Wednesday 1 January 2014

உந்து மதகளிகற்றன்...

அயிலுக் குப்பம் ஆண்டாளு வழங்கும்......

 திருப்பாவை விளக்கம்....

 ( அறிமுகம்.....)

வண்க்கம் கண்ணுங்களா! நானும் இந்த மாசந்தான் பொர்ந்தனாமாம் அத்துனால்தான் எங்க நைனா என்க்கு ஆண்டாளுன்னு பேர் வச்சுதாம்..அப்பால நான் ஒன்யும்பெர்ய பெர்ய பட்ப்பு பட்ச்சதில்ல எத்தும் ராங்கா இர்ந்தா ஒன்யும் கண்டுக்காதிங்கோ....


மார்கழி 18 ஆம் நாள் பாடல்...



உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்

நந்தகோ பாலன் மருமகளே நப்பின்னாய்

கந்தம் கமழும் குழலி கடைதிறவாய்

வந்துஎங்கும் கோழி அழைத்தனகாண் மாதவிப்

பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்

பந்துஆர் விரலிஉன் மைத்துனன் பேர்பாடச்

செந்தா மரைக்கையால் சீரார் வளைஒலிப்ப

வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.



ஆண்டாளு உரை : 


மதொம் புட்ச்ச யானிங்க்கோ கண்க்கா இர்க்குற கண்ணனை வச்சுனு இர்க்கவரு; ஆராலியும் கெலிக்க மிடியாத இஸ்ட் ராங்கானவரு; அப்டியாப்பட்ட நந்த கோபரோட்ய மருமக பொண்ணே ! நப்பின்ன கண்ணே! கமகமன்னு மண்க்குற அயகான தலமுடி உள்ள பொண்ணே ! கதவ தொற தங்கம்...

கோயிங்க வந்து அல்லா இட்த்திலும் கூவினு இர்க்கு; குர்கத்தி கொடிங்க பந்தலு கணக்கா படந்திருக்கோ அத்துக்குள்ள தங்கினு இர்க்குற குயுலுங்கோ அல்லாம் கூட்டமா கூவுதுங்கோ;கைல பந்து கச்சிதமா பொர்ந்துறா மேறி அயகான வெரலுங்க உள்ள பொண்ணே...

ஓன் மன்சுக்கு புட்ச்சவரு பேர நாங்க அல்லாம் புகய்ந்து பாடினு இருக்க, செந்தாமிரப்பூ கணக்கா இர்க்குற உன் அயகான கய்ல இர்க்குற வளயலுங்கோ குலுங்க சந்தோஸ்மா வந்து கதவொ தொற ராஜாத்தி...


எம்மா அயகா சொல்லிக்கிராங்க இல்ல... நாளிக்கு பாக்கலாம்...வர்ட்டா...






 

No comments:

Post a Comment