Wednesday 31 December 2014

திருவெம்பாவை - செங்கணவன்..

#திருவெம்பாவை_எளிய_தமிழில் 

உன் கருங்கூந்தல் மலரில் வண்டுகள் தேன் குடிக்கும் அழகு

மிக்கவளே! செந்தாமரைக் கண்ணன் பெருமாளிடமும் நான்கு

திசையையும் தன் நான்கு முகங்களால் காணும் பிரம்மனிடமும்

வானோர் அனைவரிடமும் இல்லாத அரிய இன்பம் நம்முடையது

நம் குற்றங்களை போக்க இதைத்தந்து நம் இல்லங்களில் வந்து

எழுந்தருளியிருக்கும் ஈசனின் செந்நிற மலர்ப் பாதங்களை,அவர்

அழகான விழிகளை, நம் அரசரை, அடியவர்க்கு ஆராவமுதானவரை

எம்பெருமானை பாடுவதால் நலம் நிறையட்டும். அதற்கு தாமரை 

நிறைந்த தடாகத்தில் பாய்ந்து நீராடி தொழுவோம் எம்பாவாய்.


பாடல்: 17

செங்கணவன்பால் திசைமுகன் பால் தேவர்கள் பால்
எங்கும் இலாதோர் இன்பம் நம் பாலதாக்
கொங்குஉண் கருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி
இங்கு நம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்
செங்கமலப் பொற்பாதம் தந்தருளும் சேவகனை
அங்கண் அரசை அடியோங்கட்கு ஆரமுதை
நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப்
பங்கயப் பூம்புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய். 

கொங்கு - தேன் (உண்ணும் வண்டு); கோதாட்டி - குற்றம் நீக்கி;
சேவகன் - ஊழியன்; பங்கயம் - தாமரை.


No comments:

Post a Comment