Monday 26 January 2015

கப்ஸா செய்திகள்..

கப்ஸா செய்திகள்...

பாரதிராஜா - விஜயகாந்த் சந்திப்பு

சென்னை: பரபரப்பான அரசியல் சூழலில் தனிமை தேடிய கேப்டனுக்கு அன்னக்கொடி ஓடும் தியேட்டர்களில் அது கிடைப்பதாக தெரிந்து அங்கு வந்தார்.. எங்கு குறட்டை.. சாரி...கோட்டை விட்டோம் என்பதை பார்ப்பதற்காக பாரதியும் அங்கு வந்தார்...

இது வரை ஒருவர் கூட வராத இந்த படத்திற்கு இருவர் வந்தது தியேட்டர் முதலாளியை மகிழ்ச்சி கண்மாயில் ஆழ்த்தியது. நமக்கு நேரம் சரியில்லை என்று இருவரும் ஒரே நேரத்தில் நினைத்து கொண்டார்கள்.... 

எப்படி இருக்கீங்க என்று பாரதியிடம் கேப்டன் கேட்க ....யா.. ஐயாம் பைன் பட்.. சபரிங் த மூவி ரிசல்ட்ஸ்.. நானும் எலக்ஷன் ரிசல்ட்ல தவசிங் (சபரிங்ல சபரி வர்றதால கேப்டனும் வேற படம் சொல்றார் என பொருள்)

யா..ஐ நோ.. பட் நம்ம ரெண்டு பேருக்கும் ஒரு டிபரண்ட் உங்க ஆளுங்க வெளியே போய் டேமேஜ் பண்ணாங்க.. எங்க ஆளுங்க கூட இருந்தே டேமேஜ் பண்ணிட்டாங்க.. யெஸ் திஸ் இஸ் பியூர் பாலிடிக்ஸ்... 

விடுங்க.. உங்களுக்கு அன்னகொடி கிழிஞ்சது எனக்கு கட்சி கொடி கிழிஞ்சது... சரி தமிளர்களை விட்டுடுங்க விஜயகாந்த் அப்படின்னு ஏன் சொன்னீங்க?

ஆக்சுவலி நான் சொன்ன மீனிங்...

நிறுத்துங்க...... முதல்ல நீங்க தமிள்ள பேசுங்க பாரதி...

யா ஐ.. வில் ட்ரை பட் யு குட் நாட் அண்டர்ஸ்டாண்ட் மை பிராபளம்...

(கேப்.சிரித்து) வெக்கமில்லாம என்னை சொல்லிட்டு... தமிளெ வரல... நீங்க தான் தமிள காப்பாத்த போறீங்களா...

ok நவ் ஐ ஸ்பீக் டமில் ஆக்சுவலி 

விடுங்க பாரதி உங்களால முடியாது....

யூ ஆர் அதாவது நீங்க பாலிடிக்ஸ்ல பியூப்புள்ஸ எண்டெர்டெயின் பண்றீங்க ..சோ.. தியேட்டர்ஸ்க்கு பியூப்புள்ஸ் எப்படி வருவாங்க.. 

ஓ... நீங்க ஒளுங்கா படத்தை எடுக்கமாட்டீங்க பளிய எங்க மேல போடுறிங்க.. சரி அப்ப ஏன் தமிள்செல்வன் படத்தை என்னை வச்சு எடுத்தீங்க? 

யா.. ஐ.. டிட்.. கிரேட் மிஸ்டேக் பேசிக்கலி... 

இருங்க பாரதி.. இந்த பேசிக்கலி பெருச்சாளி இதெல்லாம் வேணாம்... நான் சொல்றேன்.. அன்னைக்கு நான் மார்கெட் வேல்யூ ஹீரோ அதான் எடுத்தீங்க இப்ப தமிள் தமிளர்னு உளர்றீங்க... 

பட் ஒன் திங்க் ஐயாம் வில்லேஜ். பெல்லோ....

வில்லேஜா அது உங்க படத்துலதான் இருக்கு... பேச்சுல எங்க இருக்கு.?!

என் இனிய தமிழ் மக்களே உங்கள் பாசத்திற்குரிய பாரதிராஜா பேசுகிறேன்.. ஒகே திஸ் இஸ் இனப் பார் யூ..... 

இந்த ரெக்கார்டு தான் 30 வருசமா ஓடுதே...இதை. தவிர நீங்க தமிள் பேசி ஒரு பய பார்த்ததில்ல... 

ஓகே லீவ் இட் ஐயாம் சாரி அதாவது மன்னிச்சுடுங்க

கேப்டன்... ஏய்ய்ய்ய்ய்ய் மன்னிப்பா..... தமிள்ள எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை...

கொந்தளித்த கேப்டனை தியேட்டர் முதலாளி சாந்த படுத்த பாரதியை மற்றவர்கள் அழைத்து செல்ல....

நன்றி.... வில் மீட் யூ அகெய்ன் ..

கப்ஸா செய்திகளுக்காக சென்னையிலிருந்து "சரடு"சரவணன்...

கப்ஸா செய்திகள் ......

சுப்ரமணிய சாமி- நாராயணசாமி சந்திப்பு ...

சென்னை : மீனம்பாக்கம் ஏர்போர்ட்டிற்கு விமானங்களை விட அதிகமாக வந்து போகும் நாராயணசாமி வழக்கம் போல் இன்றும் வருகை புரிந்தார் நமது கப்ஸா நிருபர் தவிர வேறு யாரும் இல்லாதது கண்டு அது ஏன் என நம்மிடமே விசாரித்தார்.!

எப்படி சொன்னாலும் 15நாள்னு சொல்லபோறீங்க இதுக்காக இங்க வேஸ்ட்டா வந்துகிட்டு என்று உண்மையைகூறினோம்.பரவாயில்ல நீங்களாவது வந்திங்களே என்றவரிடம் சாரி சார் நாங்களும் உங்களை பாக்க வரலை...

சுப்பிரமணிய சாமிய பாக்க வந்தோம் அப்பிடின்னோம் உடனே நா.சா டென்ஷன் ஆகி இன்னும் 15 நாள்லன்னு ஆரம்பிக்கும் போது பின்னால இருந்து ஒரு குரல் "இன்னும் 15 நாள்ல அமாவாசை  வரும் ஓய்.! ஏன்னா இன்னிக்கு பவுர்ணமி"

திரும்புனா நம்ம சுனா.சானா.!அவர பாத்ததும் நம்ம நா.சா வுக்கு முகம் கருத்திருச்சு (இல்லைனா மட்டும்) ரஷ்யாவுல KGB சதி பண்றா.. கூடங்குளம் ப்ராஜெக்ட்ல 2 லட்சம் கோடி ஊழல் நடத்திட்டா எங்கிட்ட ஆதாரம் இருக்குனு ஆரம்பிச்சார்..

அதுக்கென்ன இப்போ என்பது போல் நா.சா. பார்க்க.. அதுமட்டுமில்ல ஓய்.. ராஜபக்ஷே இப்படி கேவலமா தோத்தாளே அதுக்கு அமெரிக்க சதி தான் காரணம் அதுக்கும் எங்கிட்ட ஆதாரம் இருக்கு என்றார் சூனா சானா.!

முதல்ல உம்ம கிட்ட ஆதார் கார்டு இருக்கா அப்பிடினு நா.சா கேக்க சு.சா.வரணும் ஆனா CBI காரா சதி பண்ணிட்டா எம்பேர்ல வந்த ஆதார் கார்ட சுப்ரஜித்சிங் அப்படிங்குற பஞ்சாபிக்கு மாத்திட்டா.. அதுக்கும் எங்கிட்ட ஆதாரம் இருக்குன்னார் 

பேசாமல் நீங்க ரின் சோப் விளம்பரத்துலநடிக்கலாம் எப்படி பாத்தாலும் ஆதாரம் இருக்கு சேதாரம் இருக்குன்னுட்டு சே...?!

ஏன் நீங்க ஒயாம15 நாள்னு சொல்றேளே அதுக்கு இது தேவல..

இங்க பாருங்க ஒரு உறைக்குள்ள ஒரு கத்தி தான் இருக்கணும்..

ஓ புரியறது 2 காமெடியன் இருந்தா டிராஜிடியா போய்டும்னு சொல்லவறேள் அதானே..

அடுத்த தேர்தலில் இதுக்கு நீங்க பதில் சொல்லியே ஆகணும்..

ஏன் இப்பவே சொல்றனே இனி வர்ற எந்த எலக்ஷன்லயும் நீங்க ஜெயிக்க போறதே இல்லை...

பாக்கலாமா பாக்கலாமா இன்னும் 15நாள்ல இதுக்கு பதிலடி தர்றேன்.

இப்ப ஆதாரமே இல்லாம அடிச்சு சொல்றேன் 15 நாள் கழிச்சும் நீர் இதத்தான் சொல்லப்போறேள்..

டென்ஷனான நா.சா..திரும்ப திரும்ப பேசற நீ ஸ்டைலில் பேச அவர் கட்சி தொண்டர்கள் அவரை கைத்தாங்கலாக அழைத்து கிளம்ப..

நம்ப சுனா.சானா சிரிச்சிகிட்டே கெத்தா கிளம்பிட்டாருய்யா... கிளம்பிட்டாரு..!

கப்ஸா செய்திகளுக்காக மீனம்பாக்கத்தில் இருந்து "சரடு"சரவணன்..


கப்ஸா செய்திகள் ....

மோடி-மன்மோகன் சந்திப்பு.......

புதுதில்லி:இன்று புதுதில்லியில் தூய்மைப்பணிகள் புரிய பிரதமர் மோடி விரைந்தார். இது நாட்டு மக்களை வியப்பிலாழ்த்தி உள்ளது. கடந்த சில மாதங்களாகவே வெளி நாட்டு வாழ் இந்தியராக இருந்த நான் இன்று தில்லிக்கு வந்தது தெய்வச் செயல் என்று மோடியே நமக்கு போன் போட்டு தெரிவித்தார்..!

சாலையில் துரிதமாக அவர் துப்புரவு பணி மேற்க் கொண்டிருந்த போது அவ்வழியே காரில் முன்னாள் பிரதமர் மன்மோகன் வந்துவிட்டார்.. முதலில் என்ன செய்வது என இருவருமே யோசிக்க.. சட்டென மன்மோகனுக்கு ஜெ & வை.கோ.சந்திப்பு ஞாபகம் வர காரில் இருந்து இறங்கினார்..!

முன்னாள் பிரதமர் சாலையில் இறங்கியதால் மனமிரங்கி இந்நாள் பிரதமர் மோடி ஓடி சென்று அவருக்கு கை'குலுக்கினார்.. மன்மோகன் அவர்கள் அர்த்த நோஞ்சானாக (புஷ்டி வேணாம்) கை"யைபார்க்க சுதாரித்து மோடி தயாராக வைத்திருந்த தாமரைப்பூ பொக்கேவை நீட்டினார்.

நலமா மன்மோகன் ஜி இப்பதான் நீங்க நிம்மதியா இருக்கிங்க இல்லையா..?! எனக்கேட்டார்.. அதற்கு அர்த்தமில்லாமல் புன்னகைத்து ஆமாவா இல்லையா பாணியில் தலையாட்டி மோடியை குழப்பினார் மோகன்..

என்ன கையில் துடைப்பம் இப்ப நீங்க ஆம் ஆத்மியில சேந்துட்டிங்களா.! என்று கண்ணாலேயே கேட்டார் மோகன்.. அர்த்தம் புரிந்து கொண்ட மோடி"என்ன செய்ய நாட்டில் சேர்ந்த குப்பைகளையும்,நீங்க கடந்த ஆட்சியில் போட்ட குப்பைகளையும் நான் தானே சுத்தப்படுத்த வேண்டியிருக்கு" என்றார்.

நான் இரண்டு தடவை பிரதமரா இருந்து பண்ணாததை அப்படி என்ன தான் புதுசா பண்றிங்கன்னு பார்ப்போம் என்று சொன்னார் (மறுபடியும் கண்ணில்) மோகன்.. மீண்டும் ராஜ்ய சபா தேர்தலில் போட்டியிடுவீர்களா? என மோடி கேட்ட போது ஆகாயத்தை பார்த்தும் சட்டைபையில் உள்ள சோனியா புகைப்படத்தை எடுத்து பார்த்தும் விரக்தியாக சிரித்தார் மோகன்..!

