Friday 30 January 2015

அ.கி.பரந்தாமனாரின் நல்ல தமிழ்..

அ.கி.ப 

உந்தன், எந்தன் என்று உரைநடையிலும் பாட்டிலும் எழுதுகிறார்கள். உன்றன் (உன்+தன்) என்றும், என்றன் (என்+தன்) என்றும் எழுதுவது தான் சரி. பன்மையாக எழுத வேண்டுமென்றால் உந்தம்,எந்தம் என்று எழுதுக.

"என் தம்பி சட்டையும் என் சட்டையும் நனைந்தது" என்று எழுதுவது தவறு ; நனைந்தன என்று எழுத வேண்டும். நனைந்தன என்பது பன்மை வினைமுற்று. மக்கள்கள் என்பது பெருந்தவறு, ஏனெனில் மக்கள் என்பதே பன்மை.

நாயோ அல்லது நரியோ இங்கு வந்தது" என்று எழுதுகின்றனர். ஐய ஓகாரம் வரும் போது அல்லது" என்னுஞ்சொல் வேண்டுவதில்லை. நாயோ, நரியோ வந்தது என்று தான் எழுத வேண்டும். இது எல்லாம்" என்பது தவறு.. இவையெல்லாம் என்க.

'நெய்வேலி என்ற இடத்தில் நிலக்கரி கிடைக்கிறது' என்னும் வாக்கியத்தில் "என்ற" என்று எழுதாமல்"என்னும்"என்று எழுத வேண்டும். என்ற எனில் அது இறந்தகாலம்.! இன்று செய்திகள் வராது என்பது தவறு.. செய்திகள் வாரா என்பதே சரி.

முன்னூறு என்றால் முன் நூறு என்று பொருள் படும். முந்நூறு என்றால் தான் மூன்று நூறு என்று பொருள் படும். பால் + அபிஷேகம் = பாலபிஷேகம். இத்தொடரை பாலாபிஷேகம் என்றெழுதுவது மிகவும் தவறு.

#சொல்லுக்கு_முதலில்_வரும்_எழுத்துகள் : 12 உயிரெழுத்துகளும் சொல்லுக்கு முதலில் வரும். ங,ண,ழ,ள,ற, ன, ஆகிய எழுத்துகள் சொல்லுக்கு முதலில் வாரா."ங எனும் எழுத்து சொல்லுக்கு முதலில் பழங்காலத் தமிழில் வந்துள்ளது.

#சொல்லுக்கு_இடையில்_வராத_எழுத்து : ட்,ற் என்னும் எழுத்துகளுக்குப் பக்கத்தில் எந்த மெய்யும் வராது. (உதாரணம் : அதற்கு,முயற்சி,நட்பு,தட்பம்) "பார்ப்பதற்கு" - இச்சொல்லை நினைவில் வைத்துக் கொண்டால் இடையில் 'ர் என்னும் இடையின மெய்க்கு முன் வேறு மெய் வரும் என்றும், வல்லின ற்' என்னும் மெய்க்கு முன் வேறு மெய் வராது என்றும் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment