Friday 24 January 2014

கப்ஸா பேப்பர்

     கப்ஸா செய்திகள்...

(மாலையில் வரும் ஓசி பேப்பர்)


ஒபாமா - கேப்டன் சந்திப்பு... மலேசியாவில் கேப்டன் ஒபாமாவை சந்தித்த திடுக்கிடும் சேதி இப்போது வெளியாகி உள்ளது... அதி ரகசியமாக நடந்த இச் சந்திப்பில் மிச்சேல் ஓபாமாவும் பிரேமலதாவும் சந்தித்ததும் அரசியல் வட்டாரங்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. அமெரிக்காவின் எதிர்காலம் பற்றி 20 நிமிடம் கேப்டனிடம் ஆலோசித்து அறிவுரை பெற்றார் ஒபாமா என கேப்டன் டிவியிலேயே அறிவிக்கப்பட்டது. ரகசியமாக நேற்று நாடு திரும்பிய ஒபாமா வரும் தேர்தலில் மிச்சேல் அல்லது அவரது அண்ணனை தேர்தலில் நிறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது...அமெரிக்க மேயர் தேர்தலில் இவ்வாண்டு தேமுதிக போட்டியிடும் என்று வாஷிங்டன் வேஸ்ட் பத்திரிக்கை ஆருடம் தெரிவித்துள்ளது... மேலும் இனி அமெரிக்காவில் பன், ரொட்டி விற்க தடை வரும் எனவும் அப்பத்திரிக்கை தெரிவித்துள்ளது.


ஆம் ஆத்மியில் அண்ணன்.... இன்று நீக்கப்பட்ட அண்ணன் திடீரென ஆம் ஆத்மி முக்கிய நபர் ஒருவரை சந்தித்த செய்தி சற்று முன் வெளியானது.. டெல்லியில் குப்பை கொட்ட முடியாதவன் என்று அவரை ஏளனம் செய்தவர்களுக்கு விளக்குமாறு இருக்குமிடத்தில் குப்பை இருக்காது என சூசகமாக பதிலளித்தார் அண்ணன்... இந்திய உரத்துறையையே கட்டிக்காத்த எனக்கு உரமின்றி போகாது என்ற போது தமிழ் தெரியாத ஆம் ஆத்மி பிரமுகரே குலுங்கி அழுதுவிட்டார்...விரைவில் கெஜ்ரிவாலை சந்தித்த பின்பு தமிழகத்தின் ஆம் ஆத்மி தலைவராக அண்ணன் தேர்வு செய்யப்படுவார் என அவரது ஆதரவாளர்கள் கூறினார்கள்..இதற்கிடையே அண்ணனை ஆம் ஆத்மியில் சேர்க்க அன்னா ஹசாரே எதிர்ப்பு தெரிவித்து இருக்கிற செய்தியை கேட்ட அவர்கள் இந்த வயதானவர்களால் தான் பிரச்சினையே என முணுமுணுக்க அவர்களை அப்படி பேசக் கூடாது என்று தடுத்தார் அண்ணன்... அண்ணனின் இந்த அமைதியான அணுகுமுறை அனைவரையும் வியப்பிலாழ்த்தியது...

விக்டோரியா மகாராணியை செருப்பால் அடிப்பேன்.... வட்ட செயலாளரின் ஒன்று விட்ட தம்பியின் தூரத்து உறவினர் ஆவேசம்.!
இது குறித்து அவர் நமது செய்தியாளரிடம் குறிப்பிடுகையில் ஆங்கிலேயர்கள் நம் நாட்டை கொள்ளையடித்து விட்டார்கள்... கோவில் சொத்துகளை அபகரித்து விட்டார்கள் அந்நிய மதத்தை நம் நாட்டில் வேரூன்ற செய்தார்கள்.. ஆகவே இந்த முடிவு எனவும் விரைவில் மெளண்ட்பேட்டன்,ரிப்பன், காரன் வாலிஸ், கர்சன்,இர்வின்,வெல்லெஸ்லி பிரபு மற்றும் ராபர்ட் க்ளைவ் ஆகியோரை செருப்பால் அடிக்க போவதாகவும் ஆவேசமாக குறிப்பிட்டார்... இந்த கால் சேவைக்கு இந்தியா முழுவதும் தொண்டர்களிடம் இருந்து செருப்பு சேகரிக்கப்படும் என்றும் அதற்கு ஒரு இயக்கம் தொடங்கப்படும் என்றும் தெரிவித்தார்..

ஊட்டி அதிகாரிகளுக்கு புலி வாழ்த்து... நேற்று சுட்டுக் கொல்லப்பட்ட பெண் புலியின் கணவனான ஆண் புலி...ஊட்டி அதிகாரிகளுக்கு வாழ்த்து செய்தி அனுப்பி உள்ளது.. என் உயிரை எடுத்துக் கொண்டிருந்தவளை எப்படி அடக்குவது என தவித்த எனக்கு அவள் சுட்டுக் கொல்லப்பட்ட சேதி பெரு மகிழ்ச்சியை தந்தது எனவும்..மனிதர்களை கொன்ற அவள் மிருகமே அல்ல! வெறி பிடித்த மனிதன்!!  காட்டுக்கு அடங்காத இது போல அடங்கா பிடாரிகள் அழிக்கப்பட்டது தான் சரி....இதற்கு நன்றிக் கடனாய் இனி நான் புல்லை மட்டுமே சாப்பிடுவேன் எனவும் உங்கள் எல்லைக்கு வரவே மாட்டேன் எனவும் உறுதிமொழி அளிப்பதாக அச் செய்தியில் கூறி இருந்தது..விரைவில் அடக்க ஒடுக்கமான மான்களை மட்டுமே வேட்டையாடும் குடும்ப புலி ஒன்றை மறுமணம் செய்யும் தகவலையும் அது கூறி இருந்தது..


No comments:

Post a Comment