Saturday 31 January 2015

ஆதீனம் - உமாசங்கர்

மதுரை ஆதீனம் - உமாசங்கர் சந்திப்பு..

கப்ஸா செய்திகள்..

நேற்று மதுரைக்கு வந்திருந்த உமாசங்கர் சர்ச் என்று தவறுதலாக நினைத்துக் கொண்டு ஆதீன மடத்துக்குள் வந்துவிட்டார்.. எங்கே யேசு என்று அவர் விழிக்க இங்கு யேசு கிடையாது எல்லாம் ஈசு தான் என்றபடி ஆதீனம் அங்கு வர..

ஓ நீங்கள் தான் ஆதீனமா உங்களை சந்திக்க போகும் தகவலை யேசு எனக்குச் சொல்லவில்லையே என்றார் குழப்பத்துடன். அசராத ஆதீனம் சட்டென்று சொன்னார் ஆனால் நீங்கள் வருவதை சிவன் எனக்கு சொல்லிவிட்டாரே என்று.!

ஓ.. இன்று ஞாயிறு.! ஓய்வு நாளால்லவா அதான் கர்த்தர் வரவில்லை போலும் என அதைச் சமாளித்தார் உமா. அவரது சமயோஜிதத்தை மெச்சிய ஆதினம்"அதுசரி ஏன் மடத்துக்குள் வந்தீர்கள் சர்ச் என்று தவறுதலாக நினைத்து தானே என்றார்.

இல்லை இந்த தெருவில் வந்து சர்ச் எங்கே எனக்கேட்டேன் பொது மக்கள் உங்கள் மடத்தை தான் கை காட்டினார்கள், இங்கு தான் ஏகப்பட்ட "சர்ச்சுகள் "நடந்து இருக்கிறதே அந்த அர்த்தம் தெரியாமல் வந்துவிட்டேன் என்றார் நக்கலாக.!

சரி சரி அதெல்லாம் நித்தமும் ஆனந்தமாக இருக்க நினைத்த நாட்கள் அதை எல்லாம் இப்போது மறந்து விட்டேன். சரி உண்மையில் கர்த்தர் உங்கள் கனவில் வருகிறாரா.? எனக் கேட்டார் ஆதினம் சந்தேகத்துடன்.

உங்கள் கனவில் சிவன் வருவது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை என உமா பதிலளிக்க, இதற்கு திருடனுக்கு தேள் கொட்டிய முகபாவனையை ஆதீனம் பிரதிபலித்தார்.! சரி சரி..அதை விடுங்க உங்க கிட்ட ஒண்ணு கேக்கணும்.!

நீங்க உமாசங்கர் என்ற சிவனின் பெயரை வைத்துக் கொண்டு நீங்கள் இயேசு கனவில் வருவதாக சொன்னால் மக்கள் நம்புவர்களா.? என்று ஆதீனம் கேட்க
இந்த கேள்விக்கு உமாசங்கர் கொஞ்சமும் அசராமல்..

"நீங்க உங்க வாயால இளைய ஆதினமா நியமிச்ச ஆட்களை நீங்களே நீக்குனதை சிரிச்சுகிட்டே நம்புன மக்களுக்கு இது ஒண்ணும் அவ்ளோ பெரிய காமெடி இல்ல"என்று சந்தானம் ஸ்டைலில் பதில்சொன்னார்.!

அரசு அதிகாரியா இருக்க நீங்கள் இப்படி செய்யலாமா.? என்ற ஆதீனத்தின் கேள்விக்கு.. ஒரு மடாதிபதி நீங்க அரசியல் சார்ந்து பேசுறதை விட நான் ஒண்ணும் தவறா செஞ்சிடலை இது என் கர்த்தர் மேல் ஆணை என பதிலளித்தார் உமா.

ஆமா உத்திரகாண்ட் வெள்ளம் வரும்ன்னு கர்த்தர் உங்க கிட்ட சொன்னதை ஏன் முன்கூட்டியே சொல்லி மக்களை காப்பாத்தலை என ஆதினம் கிடுக்கிப்பிடி போட நீங்க கூட தான் அம்மா பிரதமர்ன்னு சிவன் சொன்னதா சொல்லி அது நடந்ததா.?

என பதிலுக்கு உமாவும் கிடுக்கிப்பிடி போட.. சரி நம்ம ரெண்டு பேரில யாருடைய சேவை மக்களுக்கு பெரிசுன்னு நினைக்கிறிங்க என்று ஆதினம் கேட்க..தேவன் மீது ஆணையாக என்னுடைய சேவை தான் மிகப் பெரியது என்றார் உமாசங்கர்.! 

அது எப்படி ஆச்சர்யத்துடன் ஆதீனம் கேட்க.. நீங்கள் உங்களைத் தேடி வரும் மக்களுக்கு ஞானப்பால் என பால் வழங்குகிறீர்கள்.. அது பால் உற்றுவது என்ற பொருளில் இறப்பதை குறிக்கும்.. ஆனால் நானோ எனது கையால் தொட்டு..

இறந்த உயிர்களை எழுப்புவேன் ஆகையால் நானே சிறந்தவன் என்று உமா கூற.. சிரிப்பை அடக்க முடியாத ஆதீனம் வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரிக்க ஆரம்பிக்க.. உமாசங்கர் கடுப்புடன் அங்கிருந்து வெளியேறுகிறார்

கப்ஸா செய்திகளுக்காக மதுரையில் இருந்து "சரடு"சரவணன்



No comments:

Post a Comment