பரிதாபப்பட்ட மோடியும் கண்கலங்கி கவலைப் படாதிங்க உங்களுக்கு ஒரு பத்ம பூஷனுக்கு ஏற்பாடு செய்யறேன் என்றார்.. அப்போது துரத்தில் அத்வானியின் கார் வருவதை பார்த்த மோடி அவரை கடுப்பேற்ற அவர் வண்டியை மறிப்பது போல சாலைக்கு வந்து மன்மோகனுக்கு மீண்டும் இறுக்கமாக கை குலுக்கினார்...

இது தெரியாத மோகன் சரி விடை பெறுகிறார் போல என்று "சரி போய்ட்டு வாங்க" என்றார் வாய் திறந்து..! அவர் பேசிய அதிசயத்தில் பாரதிராஜா படம் போல அசையும் பொருட்கள் எல்லாம் சில வினாடிகள் தில்லியில் freeze ஆனது..!

பேசாத முன்னாள் பிரதமரையே பேசவைத்த எங்கள் அண்ணனுக்கு ஜிந்தாபாத் என மோடியின் அல்ல கைகள் கோஷமிட.. தாமரைப்பூ போல மோடி சிரிக்க.. அத்வானி முகம் தாமரை போல சிவக்க.. கூலாக கார் ஏறிக் கிளம்பினார் மன்.!

கப்ஸா செய்திகளுக்காக புதுதில்லியில் இருந்து "சரடு"சரவணன்..


கப்ஸா செய்திகள் ....

வை.கோ-விஜயகாந்த் சந்திப்பு ....

ரிஷிவந்தியம் : நேற்று வீட்டுக்கு போவதாக நினைத்து கொண்டு தவறி தன் தொகுதிக்கே போய் விட்டார் கேப்டன்.. பாதை மாறி வந்ததாக டிரைவர் சொன்னதும் அவர் முகத்தில் அன்பாக கை வீசி.. இவன் உளறுறான்.. (அவனுமா!) 

நான் தொகுதி மக்களை பாக்க வந்தேன் என சமாளித்தார்.. வேற தொகுதி போகம கரெக்டா சொந்த தொகுதிகுள்ளயாவது வந்தாரே என்ற அல்ப சந்தோஷ பட்ட மக்கள் கேப்டனை வரவேற்றார்கள்.! அப்போது நிறைய பேர் ஷார்ட்ஸ் டி-சர்ட் அணிந்து அங்கு நடந்து வர....

ஓ.! ஏரியாவுல பொங்கல் விழாவா? நடைபோட்டி நடக்குது போலனு நெனச்சு பாக்கெட்டில் இருந்து கேப்டன் 1000 ரூபாயை எடுத்து தலைபாகை அணிந்திருந்த நபரைப் பார்த்து "பெரியவரே இத வாங்கிகோங்க"என்றார்.

பதிலுக்கு அந்த தலைப்பாகை அணிந்திருந்தவர் "என்னை தெரியலயா கேப்டன்" என கேட்க கண்ணை உருட்டி உற்று பார்த்தவர் "நீங்க மைக்கேல் ராயப்பன் தானே"?!? என்று பல்லைக் கடித்து முஷ்டியை ஓங்க.. விபரீதம் உணர்ந்த அவர் தலைப் பாகையை அவசரமாக கழட்ட அட நம்ம வை.கோ..!!!!!

மன்னிப்பு என்ற வார்த்தை பிடிக்காத நம்ம கேப்டன் தனது செயலுக்கு sorry கேட்டார். கட்சி எப்படி போகுது என்று கேட்ட வை.கோ வை கண் சிவக்க பார்த்து என் கண்ட்ரோல்ல இல்லாமல் போகுதுன்னு கண்ணாலயே கேப்டன் சொல்ல..

புரிந்து கொண்டார் வை.கோ. இப்ப கேப்டன் "நீங்க எப்படி இங்க? என்று வாயால் கேட்டாரு,"நடை பயிற்சி அடுத்த போராட்டத்திற்கு முயற்சி" என அடுக்கு மொழியில் மிடுக்காக பதிலளித்தார் வை.கோ. 

"பிரபாகரனுக்காக போராடும் நீங்க ஏன் எனக்காக போராடல"? கேப்டனின் கேள்வி வை.கோ வை குழப்பியது.! "அட நானும் கேப்டன் பிரபாகரன் தானே" என்று கூறியதும் தன் கவலைகள் எல்லாம் மறந்து குலுங்கி குலுங்கி சிரித்தார் வை.கோ.! 

