#கிபி2067_நெல்லை
நெல்லை பாளையங்கோட்டை விமான நிலையத்தில் வந்திறங்கினான் முப்பிடாதி.. 50 ஆண்டுகளுக்கு முன் ஐரோப்பாவில் செட்டில் ஆனவன் இப்போது தான் மீண்டும் சொந்த ஊர் வருகிறான்..எவ்வளவு நாள் ஆச்சு நெல்லைக்கு வந்து சுற்றிலும் பார்த்தான் 50 வருடத்திற்கு முன் இருந்த நெல்லையா இது.? நியூயார்க் டைம் ஸ்கொயர் போல எங்கும் கட்டிடங்கள், டிஜிட்டல் லைட்டுகள், நெல்லை அல்வா கடைகள் பற்றிய எல்.ஈ.டி டிஸ்ப்ளேக்கள், வானில் வட்டமடிக்கும் ரோந்து ஹெலிகாப்டர்கள், ஊரே அறிவியல் வளர்ச்சியில் ஜொலித்தது.
நெல்லையப்பர் காந்திமதி அம்மன் ஆலயத்திற்கு நேர் மேலே வானில் இருந்து லேசர் கதிரில் அம்மனின் ஹாலோ கிராம் பிம்பம் ஒளிர்ந்து தரிசனம் தந்தது தன்னிச்சையாக விரல்களால் தாடையை டைப்படித்துக் கொண்டான் அவன் தச்சநல்லூர் போக வேண்டும்.. அதற்கு ஹெலி டாக்சிகள் இருப்பதாக ஏற்கனவே கூகுள் மூலம் அறிந்து புக் செய்திருந்தான்.. திடீரென அவன் ஆட்காட்டி விரல் ஆரஞ்சு நிறத்தில் ஒளிர்ந்தது ஆம் நோட்டிபிகேஷன்...
அவனது செல்போனின் புரொஜக்டர் உள்ளங் கையில் ஒளிர்ந்தது... எண் 2134NLHT Pilot : Balu.. Airway Gate 4 எனத்தெரிந்தது அவன் நின்றது கேட் 1 சற்று தொலைவில் தான் கேட்4 இருந்தது மெல்ல நடந்தான் 4 வது கேட்டில் போய் நின்று ரெபரன்ஸ் க்யூ ஆர் கோடை அங்குள்ள அக்சஸில் காட்ட கதவு அலிபாபா குகையாக திறந்தது.. நேரடியாக ஹெலி டாக்சியில் நுழைந்தான் அது ஒரு ஆட்டோ அளவில் விஸ்தாரமாக இருந்தது.
குஷன் சீட் பெல்ட்டுடன் ரம்மியமான ஸ்பிரே உறுத்தாத ஏசி எதிரே ஒரு திரை புரொஜக்ட் செய்து டிவி பார்க்க.. வெல்கம் சார் என்றார் பைலட் நேரம் இப்போது 8:35:21 விநாடிகள் நாம் 8:45:31 விநாடியில் தச்சநல்லூரில் இருப்போம் ஆர் யூ ரெடி என்றார். ஓகே என்றான் சீட் பெல்ட் ப்ளீஸ் சார் என்றவன் அடுத்த 5வது விநாடி ஹெலிடாக்சியை உயர்த்தினான்.. கீழே பருந்து பார்வையில் நெல்லை பிரம்மாண்ட எல்.ஈ.டி பேனல் போல தெரிந்தது.
வண்ண விளக்குகள் ஜொலிக்க முப்பிடாதியின் கண்ணுக்குள் ப்ளாஷபேக் ஓடியது ஊசி கோபுரம், பாளை மார்க்கெட், வண்ணாரப் பேட்டை, டவுண், நெல்லையப்பர் கோவில், குறுக்குத்துறை முருகன், சிந்துப்பூந்துறை, அந்த தாமிரபரணி குளியல் அட தாமிர பரணி ஆறு எங்கே கீழே பார்த்தான் தென்படவில்லை..வேறு பாதையில் பறக்கிறானோ?? பைலட்டை அழைத்தான்..
ஏம்ப்பா தாமிரபரணி ஆறு தாண்டிட்டோமா என்றான் இல்லை சார் இனிமே தான் அதோ தெரியுது பாருங்க என்றான் ஆவலுடன் கீழே பார்த்த முப்பிடாதி அதிர்ந்து போனான். மூன்றடி அகலத்தில் இரு புறமும் சிமெண்ட் கரைகள் கட்டப்பட்டு ஒரு நீளமான கால்வாய் தெரிந்தது.. அதிர்ச்சி மாறாமலேயே கேட்டான் இதுவா தாமிரபரணி.??? ஆமா சார் ஆனா இப்போ இதுக்குப் பேரு அக்வாஃபைனா என்றான்.
No comments:
Post a Comment