி சொன்னா 

"லட்டு மேறி பேஸ்றது துட்ட விட பெர்சு" ...

சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"


அகன் அமர்ந்து ஈதலின் நன்றே முகன் அமர்ந்து

இன்சொலன் ஆகப் பெறின்.



தீனா "கொரலு"

வண்க்கம்ப்பா இன்னிக்கு இன்னா கர்த்துன்னா....

கெட்டது, கேப்மாரித்தனம் பண்றவங்கோ நல்யா கேட்டுக்கோங்கோ.. நீங்ய செஞ்ச அல்லா  கேடும் எங்கியும் போவாத்து...அத்தெல்லாம் ஒன்யவே பாலோ பண்ணும்...எப்டி தெர்யுமா? 

நீ நட்ந்து போவ சொல்லோ கூடியே வர்து பாரு ஒன் நெயலு அத்தே மேறி உனுக்கு அடியிலியே பாலோ பண்ணினு கூடவே இர்க்குமாம்... சுர்க்கமா பிரியற மேறி சொன்னா..

கெட்டது செஞ்சிவனுக்கு கெட்டது தான் முடிவு.... 

சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை

வீயாது அடி உறைந்தற்று.



தீனா "கொரலு"

வண்க்கம்ப்பா இன்னிக்கு இன்னா கர்த்துன்னா....

ஒலகத்திலியே பெர்ய பண்க்காரன் ஆரு?பெர்ய பெர்ய பட்ப்பு பட்ச்சி அறிவாளியா இர்க்குறபரு தான்!அவராண்ட ஒன்யுமே இல்லின்னா கூட அவரு அறிவ்வு அல்லாத்தியும் குடுக்கும்...

இத்தே அறிவ்வே இல்லாத்ய ஒர்த்தரு எம்மா துட்டு வச்சினு இர்ந்தாலும் அல்லா வசதி இர்ந்தாலும் அவரு ஒன்யுமே இல்லாதவரு.! அறிவ்வு இல்லாம அல்லாம் இருந்தா ஏய தான். 

சுர்க்கமா பிரியற மேறி சொன்னா... அறிவ்வா இர்கவன் தான் மன்சால பணக்காரன்..

சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

அறிவுடையார் எல்லாம் உடையார்;அறிவிலார்

என்னுடைய ரேனும் இலர்.



தீனா "கொரலு"

வண்க்கம்ப்பா இன்னிகு இன்னா கர்த்துன்னா....

நீ மர்ந்து போய் கூட செய்கூடாத்த மேட்டரு இன்னா தெர்யுமா? ஒர்த்தன் கெட்யு போவுணும்ன்னு நென்ச்சு அவுனுக்கு குயி பறிக்குற வேல தான்..அப்டி நீ செய்ய சொல்லோ..

ஒல்கத்துல நாயம்ன்னு ஒன்யு இர்க்குதே அத்து இன்னா நெனிக்கும்ன்னா... அவுனுக்கு நீ இன்னா நென்ச்சியோ அத்தே மேறி உனுக்கும் கெட்யுது வர்ணும்ன்னு நெனிக்குமாம்.. 

சுர்க்கமா பிரியற மேறி சொன்னா... "கெட்டுது நென்ச்சா... கெட்டயிஞ்சு போவ"... 

சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

மறந்தும் பிறன்கேடு சூழற்க சுழின்

அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.



தீனா "கொரலு" 

வண்க்கம்ப்பா இன்னிக்கு இன்னா கர்த்துன்ன்னா....

என்ய தான் நாம பத்ரமா வாய்ந்தாலும் எத்துவுமே நம்ம கய்ல இல்ல, ஒன்ய நீயே பத்ரமா பாத்துக்க நீ இன்னா செய்ணம் தெரிமா? கோவம் வர் சொல்லோ அத்த வராம அட்க்கிக்கோ அப்டி அட்க்க தெர்லின்னாலும் அட்க்க கத்துக்கோ.. இல்லாங்காட்டி இன்னா ஆகும்?

கோவம் வந்த்யா நாமஅல்லாரும் மன்சனாவே இர்க்கறதில்ல அத்த அட்க்கணும் அப்டி நீ அத்த அட்க்கலேன்னா அந்த்ய கோவமே ஒன்ய குளோஸ் பண்ணிரும் சுர்க்கமா பிரியற மேறி சொன்னா...  காண்ட அட்க்கிக்கோ...பல்லாண்டு வாய்ந்துக்கோ...

சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

தன்னைத்தான் காக்கின் சினம் காக்க;காவாக்கால்

தன்னையே கொல்லும் சினம்.


தீனா கொரலு....

வண்க்கம்ப்பா... இன்னிக்கு இன்னா கர்த்துன்னா..

உனுக்கு எப்யுமே குட்ச்சல் கொட்த்துனுகிற பிரிச்சின நெரியா இர்க்கும், அத்துல பெர்சு எத்துன்னு உன்க்கு தெர்யுமா? ஆரு இன்னான்னு புர்யாம இன்னா செஞ்சுனுகிறான்னு தெர்யாம நல்லவுனா பொறம்போக்கா அப்டி எத்யுமே கண்டுக்காம ஒர்த்தன நம்புறதும்....

நல்லா தெர்ஞ்சவரு, நல்து கெட்து புர்ஞ்சவரு அப்டின்னு மின்னாலியே தெர்ஞ்ச நல்ய மன்சன் ஒர்த்தரு மேல டவுட்டாக்குறத்தும் பெர்ய தப்பு.. இத்து ரெண்டியுமே நீ செஞ்சா ஓன் வாய்க்கயில நீ பட்ற கஸ்டம் கொர்யவே கொர்யாது...சுர்க்கமா பிரியற மேறி சொன்னா...

சொம்மா டவுட் ஆன வாய்க்க அவுட் ஆவும்....

சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"...

தேரான் தெளிவும் தெளிந்தான் காண் ஐயுறவும்

தீரா இடும்பை தரும்.


தீனா " கொரலு" 

வண்க்கம்ப்பா இன்னிக்கு நம்ம தல பொர்ந்த நாளு... (திருவள்ளுவர் தினம்)ஒர் மாசோம் களிச்சி வந்தயாலும் நம்ம தல பொர்ந்த நாளிக்கு வந்தயேன் பாரு அத்து..இன்னிக்கு இன்னா கர்த்துன்னா...

மன்சனா பொர்ந்தவன் இன்னா மேறி பாவம் செஞ்சாலும் செய்கூடாத பாவம் இன்னா தெர்யுமா பெர்ய பெர்ய அரிவாளிங்கோ.. பெர்ய மன்சங்கோ அல்லாத்தியும் மதிக்யாம இர்க்குறது தான்...! அத்த செய்வே கூடாத்தாம்... 

உன்னிய பெத்து போட்ட மவராசி பசியால துடிச்சினுகிறத கூட நீ பாக்லாம்...! ஆன்யா பெர்ய  மன்சங்கோ வாய்ல நீ வுயவே கூடாத்யாம்.. அவுங்களுக்கு புடிக்காத்ய கலீஜான எத்தயும் நீ செய்வே கூடாத்து... சுர்க்கமா பிரியற மேறி சொன்னா...

பெத்த தாயி பசிச்சு கெட்ந்தாலும்.... பெர்ய மன்சன்கிட்ட வம்பு பண்யாத... 

சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை.

No comments:

Post a Comment