ஒருவாறு சிரித்து முடித்த வை.கோ "கவலைபடாதிங்க வரும் 2016ல நாங்க ஆட்சிக்கு வந்ததும் உங்க பிரச்சினைய தீர்த்து வைக்கிறேன்" என்றார்.இப்ப கேப்டன் வயித்த பிடிச்சுகிட்டு  உருண்டு பெரண்டு பல்டியடிச்சு சிரிச்சாரு. 

ரெண்டு பேருமே கட்சி கவலைகளை மறந்து செஞ்சி காமெடிய பாத்து தொகுதி மக்கள் எல்லாம் ஒரு காமெடி சானல் பாத்த திருப்தியில் கைக் கொட்டி சிரிக்க.. இருவரும் மகிழ்ச்சியாக விடை பெற்று கொண் டார்கள்..

கப்ஸா செய்திகளுக்காக ரிஷிவந்தியத்திலிருந்து "சரடு"சரவணன்..


கப்ஸா செய்திகள்...

கனிமொழி / ஜெயலலிதா சந்திப்பு.....

ஜன 10 ,நேற்று உழைப்பதற்காக ஊட்டி வந்த கனிமொழி அங்கு ஓய்வுக்காக வந்திருந்த ஜெயலலிதாவை சந்தித்தார். கனியின் வருகையை ஒட்டி கொட நாடு பணியாளர்களுக்கு 1 நாள் விடுமுறைவழங்கப்பட்டது..!

கனியை வாசலுக்கே வந்து ஜெ. வரவேற்றதாக வதந்திகள் சொல்கிறது...ஜெ கனியை கனிவோடு நலம் விசாரித்ததாகவும் காபி போட்டு குடுத்ததாகவும் கனியே நம்மிடம் தெரிவித்தார்..!

கனி எம்.பி தேர்தலில் வெற்றி பெற்றதை விழுந்து விழுந்து சிரித்து கொண்டே ஜெ. வாழ்த்தியதாக செய்தி குரைப்பு ஒன்று தெரிவிக்கிறது. மானம் நிமித்தமாக (எவ்வளவு நாள் மரியாதைன்னே சொல்றது) நடைபெற்ற இச்சந்திப்பு 15 நிமிடம் நீடித்தது.!

விடை பெறும் போது கனிக்கு 3G செல்போன் பரிசளித்தார் ஜெ. பதிலுக்கு கனியும் நெஞ்சுக்கு நீதி புத்தகம் பரிசளித்து கடுப்பு ஏற்றினார். உள்ளுக்குள் கடு கடு வென்றாலும் இருவரும் சிரித்துகொண்டே புகைப்படம் எடுத்து கொண்டனர்.....

கனி வெளியேறிய அடுத்த மைக்ரோ செகண்டில் ஊட்டிக்கு ஷாப்பிங் போயிருந்த சசி கொட நாடு நுழைந்தார். கனி சந்திப்பை தவிர்க்க நான் ஊட்டி போகவில்லை என வாண்ட்டடாக பேட்டி அளித்து அதை ஊர்ஜித படுத்தினார்..!

கனியும் ஜெவும் சந்தித்தது அரசியல் அல்ல என நமது எம்.ஜி.ஆரில் எம்.ஜி.ஆரே எழுதியுள்ளார் என்று முரசொலியில் கலைஞர் எழுதியுள்ளார்.!

கப்ஸா செய்திகளுக்காக கொட நாட்டிலிருந்து "சரடு" சரவணன்...

கப்ஸா செய்திகள்.. (இன்றைய கப்ஸா..)

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு..

புதுதில்லி: நேற்று ஸ்டாலின் புதுதில்லி வந்திறங்கினார்.. தளபதியின் வருகையை ஒட்டி கழகத்தினர் கட்சி கொடிகள், அலங்கார வளைவுகள், கட்-அவுட்கள், பிளக்ஸ் பேனர்கள் எல்லாம் வைத்து புதுதில்லியை புரசைவாக்கம் ஆக்கினார்கள்.! 

