Monday 29 December 2014

திருவெம்பாவை - ஒரொருகால்..

#திருவெம்பாவை_எளிய_தமிழில் 


அவள் அடிக்கடி எம்பெருமான் என நம்பெருமானின் பெருமையை

வாய் ஓயாமல் உள்ளமெல்லாம் மகிழ்ச்சி பொங்க சொல்லிக்கொண்டு

இருக்கிறாள்! கண்களில் தாரைதாரையாய் விடாது வழியும் கண்ணீர்

அவளை இவ்வுலக நினைவில்லாது ஈசனின் நினைவில் இருப்பதை 

சொல்கிறதே ஒழிய வேறொன்றுமில்லை! இவள் வேறு தேவர்களைப்

பணிவதில்லை அவளின் பேரரசனான சித்தனின் பால் சிவப் பித்தம்

கொண்டிருக்கிறாள் இவ்வாறு அவளை சிவப்பித்தில் ஆட் கொண்ட

எல்லாம் வல்ல ஈசனின் திருப்பாதத்தை வாயார நாமும் பாடிட

மார்பு கச்சை அணிந்த மாந்தர்களே வாருங்கள் மலர்கள் நிறைந்த

இக்குளத்தில் நீந்தி நீராடி சிவனை தொழுவோம் எம்பாவாய்.


பாடல்: 15

ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான்
சீரொருகால் வாய் ஓவாள் சித்தம் களிகூர
நீரொருகால் ஓவா நெடுந்தாரை கண் பனிப்பப்
பாரொருகால் வந்தனையாள் விண்ணோரைத் தான் பணியாள்
பேரரையற்கு இங்ஙனே பித்துஒருவர் ஆமாறும்
ஆர்ஒருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர் தாள்
வாருருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி
ஏருருவப் பூம்புனல்பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய். 

ஓவாள் - ஓயமாட்டாள்; களி - மகிழ்ச்சி; பனித்தல் - ஈரமாக்குதல்;
பார் - உலகம்; அரையர் - அரசர்.


No comments:

Post a Comment