Thursday 17 September 2015

குறள் குரல்

#இதென்ன_புதுசா

இது 2015 அல்ல.. அதிலிருந்து 40 வருடங்கள் கடந்த ஆண்டு..! கள்ளக் கடத்தல் செய்கின்ற கந்தசாமி இன்னும் என்னவெல்லாம் செய்யலாம் என யோசித்துக் கொண்டிருந்தான். கந்தசாமி.? தங்கம், கஞ்சா, அபின், பிரவுன் சுகர், வைரம்,ஆமைகள், சிலைகள், அவன் கடத்தாத பொருளே இல்லை.

இடையில் ரைஸ்புல்லிங், ஈமு கோழி, மேக்னட் படுக்கை, தங்க நாணயம், வெயிட் லாஸ், என பல்வேறு M.L.M கம்பெனிகளின் நெட்வொர்க் ஆகவும் இருந்தான். அவனுக்கு பணம் வினாடிக்கு இவ்வளவு என அதிகரிக்க வேண்டும். அப்படி ஒருவனிடம் ஒருவன் சென்னையிலிருந்து பேசினான்.

தான் மயிலாப்பூரில் இருப்பதாகவும் அங்கு ஒரு இடம் வாங்கி வீடு கட்டப் போகையில் பூமிக்குள் இருந்து ஒரு அரிய புதையல் கிடைத்ததாகவும் தகவல் அனுப்பி இருந்தான்! அது தங்கமா,வைரமா, என அவன் குறிப்பிட வில்லை. அது விலையுயர்ந்த பொருள் என்று மட்டும் குறிப்பிட்டிருந்தான்.

அவனைச் சந்திக்க நேரம் ஒதுக்கினான் கந்தசாமி.. ஒருவழியாக சந்தித்தார்கள்... என்ன அந்த பொருள் என்றான் கந்தசாமி.! வந்தவன் சில ஓலைச்சுவடிகளை மேசையில் எடுத்து வைத்து இதோ திருக்குறள் என்றான் கந்தசாமிக்கு மிகுந்த கோபம் வந்தது. திருக்குறளா? இதில் என்ன புதுமை?

எனக் கேட்டான். வந்தவன் சொன்னான் அய்யா மொத்தத் திருக்குறள் எத்தனை? என்றான். 1330 என பதிலளித்தான் கந்தசாமி.... அதுதான் இல்லை.. மொத்தத் திருக்குறள் 5000 அதில் மீதி 3670 திருக்குறள்கள் தான் என் வீட்டில் கிடைத்தன என்றான்.. கந்தசாமி வியக்க...

இங்கிருந்து இந்த கதையை யாரும் தொடரலாம்

No comments:

Post a Comment