Monday 20 June 2016

மார்ஸ் அட்டாக் இரண்டு

கிபி.7016 செவ்வாய் கிரகத்து அதிபர் குலோத்துங்க சோழன் மக்களிடையே அதி நவீன லேசர் ஒளிக்கற்றை பிம்பமாய் வானில் தூய தமிழில் ஸ்பீக்கிக் கொண்டிருந்தார். அன்பு செவ்வாய் தேச வாசிகளே எம் முப்பாட்டனின் முப்பாட்டன் அவனுக்கும் முப்பாட்டன் என 6000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த இராஜராஜனின் வழிவந்த சோழர்கள் கிட்டத்தட்ட 5000 ஆண்டுகளுக்குப் பின் பூமியைக் கடந்து செவ்வாயில் ஆட்சியை பிடித்தோம்.

இன்று அண்டவெளியில் விவசாயம் செய்யும் ஒரே தேசம் நாம் தான் 2000 ஆண்டுகளுக்கு முன் பூமி அழிந்த போது அங்கிருந்து தப்பி வந்த எம் முன்னோர்களின் சீரிய முயற்சியில்  செவ்வாயில் குடியேறினோம்.. மிகுந்த சிரமங்களுக்கிடையே இங்கு காற்று குடிநீர் விவசாயம் எல்லாம் உருவாக்க 500 ஆண்டுகள் எடுத்துக் கொண்டோம்.. கடந்த ஆண்டு நமது விவசாய நிலங்களை அண்டவெளி வண்டுகள் எனும் புதிய இனம் தாக்கியது.

அவற்றை அழிக்க பல வழிகளை கையாண்டோம் அவற்றில் ஒன்றை கூட கொல்ல முடியவில்லை அதனால் துவண்டு போனோம்.. ஆனால் செவ்வாயின் தலைமை விஞ்ஞானி விமலாதித்த சோழன் கண்டுபிடித்த ஒரு மருந்தை தெளித்து.. ஒரே நாளில் அண்டவெளி வண்டுகளின் வம்சத்தை அழித்தோம்.. தேசத்தின் உயர் விருதான செவ்வாய் ரத்னா விருதினை விமலாதித்தனுக்கு வழங்கி அவரை கவுரவிப்போம்.. (கைதட்டல்)

விமலாதித்தரே சாதித்து விட்டீர்.. என்றார் மந்திரி மகிபால சோழன்..  இருக்கட்டும் நம் தேசத்தின் நலனுக்கு செய்த உதவிக்கு எதற்கு விருது என்றார் தன்னடக்கத்துடன் விமலாதித்தர்.. அப்படி என்ன மருந்தைய்யா அது ஒரே நாளில் அண்டவெளி வண்டுகளை அழித்தது.. மகிபாலரே அதுவும் நம் முன்னோர்கள் கண்டுபிடிப்பே 5000 ஆண்டுகளுக்கு முன் பூமியில் இருந்த அந்த அருமருந்து தான் அண்டவெளி வண்டுகள் சாகக் காரணம்.

அப்படியா அதென்ன மருந்து என்றார் மகிபாலர்.. அதன் பெயர் ராவுப்ப லேகியம்.. ஓ அப்படியா அதன் பண்டையப் பெயர்..? சிரித்துக் கொண்டே விமலாதித்தர் சொன்னார்.. பூமியில் அதன் பெயர் #உப்புமா...

No comments:

Post a Comment