தமிழ்நாடு இல்லத்தை பார்த்து பெருமூச்சு விட்டபடி கடந்து போய் ஒரு ஓட்டலில் தங்கினார் ஸ்டாலின். அந்த ஓட்டலில் உணவருந்த சென்ற போது அங்கு ராகுல் தன் வெள்ளைக்கார தோழியுடன் வெள்ளை நிறக்கோழி சாப்பிட்டு கொண்டிருந்தார்....

தளபதியை பார்த்து திடுக்கிட்ட ராகுல் நிலைமையை சமாளிக்க. ஓ.. என்னை பார்க்க இங்கேயே வந்துட்டீங்களா? என்றார். சளைக்காத தளபதி கழகத்தினர் நினைத்தால் கடலையும் தாண்டுவார்கள் எனக்கூறி வைக்கோல் அரிக்க வைத்தார்!

பேச்சை மாற்ற ராகுல், பாத்திங்களா! Mr. ஸ்டாலின். காஷ்மீர் அரசியல் நிலமை கவலைக்கிடமா இருக்கு என்றார். இந்தியாவில் காங்கிரஸ் நிலமையே கவலைக்கி டமாத்தான் இருக்கு என்று நினைத்து கொண்டு அதை ஆமோதிப்பது போல் சிரித்தார் தளபதி.!

சரி நீங்க ஏன் பிரதமர் பதவி வேட்பாளர் என்பதை மறுத்துட்டிங்க.! அதான் கூட பிறந்தவங்க யாரும் போட்டிக்கு இல்லையே என்றார் ஏக்கத்துடன் ஸ்டாலின்! "ஓட்டலோ குடிசையோ நமக்கு வெரைட்டியா சாப்பிடணும் அதுபோதும்" அண்ணனோ தம்பியோ இருந்தா அவங்களுக்கு வழி விட்டுருப்பேன் என்றார் ராகுல்.!

சட்டென இவருக்கு அண்ணனாவோ இல்ல இவர் நமக்கு தம்பி யாவோ பொறந்திருக்கக் கூடாதான்னு தளபதி கண்கலங்கினார். ஏன் அழறீங்கன்னு ராகுல் கேட்க.. "அன்னையின் பிள்ளைக்கு பதவி காத்திருக்கு... தந்தையின் பிள்ளைக்கு காத்திருப்பதே பதவியாக இருக்கு" என்றார் தளபதி. 

இந்த ரணகளத்திலும் ரைமிங்கா என ராகுல் வியந்து ஆறுதல் கூறினார்..கண்களை துடைத்து கொண்ட தளபதி"சரி என்ன தமிழகத்துல ஒட்டு மொத்தமா நிர்வாகிகளை மாத்திட்டீங்க" என கேட்க ஆமாங்க கோஷ்டி கானம் கூரைய பிய்க்குது...

பேசாமல் சத்யமூர்த்தி பவனை சரவணபவனா மாத்திடலாம்னு கூட நெனச்சதுண்டு புது இளைஞர் படையை கொண்டுவர ஆசைப் படுறேன் என்ற ராகுல் திடீரென... ஹேய்... உங்க கட்சிக்கு நீங்க தானே இளைஞரணி தலைவர் என்று கேட்க..

தளபதி வெட்கத் துடன் தலைகுனிந்து ஆம் என்றார்.nice very nice உங்க பேருக்கு முன்னாடி பட்டபேரு ஒண்ணு.. என்ன சொல்லுவாங்க.. அது ..அது. தளபதின்னு சொல்லுவாங்க...ஆனா நான் சொல்றேன் உண்மையில நீங்க தான் இளையதளபதி.. என்று விஜய்க்கு ஆப்பு வைத்தார் ஸ்டாலின்.

ஓ அவரா! முன்னாடி நம்பள மீட் பண்ணாரு படத்துல பஞ்ச் பேசுற ஆளை கட்சில வச்சா கட்சி பஞ்சராயிடும்னு வேணாம்னு சொல்லிட்டேன்.... 

ஆமாமா உங்களுக்கு பேசாத ஆள் தான் லாயக்கு என்று தளபதி நினைத்துகொள்ள

அடுத்த கோழி ரெடி என தோழி கூவ கட்டி தழுவி விடை பெற்றார்கள் இரு தளபதிகளும்...

கப்ஸா செய்திகளுக்காக புதுதில்லியில் இருந்து "சரடு" சரவணன்...


No comments:

Post a Comment