Tuesday 15 September 2015

மினிலா கிரகம்

#மினிலா_கிரகம்

கி.பி.2020... பூமியில் இருந்து கிளம்பிய கலாம் 2020 என்னும் அந்த இந்திய விண்கலம் மினிலா கிரகத்தை இன்னும் 30 நிமிடங்களில் அடையும் என மானிட்டர் சொன்னது அதை செலுத்திக் கொண்டிருந்த சாதனா சவுத்ரி தன்னுடன் பயணித்த சகவீரனான ஆகாஷை நோக்கி புன்னகைத்தாள்.

சாதனா சவுத்ரி பெங்காலைச் சேர்ந்தவள் ஆகாஷ் சென்னையைச் சேர்ந்தவன் இந்த கலாம் 2020 கலத்தில் பிரயாணிக்க இந்தியா முழுவதும் 500இளம் விஞ்ஞானிகள் தேர்வு செய்யப்பட்டு அதில் இறுதிக்கட்டத்தில் 50 பேராக மாறி.. அதிலும் சிறந்த 5 பேரில் 2 பேராக தேர்ந்தெடுக்கபட்டனர்.

இவர்கள் செல்லும் மினிலா கிரகம் 2016 ஆம் ஆண்டு தான் கண்டுபிடிக்கப் பட்டது.. நிலாவுக்கும் பூமிக்கும் இடையில் மறைவாக ஒதுங்கியிருந்த இக்குட்டி கிரகத்தை கண்டறிந்தவனே ஆகாஷ் தான்.. அவன் தான் இதற்கு குட்டிநிலா எனப் பெயர் வரும்படி மினிலா எனப் பெயரிட்டான்.

சூரியவெளியில் பூமி தோன்றிய போது பூமியின் ஒரு பகுதியாக வெகு தூரத்தில் தூக்கியடிக்கப்பட்ட இக்கிரகம் எத்தனையோ லட்சம் ஆண்டுகள் கடந்து மீண்டும் தாய்க்கிரகமான பூமியைத்தேடி தன் பாதையை மாற்றி வந்தது..புறாக்கள் தங்கள் இருப்பிடம் தேடிவந்ததைப் போல இருந்தது.

இந்தக்கிரகத்தில் மனிதர்கள் இருப்பதும் ஆக்சிஜன் மற்றும் நீர் இருப்பதும் ஆராய்ச்சியில் தெரிய வர இக்கிரகத்தை தொடர்பு கொண்டபோது அங்கிருந்து பூமியின் மொழியிலேயே அழைப்பு வந்தது.. விஞ்ஞானிகள் அதிசயமடைந்தார்கள்.. உடனடியாக இதற்கு திட்டம் வகுத்தார்கள்.

அடுத்த3 ஆண்டுகளில் இந்த விண்கலம் தயாரிக்கப்பட்டு இவர்கள் இருவரும் இப்போது வெற்றிகரமாக பயணித்து இலக்கை நெருங்கியிருக்கிறார்கள்.. எல்லாம் தயார் தானே ஆகாஷ் என்றாள் சாதனா.. பாதுகாப்பு கவசங்களை பொருத்திக் கொண்டாய் தானே இறங்கும் போது ஜெர்க் இருக்கலாம்.

ஆக்சிஜன் அங்கு இருந்தாலும் ஆக்சிஜன் மாஸ்க்கும் தயாராகவுள்ளது அல்லவா.? கட்டைவிரலை உயர்த்தினான் ஆகாஷ்.. எல்லாம் தயார் சாது.. நான் லேண்ட் ஆனதும் இறங்குகிறேன் சரியாக 90 வினாடிகள் கழித்து நீ இறங்கவேண்டும் ஓ.கேவா.. நம் பாடங்கள் நன்றாக நினைவிலிருக்கிறது ஆகாஷ் என்றாள்

இன்னும் எவ்வளவு நேரம் சாது,? 5 நிமிடங்கள் என்றவள் ஹேய்ய்ய்ய் லுக் தேர் என்று அலறினாள் அதில் ஆச்சரியம் எதிரொலித்தது.. மெல்ல மானிட்டரைப் பார்த்த ஆகாஷ் அதை விட வியப்படைந்தான்.. ஆம் கீழே சென்னை மாநகரம் தெரிந்தது.. இது எப்படி அதிர்ச்சியில் உறைந்தார்கள்.

அதே ரிப்பன் பில்டிங், சென்ட்ரல் ஸ்டேஷன், வள்ளுவர் கோட்டம், LIC பில்டிங், அட மெரீனா கடற்கரை, அண்ணா & எம்.ஜி.ஆர். சமாதி ஒன்றும் விளங்கவில்லை நேராக அவர்கள் கலம் இறங்கியது மெரினா பீச்சில்.. பூமியில் கண்ட்ரோல் அறைக்கு இந்தத் தகவல் போனது.

