Sunday 28 December 2014

திருவெம்பாவை - காதார் குழை...

#திருவெம்பாவை_எளிய_தமிழில் 

காதில் அணிந்துள்ள தோடுகள் ஆட பொன்னாபரணங்களாட

மலரணிந்த கூந்தலாட அம்மலரைச் சுற்றும் தேனீக்கள் ஆட

மார்கழிக் குளிர் நீராடி தில்லை அம்பலனைப் பாடி மறையின்

பொருளா இல்லை சிவனே மறையா என்பதைப்பாடி அவனின்

ஒளி வடிவத்தின் பெருமையைப் பாடி ஈசன் அணிந்துள்ள கொன்றை

மலர் கொத்தினைப் பாடி முற்றிலும் முதல்வனாக இருக்கும் சிவனின்

வல்லமையைப் பாடி அவனே எல்லாவற்றிற்கும் இறுதியாய் இருக்கும்

அழகையும் பாடி நம் பாவங்கள் நீங்க நம்மை வளர்த்தெடுக்கும் ஈசனின்

பொற்பாதங்களின் தன்மையை வணங்கி நீராடுவோம் எம்பாவாய்.

பாடல்: 14 
காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
கோதை குழலாட வண்டின் குழாம் ஆடச்
சீதப் புனல்ஆடிச் சிற்றம் பலம்பாடி
வேதப் பொருள்பாடி அப்பொருள் ஆமா பாடி
சோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார் பாடி
ஆதி திறம்பாடி அந்தம் ஆமா பாடிப்
பேதித்து நம்மை வளர்த்துஎடுத்த பெய்வளை தன்
பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய். ஜ்
பைம்பூண் - பொன்னாபரணம்; கோதை - பூமாலை; குழாம்
- கூட்டம்; சீதம் - குளுமை; தார் - மாலை.

No comments:

Post a Comment