Friday 3 January 2014

முப்பத்து மூவர்....

அயிலுக் குப்பம் ஆண்டாளு வழங்கும்......

 திருப்பாவை விளக்கம்....

 ( அறிமுகம்.....)

வண்க்கம் கண்ணுங்களா! நானும் இந்த மாசந்தான் பொர்ந்தனாமாம் அத்துனால்தான் எங்க நைனா என்க்கு ஆண்டாளுன்னு பேர் வச்சுதாம்..அப்பால நான் ஒன்யும்பெர்ய பெர்ய பட்ப்பு பட்ச்சதில்ல எத்தும் ராங்கா இர்ந்தா ஒன்யும் கண்டுக்காதிங்கோ....


மார்கழி 20 ஆம் நாள் பாடல்...


முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று

கப்பம் தவிர்க்கும் கலியே துயில்எழாய்

செப்பம் உடையாய் திறல்உடையாய் செற்றார்க்கு

வெப்பம் கொடுக்கும் விமலா துயில்எழாய்

செப்பென்ன மென்முலைச் செவ்வாய்ச் சிறுமருங்குல்

நப்பின்னை நங்காய் திருவே துயில்எழாய்

உக்கமும் தட்டொளியும் தந்துஉன் மணாளனை

இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய்.


ஆண்டாளு உரை:

தான் ஒண்டியா போயி வான்த்துல இர்க்குற அல்லா தேவரியும் ஆரும் மெர்சலாகாதிங்கோ 

நான் இர்க்கேன் அப்டின்னு தில்லா சொல்லிக்கின வீரன் நீ! எயுந்துரு கண்ணு! சமாத்தான்மா 

போறவன் நீ! படா தில்லானவன் நீ! உன் கைல ஆராச்சும் ராங் காட்னா அவங்களுக்கு 

ஜொரம் வர் சொல்லோ பாக்குறவன் நீ! படுக்கெல இர்ந்து எய்ந்திரு ராஜா! 

செப்பு கல்க்காத சுத்த தங்கொம் கண்க்கா பஞ்சு மேறி மார் ரெண்டயும், வெத்தலி போட்டு 

செவந்தா மேறி செவ்ப்பா வாயும், சின்னதா இடுப்பும் அயகா வச்சினு இர்க்குற நப்பின்ன பொண்ணே!

எங்க வூட்டு மவாலச்சுமியே! எயுந்துரு கண்ணு ! விர்தம் இர்க்க சொல்லோ வச்சினு இர்க்க 

விசிறி கண்ணாடி அல்லாம் எட்தாந்து உன்ய கண்ணாலம் கட்டிக்க போற கண்ணனையும்

எங்களியும் இப்பியே குளிக்க உட்று....

 
 எம்மா அயகா சொல்லிக்கிராங்க இல்ல... நாளிக்கு பாக்கலாம் வர்ட்டா....






No comments:

Post a Comment