குளத்தில் வண்டுகள் மொய்க்கின்றது அதில் கைகளால்
குடைந்து குடைந்து நீராடும் போதே உன் திருவடிகளைப்
பாடி, வழி வழியாக வந்த அடியவர்களாகிய நாங்கள் வாழ்வு
பெற்றோம்.ஆக்கிரமிக்கும் செந்தீயைப் போல் சிவந்த சிவனே
திருநீறு பூசும் திருநீலனே, சிற்றிடையும் பரந்த மைவிழியும்
கொண்ட பார்வதியின் கணவனே! ஐயனே நீ ஆட் கொண்டு
அருளும் திருவிளையாடலில் மெய் மறந்து ரசிக்கும் அடியார்
போல் நாங்களும் ரசித்து மெய் மறந்து விட்டோம் எங்களைத்
தளர்வுறாமல் காத்திடுவாய் எம்பாவாய்.
பாடல்: 11
மொய்யார் தடம் பொய்கை புக்கு முகேர்என்னக்
கையாற் குடைந்து குடைந்து உன் கழல்பாடி
ஐயா வழியடியோம் வாழ்ந்தோம் காண் ஆர் அழல் போற்
செய்யா வெண்ணீறாடி செல்வா சிறுமருங்குல்
மையார் தடங்கண் மடந்தை மணவாளா
ஐயா நீ ஆட்கொண்டருளும் விளையாட்டின்
உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உயர்ந்தொழிந்தோம்
எய்யாமற் காப்பாய் எமையேலோர் எம்பாவாய்.
கையாற் குடைந்து குடைந்து உன் கழல்பாடி
ஐயா வழியடியோம் வாழ்ந்தோம் காண் ஆர் அழல் போற்
செய்யா வெண்ணீறாடி செல்வா சிறுமருங்குல்
மையார் தடங்கண் மடந்தை மணவாளா
ஐயா நீ ஆட்கொண்டருளும் விளையாட்டின்
உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உயர்ந்தொழிந்தோம்
எய்யாமற் காப்பாய் எமையேலோர் எம்பாவாய்.
மொய் - மொய்க்கின்ற வண்டு; தடம் - நீர்நிலை; பொய்கை - குளம்;
அழல் - தீ; மருங்குல் - இடை; எய்த்தல் - இளைத்தல்.
அழல் - தீ; மருங்குல் - இடை; எய்த்தல் - இளைத்தல்.
No comments:
Post a Comment