Tuesday 15 September 2015

பியாடர் கிரகம்

பியாடர்_கிரகம்

பூமியில் விஞ்ஞானிகள் கவலையுடன் இருந்தார்கள்.. வருடத்தில் செப்டம்பர் மாதம் மட்டும் ஒரு குறிப்பிட்ட தினத்தில் பூமி மீது பெரும் பெரும் விண்கற்கள் மழையாக பொழிந்தன.. ஒரு கல் இரு கல் இல்லை லட்சக்கணக்கான கற்கள்.. இதனால் பலத்த சேதம் அடைந்தது பூமி.

விண்வெளியில் உள்ள ஆராய்ச்சி மையத்திலிருந்து பியாடர் செல்ல அங்கிருந்து ஒரு விஞ்ஞானியை அனுப்ப முடிவெடுத்தார்கள் ஜுலை மாதம் கிளம்பினால் செப்டம்பர் முதல் வாரம் போகும் தொலைவில் அது இருந்தது.. அவரும் கிளம்பினார் அவர் அங்கு இறங்கியது செப்டம்பர் முதல் வாரம். இறங்கியவுடன் அந்த வினோதக் காட்சியைக் கண்டார்.

பியாடர் மனிதர்கள் 16 அடி உயரம் இருந்தார்கள் நான்கு கால்களுக்கு நடுவே இரண்டு கைகள் பத்தடி நீள தும்பிக்கை போல இருந்தது.. அவர்கள் முகம் வயிற்றில் இருந்தது.. அவர்கள் அனைவரும் பெரிய பெரிய கற்களை சுமந்து கொண்டு வரிசையாக சென்று கொண்டிருந்தார்கள்.

அவர்கள் அறியாது தொடர்ந்தார் அவர்கள் சென்ற இடம் ஒரு பெரிய மைதானம் போலிருந்தது அங்கு 100 அடி உயரத்தில் ஒரு மலை சிற்பம் போல செதுக்கப்பட்டிருந்தது.. அந்த உருவத்திற்கு மட்டும் தலை சரியான இடத்தில் இருந்தது உடல் வேறாக இருந்தது அதற்கு கைகளும் இருந்தன.

அங்கு வந்து அக்கற்களை வரிசையாக நட்டு வைத்துவிட்டு தங்கள் இரு தும்பிக்கை கைகளை தரையில் ஊன்றி நான்கு கால்களையும் தூக்கி ஆவ்வ்வ்வ்வ் என ஸைரன் போல அனைவரும் ஊளையிட்டார்கள். பிறகு அந்தக் கற்களை தூக்கிக் கொண்டு மீண்டும் ஊர்வலம் போனார்கள்.

அவ்வூர்வலம் முடிந்த இடத்தில் ஏராளமான பேர்அக்கிரகத்தின் பல பகுதிகளிலிருந்து கற்களை கொண்டுவந்து அங்கு காத்திருந்தனர். திடீரென மீண்டும் தும்பிக்கை ஊன்றி காலைத்தூக்கி அனைவரும் ஊளையிட்டு விட்டு கற்களை கிரகத்தை விட்டு வீசத் துவங்கினர்.நிறுத்துங்கள் எனக் கத்தினார் விஞ்ஞானி.. 

திடீரென அந்நியக் குரல் கேட்டு ஸ்தம்பித்த அவர்கள் அப்போது தான் அவ்விஞ்ஞானியைப் பார்த்தார்கள். மெல்ல நெருங்கிய ஒரு உருவம் #%^*+=¥£€><#}|~?!,.|\_[]{= என்றது. இவருக்கு புரியவில்லை என்பது போல சைகை செய்தார்.
உடனே அந்த உருவம் சட்டியைக் கவிழ்த்தது போல இருந்த தன் தலையில் தன் தும்பிக்கையால் தட்டியதும் ஏரியல் போல ஆண்டெனாக்கள் நீண்டது.. 

இப்போது சொல் மனிதா என்றது பியாடர் உருவம். இப்போது அது பேசியது நன்கு புரிந்தது அது டிரான்ஸ்லேட்டர் ஆண்ட்டெனா என அறிந்தார்.ஏன் நீங்கள் பூமியை நோக்கி கற்களை எறிகிறீர்கள் எங்கள் மேல் அப்படி என்ன கோபம் என்றார். மீண்டும் ஊளையிட்டார் பியாடர்..(சிரிப்பாம்) மனிதா எங்கள் கிரகத்தில் இது விண் தோன்றி மண் தோன்றா காலத்து வழிபாடு பல டிரில்லியன் ஆண்டுகளாக இதை வீசி வருகிறோம்.

எங்கள் கிரகம் தன்னைத்தானே சுற்றிக் கொண்டு சூரியனை வலம் வர 456 ஆண்டுகள் ஆகும் இப்போது பூமியின் நேர்கீழே இருக்கிறோம் அடுத்த 48 வருடங்கள் நாங்கள் வீசும் கல் பூமியில் தான் விழும்.. கடந்த 48 ஆண்டுகள் செவ்வாயிலும் அதற்கு முன் 48 ஆண்டுகள் புதனிலும் விழுந்திருக்கிறது. 

எங்கள் கிரகத்தில் இது விண் தோன்றி மண் தோன்றா காலத்து வழிபாடு பல டிரில்லியன் ஆண்டுகளாக இதை வீசி வருகிறோம்.ஆகவே.. மனிதா 
இது பூமி மீதான கோபமில்லை என்றது. வழிபாடா அதென்ன என்றார் விஞ்ஞானி.. அதுவா அங்கு ஒரு மலை தெரிகிறதா என்றது உருவம்.

விஞ்ஞானிக்கு அந்த சிலை நினைவுக்கு வந்தது.. ஆமாம் என்றார்.. அது தான் எங்கள் கடவுள் பியாடரப்பர்.. ஒரு முறை எம் கிரகத்தை விண்கற்கள் மோத வந்தபோது மலையாக மாறி அதைத்தாங்கி இந்த கிரகத்தை காத்தவர்.. அவர் பிறந்த தினத்தை தான் கல்லாக அவரை சுமந்து வணங்கி..

பிறகு எங்கள் கிரகத்துக்குள் விண்கற்கள் வரக்கூடாது என்பதற்காகத்தான் பால் வெளியில் கற்களை வீசுகிறோம் என்றது.. அதற்காக இப்படியா.? பாதிக்கப்படுவது நாங்கள் தானே.. கொஞ்சம் யோசியுங்கள் நீங்கள் செய்வது சரியா என்று என்றார் விஞ்ஞானி.

இப்போது மீண்டும் ஊளை (சிரிப்பு) ஏன் நீங்கள் மனிதர்கள் தானே ஆறறிவு உள்ளவர் தானே நீங்கள் மட்டும் விநாயகர் சதுர்த்திக்கு கடலில் தூக்கி போடுவதில்லை..! அது கடல் வாழ் உயிரினங்களை பாதிக்காதா என்றது நக்கலுடன்.. விஞ்ஞானி தலை குனிந்து திரும்பினார்.

No comments:

Post a Comment