மழையே! நீ இக் கடலில் உள்ள நீர் ஆவியாய்த் திரண்டு வானில்
எழுந்து சிவனின் உடையாள் உமையவள் போல் கரிய நிறத்தில்
திகழ்க! எங்களை ஆளுகின்ற அவளின் சிற்றிடை போல் மின்னல்
கீற்றாய் பொலிக! பெருமானின் துணைவியின் திருவடியில் உள்ள
பொற்சிலம்பின் ஓசையைப் போல் இடியாய் ஒலிக்க! அவளுடைய
புருவங்கள் வளைந்தது போல் வானவில்லாய் வளைக! நம்மை ஆளும்
அவளோடு எப்போதும் இணை பிரியாது இருக்கும் ஈசனுடைய
அன்பர்க்கு அவளே முன்வந்து விரைந்து அருள் அளிப்பது போல் நீயும்
மண்ணில் பொழிந்திடுவாய் எம்பாவாய்.
பாடல்: 16
முன் இக்கடலைச் சுருக்கி எழுந்து உடையாள்
என்னத் திகழ்ந்து எம்மை ஆளுடையாள் இட்டிடையின்
மின்னிப் பொலிந்து எம்பிராட்டி திருவடிமேல்
பொன்னஞ் சிலம்பில் சிலம்பித் திருப்புருவம்
என்னச் சிலை குலவி நந்தம்மை ஆளுடையாள்
தன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு
முன்னி அவள் நமக்கு முன்சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய்.
இட்டிடை - சிறிய இடை; சிலை குலவுதல் - வில்லென வளைதல்;
முன்னி - முற்பட்டு.
No comments:
Post a Comment