அயிலுக் குப்பம் ஆண்டாளு வழங்கும்......
திருப்பாவை விளக்கம்...
மார்கழி 25 ஆம் நாள் பாடல்...
ஒருத்தி மகனாய்ப் பிறந்துஓர் இரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்
தரிக்கிலான் ஆகித்தான் தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே உன்னை
அருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.
ஆண்டாளு உரை:
உன்யெ கொஞ்சயம் கூட புடிக்காத்ய ஒரு மன்சன் அவன் பேரு கம்சன்!அவுனால ஜெயில்ல இர்ந்தா ஒர்த்தி... அந்தய தேவ்கி மவனா பொர்ந்தவரே! பொர்ந்த அதே நாள்ல தண்ணி வெள்ளமா வந்த்ய யமுன ஆத்த தாண்டி போயி ஆயருபாடில இர்க்குற இன்னொர்த்தி...அந்தய எசோதா அம்மா மவனா ஒள்ஞ்சு வளந்துவரே...
இத்தெல்லாம் தெர்ஞ்சிக்கினு பொறாம புட்ச்சு கெட்டதியே நென்ச்ச கம்சன பொடிப் பொட்யா ஆக்கி அவுனோட வவுத்துல பத்தி எர்யுற நெர்ப்பு கண்க்கா நின்னவரே! ஒசரமா ஒசந்து நிக்குற ஒட்ம்பு வச்சினுக்கிற திர்மாலே! உன்ய அன்பா நென்ச்சுகினு வந்துகிறோம்!
நாங்ய இன்னாத்த கேக்குறமோ அத்த பற அட்ச்சு கேக்குறோம்! உன்யோட வீர்த்தயும் செல்வித்தயும் நாங்ய புகய்ந்து பாடுவோம்..நாங்கோ எத்தயும் வொரி பண்ணிக்யாம இர்ந்து ஜாலியா இர்ப்போம் கண்ணா..
எம்மா அயகா சொல்லிக்கிராங்க இல்ல... நாளிக்கு பாக்கலாம்... வர்ட்டா....
No comments:
Post a Comment