அயிலுக் குப்பம் ஆண்டாளு வழங்கும்......
திருப்பாவை விளக்கம்...
மார்கழி 30 ஆம் நாள் பாடல்...
வங்கக் கடல்கடைந்த மாதவனை கேசவனை
திங்கள் திருமுகத்து சேய்இழையார் சென்றுஇறைஞ்சி
அங்கப் பறைகொண்ட ஆற்றை அணிபுதுவைப்
பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான்
கோதைசொன்ன சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
இங்குஇப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைதோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள்பெற்று இன்புறுவர் எம்பாவாய்.
ஆண்டாளு உரை :
வங்ய கடல கடஞ்ச்சு தேவுருக்கு அம்தம் வாங்யு கொட்த்த மாதவரே! கேசின்ற கேடிய அயிச்சு எங்ய அல்லாத்தியும் காத்த கேஸ்வரே..! இப்டி அல்லா பெர்மயும் இர்க்குற பெர்மாளே! ரவுண்டா இர்க்குற முயு நெலா மேறி அயகான மூஞ்சும், அயகான நெகயும்,
அல்லாம் போட்டுகின பொண்ணுங்க அல்லாரும் உன்னிய கும்பிட்டுகினு ஆயரு பாடியில பற வாங்கிக்கினாங்கோ! இந்தய கதிய ஶ்ரீவில்லிபுத்தூர்ல பொர்ந்தவளும் பஸ்மையான தாமிரப்பூவால மாலிய கட்டி மாட்டிக்கின பட்டரோட அர்மை மவளும் ஆன்ய கோதயே...!
அந்தய கோத சொல்லி வச்சா மேறி நாங்ய அல்லாரும் கூடி கும்பிட்டுகின மொற தான் இந்தய திருப்பாவை! இதுல உள்ள அல்லா முப்யது பாட்டும் நியாயமா நேரம் தவுறாம மொறப்படி பாடுனா, அவுங்களுக்கு நாலு பெர்ய மல மேறி தோளும் செவுப்பான கண்ணும், அயகான மூஞ்சும்...
அயியாத துட்டும் கெட்ச்சி.... திருப்பதி பெர்மாளு கண்க்கா உன் அருள எங்ய அல்லாத்துக்கும் கொட்த்து அல்லா இட்த்துலயும் சந்தோஸ்மா இர்ந்து ஒயருணும். அக்காங்பா...
வர்ட்டாபா.... பொங்கலு வாய்த்து... அல்லாருக்கும்....
No comments:
Post a Comment