“சைவத்தை இழந்த மதுரை”
சாப்பாடுன்னா மதுரை தான்யா! அதை அடிச்சிக்க தமிழ்நாட்டில் ஒரு ஊரே இல்லன்னுபல பேர் சொல்லுவாங்க! அது வெள்ளையா இருக்கவன் பொய் சொல்ல மாட்டான்என்பதை நம்பினா மாதிரி! விதவிதமான அசைவ உணவுகளுக்கும் புரோட்டாகடைகளுக்கும் தள்ளுவண்டி & நடைபாதை இட்லி கடைகளுக்கும் மதுரை இன்றும் புகழ்பெற்ற ஊரு தான்! கறிதோசை, நண்டு ஆம்லெட், அயிரைமீன் குழம்பு..
வெங்காயக் குடல், விரால்மீன் ரோஸ்ட்னு வித விதமா அசைவத்தில் பட்டையை கிளப்பும்மதுரையில் இப்போ சைவ உணவுகளுக்கு ஏன் அந்தளவு முக்கியத்துவம் தரவில்லை! சைவத்தில் அந்தளவு வெரைட்டி இல்லியா? இல்ல மதுரை மக்கள் எல்லாம்அசைவத்துக்கு மாறிட்டாங்களா? அதெல்லாம் ஒன்றுமில்லை வித விதமான சைவ உணவு வகைகளிலும் ஒருகாலத்தில் தமிழ்நாட்டில் மதுரை தான் டாப்!
உண்மையில் சமணம் ஒழித்து சைவம் தழைத்த மாமதுரையில் இன்று சைவத்திற்குபஞ்சம் ஏற்பட்டுள்ளது! ஆம் புகழ் பெற்ற நல்ல சைவ ஓட்டல்கள் எதுவுமே தற்போதுமதுரையில் இல்லை என்பது தான் கசப்பான உண்மை. ஒரு காலத்தில் திண்டுக்கல் ரோடுஎன்று அழைக்கப்படும் நேதாஜி ரோட்டில் மாடர்ன் ரெஸ்டாரெண்டில் இருந்து எழும்சாம்பாரின் மணமே சாம்பிராணி போட்டது போல அத்தெருவெங்கும் மணக்கும்!
அதிகாலையில் ஃபில்டர் காபியின் மணம் அங்கு பகல் டியூட்டியிலிருக்கும். மாடர்ன்ரெஸ்டாரெண்ட் என்றாலே பலருக்கு இன்றும் நினைவில் ருசிப்பது மதுரை மல்லிபோன்ற ஆவி பறக்கும் மென் பஞ்சு இட்லிகளும் அதற்குத் தரும் பருப்பு சாம்பாரும், தாளிப்பு மணக்கும் தேங்காய் சட்னியும், வெங்காயச் சட்னியும், முறுகலான நெய்ரோஸ்ட்டும் ஆனியன்ரவா.. தோசையும், சூடான பூரியும், வெண்ணை போன்ற..
கிழங்கு மசாலாவும் பொன்னார் மேனியன் போல உளுந்தை அரைத்திசைத்த தங்க நிறஉளுந்து வடையும், நெய் மணக்கும் வெண் பொங்கலும் அடடா! அதிகாலையில்மீனாட்சியம்மனை கையெடுத்து தரிசிக்க நிற்கும் அதே கூட்டம் தரிசனம் முடிந்தகையோடு மாடர்ன் ரெஸ்டாரெண்ட் வாசலில் வந்து விதவிதமான சைவ உணவுகளுக்குகால் கடுக்க நிற்கும்! மாடர்ன் ரெஸ்டாரெண்ட் கூட்டத்தில் நிற்க விரும்பாதவர்கள்..
மேலமாசி வீதி உடுப்பி ஓட்டலுக்கு படை எடுப்பார்கள்! அதிகாலையிலேயே நெய் ஒழுக, வறுத்த முந்திரிகள், திராட்சைகள் தூவி கண்ணைப் பறிக்கும் ப்ளோரசெண்ட் ஆரஞ்சுநிறத்தில் அவர்கள் தரும் கேசரி இருக்கிறதே.. அதனால் தான் மதுரையை ஆண்டபாண்டிய மன்னர்களுக்கு கேசரி என்ற பெயர் வந்ததற்கு காரணம் என்றால் சட்டெனநம்பிவிடலாம்! ஒரு ப்ளேட் கேசரி ஒரு வெள்ளையப்பம், ஒரு ஃபில்டர் காபி..
