Monday 20 June 2016

Maagi

#மேகிக்குறள்கள்

மேகி செய்தாரை ஒறுத்தல் அவர் நாண

இடியாப்பம் செய்து விடல்.

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை

மேகியைச் சமைத்த வர்க்கு.

விற்க கசடான மேகியை விற்றபின் 

நிற்க கோர்ட்டில் அதற்குத்தக.

அன்பிலார் எல்லாம் மேகி தின்பர் அன்புடையார்

என்றும் தின்பார் இட்லி அவித்து.

எப்பொருள் எந்நடிகர் வாய்கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு.

#மேகி_மொழிகள்

அரசன் அன்று கொல்வான்.. மேகி நின்று கொல்லும்.

புலி பசித்தாலும் மேகி தின்னாது.

மேகி வரும் முன்னே.. வியாதி வரும் பின்னே.

மேகியை மடியில கட்டிகிட்டு ஆரோக்யம் பார்த்தா மாதிரி.

கொள்ளு என்றால் வாயை திறக்கும்.. மேகி என்றால் வாயை மூடிக்கொள்ளும்.

இடியாப்பம் படுத்தாலும் மேகி மட்டம்.

உயர உயரப் பறந்தாலும் மேகி இட்லிக்கு இணையாகாது.

மேகிக்கும் ஆசை.. வாழவும் ஆசை.

மேகி என்றால் பேயும் அலறும்.

பொம்பளை சிரிச்சா போச்சு.. மேகியை சமைச்சாலும் போச்சு.

சுத்தம் சோறு போடும்.. அசுத்தம் மேகி போடும்.

மேகியோடு சேர்ந்த சாசும் விஷம்.

குர்குரே எட்டடி பாஞ்சா மேகி பதினாறடி பாயும்.

இடியாப்பம் போல மேகி.. நொந்தது நூடுல்ஸ் ஆகி.

பிள்ளையில்லாத வீட்டில் கிழவன் மேகி தின்னு செத்தானாம்.

#வரும் காலத்தில் மேகி தடை செய்யாது விற்கப்பட்டால் இதுவும் நடக்கலாம்..

படுபாவிப்பய..பரிட்சையிலே கம்மி மார்க்கு வாங்கினதுக்கு பூச்சி மருந்து குடிச்சிருந்தா கூட காப்பாத்தி இருக்கலாம் இப்படி மேகியை தின்னுட்டானே..

சாரி சார் சரியான பிரிஸ்கிரிப்ஷன் இல்லாம எங்க மெடிக்கலில் மேகி விக்கிறது இல்லை..

ஏம்பா தோட்டத்துல காட்டுப்பன்னிங்க தொல்லைன்னு புலம்புவியே இப்ப எப்படி.? பூமியில 10 பாக்கெட் மேகி புதைச்சு வச்சேண்ணே பன்னிங்க கூட்டமா வந்து தின்னுட்டு செத்துடுச்சுங்க.. இப்ப தான் நிம்மதி..

ஹலோ போலீஸ் ஸ்டேஷனா சார் எங்க வீட்டு ஜன்னல் வழியா எதிர் வீட்டுல பார்த்தேன் ஒரு அம்மா மேகி பாக்கெட்டை ஓபன் பண்ணிகிட்டு இருக்கு சீக்கிரமா வந்து அவங்களை காப்பாத்துங்க ப்ளீஸ்..

என்ன வாழ்க்கைடா இது நிம்மதியே இல்லை பேசாம ஒரு பாக்கெட் மேகியை சாப்பிட்டுட்டு செத்துற வேண்டியது தான்..

அன்பார்ந்த விவசாயிகளே நெல் கரும்பு பயிர்களில் பூச்சியரிக்கும் காலமிது. 5லிட்டர் தண்ணீரில் 2 கிலோ மேகியை கரைத்து தெளித்தால்.. பூச்சிகள் இறந்து பயிர்கள் காக்கப்படும்..

------
இடைக்குறள்

அம்மாக்கு நன்றாம் பணிதல் அவருக்கே

அமைச்சர் செல்வம் கிடைத்து.


அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பன்னீர்செல்வம்

அழுதிட்டார் கண்ணில் நீர்வர.


அச்சப் படுவார் செல்வம் பெங்களூருள்

நடக்கும் வழக்கு அதற்கு.


இடைக்காலப் பதவிபெற்றார் செல்வம் பெற்றாலும்

அம்மாவின் சொல்லே செயல்.


நல்லவை எல்லாம் தீயவாம் தீயவும்

நல்லவாம் செல்வம் அவர்க்கு.

No comments:

Post a Comment