Wednesday 31 December 2014

பாசுரம் - 41

எழுத்தாளர் சுஜாதாவின் "வாரம் ஒரு பாசுரம்" (41) புத்தகத்திலிருந்து...

41. என்ன பாட்டு இது...

குயில்கள் இனிமையாகத் தான் பாடுகின்றன. அதைக் கேட்டு ஆண்டாள் ரசிப்பது இல்லை என்ன பாட்டு இது?எதற்காகப் பாட்டு?திருவேங்கடத்து இறைவன் எனக்கு ஒரு வாழ்வு தந்தால் பாடுங்கள். உங்கள் பாட்டை நான் கேட்பதற்கு அவர் வந்து என்னைச் சேர வேண்டும்.அப்போது உங்கள் பாடல்களை கேட்டு ரசிக்கிறேன் என்கிறார்...

பாடும் குயில்காள்! ஈது என்ன பாடல்? நல் வேங்கட
நாடர் நமக்கு ஒரு வாழ்வு தந்தால் வந்து பாடுமின்!
ஆடும் கருளக் கொடி உடையார் வந்து அருள் செய்து
கூடுவராயிடில் கூவி நும் பாட்டுகள் கேட்டுமே.

(கருளக்கொடியுடையார் - கருடனை கொடியாகக் கொண்ட திருமால்)

ஆண்டாளின் பக்தியின் தீவிரம் அப்படிப்பட்டது. திருமால் வந்து சேரவில்லை என்றால் இயற்கையின் இனிய சப்தங்கள் கூட ரசிப்பதில்லை. காதலர்களையும் புதுசாக கல்யாணம் செய்து கொண்டவர்களையும் கேட்டுப் பாருங்கள். காதலன் வரும் வரை எதுவுமே சிறக்காது,எதுவுமே இனிக்காது. வந்து விட்டால்.....

பஞ்சு மிட்டாய்க்காரன் மணிச்சத்தம் கூட இனிமையாக இருக்கும் என்பார்கள். ஆண்டாளின் காதல் அப்படி பூக்கள், தோகை விரிக்கும் மயில்கள், மழை, கடல், அனைத்துமே கோவிந்தன் வந்தால் தான் இனிக்கின்றன. ஆண்டாளின் நாச்சியார் திருமொழியில் இருக்கும் அந்தரங்கமும் பகவானுடன் சொந்தம் கொண்டாடுவதும் பிரபந்தத்தின் வேறு எந்தப் பகுதியிலும் கிடைக்காது.

 -எழுத்தாளர் சுஜாதா..

No comments:

Post a Comment