அவர்களும் பரப்பானார்கள்.. ஜாக்கிரதை எதுவும் விர்ச்சுவல் எஃபக்டாக இருக்கும்.. அங்கு நம் மொழியில் பதில் வந்த போது சிறிது சந்தேகம் இருந்தது இது இந்தியாவை பிடிக்காத ஏதோ ஒரு நாட்டின் சதியாகக் கூட இருக்கலாம்.. பாதுகாப்பு ஆயுதங்களை தயாராக வையுங்கள்.

ஆகாஷ் மட்டுமே இறங்க அனுமதி சாதனா கலத்திலேயே இருக்கட்டும். அடுத்தடுத்து கட்டளைகள் வந்தன. சாதனா கவலையுடன் கேட்டாள் பேசாமல் திரும்பிவிடலாமா ஆகாஷ்.. எனக்கு பயமாக இருக்கிறது என்றாள் ச்சீ என்ன இது சாதனா நம்தேசத்தின் கோடிக்கணக்கான ரூபாய்கள்..

இந்த பயணத்திற்கு செலவழிக்கப்பட்டுள்ளது இதில் மரணம் வந்தாலும் அது பற்றி கவலையில்லை இதுவும் ராணுவசேவை போலத்தான்.. அய்யா கலாம் பேரில் ஆராய்ச்சிக்கு வந்துவிட்டு பின் வாங்குவதா! கவலைப்படாதே நான் போய் வருகிறேன் என்றான். ஆல் தி பெஸ்ட் &கேர் ஆகாஷ் லவ் யூ ஸோ மச் டியர்.

கையசைத்துவிட்டு கலத்திலிருந்து நீண்ட ஏணியில் இறங்கினான் பீச் மணலில் இறங்கினான்.. டேய் ஷங்கர் பட ஷூட்டிங்கு டோய்ன்னு சிறுவர்கள் குரல்.! அட தமிழ்..! வியந்தான் இன்னா சாரு சுண்டல் துண்றியா தேங்க்கா மாங்கா பட்டாணி போட்டது ஜ்ஜுடா இருக்கு என்றான் சுண்டல்காரன்.

ஒரு நிமிடம் திகைத்தான் எல்லோரும் நடக்கிறார்கள் புவி ஈர்ப்பு விசை இருக்கிறது சுவாசிக்கிறார்கள் தமிழ் பேசுகிறார்கள் இத்தனையும் விண்வெளியில் எப்படி சாத்தியம்.. அப்போது தான் தன்னாலும் இயல்பாக நடக்க முடிந்ததை உணர்ந்தான் ஆகாஷ்.. ஒரு குரல்"மைடியர் யங் மேன்" 

குரல்வந்த திசையில் தமிழ்சினிமாவில் பணக்கார ஹீரோயினின் அப்பாவாக வரும் தோற்றத்தில் ஒரு குறுந்தாடிக் கிழவர் நின்று கொண்டிருந்தார். வெல்கம் டூ மினிலா என்றார் எங்கே உன் தோழி அவளையும் அழை என்றார். நீங்கள்..?. நான் இந்த கிரகத்தின் தலைவன் மெல்டன்.

விவரங்களை உங்கள் கிரகத்துக்கு அனுப்பிவிட்டேன் இங்கு ஆபத்தில்லை இந்நேரம் உன் தோழிக்கும் தகவல் போயிருக்கும் என்ற போது பின்னால் இருந்து ஆகாஷ் என்று சாதனாவின் குரல்.. அவளும் இறங்கியிருந்தாள். ஆகாஷ் இவர்களை நம்பலாமாம் கண்ட்ரோலில் சொன்னார்கள்.

வாருங்கள் இந்த கிரகத்தின் விருந்தாளிகள் நீங்கள் இன்னும் ஒருமாதம் இங்கு இருக்கலாம் அப்படியே பெங்களூர், மும்பை, ஏன் சாதனாவின் கொல்கத்தா கூட போகலாம்.. இந்த மாஸ்க்கை கழட்டிவிடுங்கள் என்றார். இங்கு ஆக்சிஜன், புவி ஈர்ப்பு, நீர், மொழி எல்லாம் உருவாக்கப்பட்டவை.

எப்படி இதெல்லாம் என்றான்? மெல்ல அவர்களைப் பார்த்து புன்னகைத்தார்.. நீங்கள் இருவரும் ஃபேஸ்புக்கில் இருப்பவர்களா.? ஆம் அதற்கென்ன என்றார்கள்.. அப்படியென்றால் உங்களுக்கு நிச்சயம் புரியும் என்று சொல்லிவிட்டு அடுத்து அவர் சொன்ன பதிலில் இருவரும் குலுங்கி குலுங்கிச் சிரித்தார்கள்..

அவர் சொன்ன பதில் #இந்தக்கிரகம்_தான்_இந்தியாவின்_ஃபேக்ஐடி



No comments:

Post a Comment