இந்த மூன்றை மட்டுமே காலையில் உண்டு உயிர் வாழ்ந்த ஜீவன்கள் இன்றும் மதுரையில்தங்கள் உடலின் சர்க்கரை அளவை சரி பார்த்துக் கொண்டு நினைவில் அதை ருசித்துவாழ்ந்து கொண்டிருக்கின்றன! உடுப்பியின் சாம்பார் லேசாக இனிக்கும்! சாம்பாரைக்கொண்டே கடையின் பெயரைச் சொல்லுமளவுக்கு அந்த காலத்தில் மாடர்னும், உடுப்பியும் செட் தோசைகளாக இயங்கி வந்தன! எம்ஜிஆர் சிவாஜி ரசிகர்கள் போல..
இதற்கும் தனித்தனி ரசிகர்கள் இருந்தனர்.! மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அருகில்கோபு அய்யங்கார் கடை டெண்டுல்கர் இந்திய அணியில் ஆடிய போது உடனிருந்தஷேவாக் போல அதிரடி காட்டியது! கோபு அய்யங்காரின் நெய் மினு மினுக்கும் ரோஸ்ட், ஜீரா போளி, வெள்ளையப்பம், மிளகாய் சட்னி வகைகள் தனித்துவம் மிக்கவை. இந்தஉணவுகளின் மீது ஆசை வந்துவிடக்கூடாது என்பதற்காகவே இந்தக் கடைக்கு..
முதுகு காட்டி கோவிலில் அம்மன் வீற்றிருப்பதாக ஐதீகம் என்றால் நம்பிவிடலாம். பட்டணம் பக்கோடா, காரக்கறி கிழங்கு, மிளகு சேவு, சீரணி, தவள வடை, இனிப்புஅப்பம், முட்டாசு, நெய் இட்லி சாம்பார், மெது போண்டா, கீரை வடை இப்படி மதுரையின்புகழ் பெற்ற சைவ ஓட்டல்களும் அந்த மெனுக்களும் உணவுகளும் ஏராளம்! சிற்றன்னங்கள் எனப்படும் தக்காளி, லெமன், புளியோதரை, வெண் பொங்கல்..
மல்லி சாதம் போன்ற சாத வகைகளுக்கு என்றே சவுராஷ்டிரா நண்பர்கள் வசிக்கும்மஹால், அலங்கார் தியேட்டர், தினமணி டாக்கீஸ் பகுதிகளில் பல பொங்கல் கடைகள்துவங்கி அதில் சில இன்றும் தங்களது உணவுச் சேவையை ஆற்றி வருகின்றன. இத்தனைஉணவு களேபரங்களுக்கு நடுவில் 1950களில் சத்தமே இல்லாமல் மேலகோபுரத்தெருவில் மதுரை நாக்குகளை சமோசா, கச்சோரி, வித விதமான..
சப்பாத்தி வகைகள், சப்ஜி, மசாலா டீ என வடநாட்டு உணவுகளைக் கொடுத்து தன்வசப்படுத்தி இருந்தது மதுரை மண்ணுக்கு துளியும் சம்மந்தம் இல்லாத டெல்லி வாலாஸ்வீட்ஸ்! பின்னாளில் இதே மாடர்ன் ரெஸ்டாரண்ட்டுக்கும் உடுப்பி ஓட்டலுக்கும் நடுவில்வந்து கம்பீரமாக வந்து அமர்ந்த ‘ஆரியபவன் உணவகத்தின் தாய்வீடு தான் டெல்லிவாலா! ஆரியபவன் மதுரையில் துவங்கப்பட்ட பின்பு தான் ஸ்வீட்டுகளில்..
அல்வா, லட்டு, மைசூர்பாக், ஜிலேபி தவிர வேறு இனிப்புகளும் இருக்கின்றன என மதுரைமக்கள் ஞானம் பெற்றனர். ஆரியபவன் நோக்கி படையெடுத்தனர். பட்டிக் காட்டான்மிட்டாய் கடையை பார்த்தது போன்ற எனும் பழமொழி உண்மையானது! இட்லி, பொங்கல், தோசை என்று இல்லாது ஆலு சப்பாத்தி, கீரை சப்பாத்தி, முள்ளங்கிசப்பாத்தி என சப்பாத்திகளில் பல வகை, பாலிலேயே அரிசியை வேக விட்டு செய்யும்..
பால் பொங்கல், அரைத்துவிட்ட சாம்பார், பெசரட் & செட் தோசைகள், பாண்டியநாட்டில் சோளாப்பூரி & சென்னா என்று ஆரியபவன் வெரைட்டி வெரைட்டியாக பலஉணவுகளை அறிமுகப்படுத்தியது! இதுவரை ஸ்வீட் காரம் காபி எனில் உடுப்பியின்கேசரியும், வெள்ளையப்பமும், ஃபில்டர் காபியும் குடித்துப் பழகிய மதுரை மக்கள்இப்போது பாஸந்தியும், சமோசாவும், மசாலாபாலும் என்று ஆரியபவனுக்கு..
ஆதரவு தந்து தமிழருவியானார்கள். ஆரியபவன் ஸ்வீட்ஸ், செயின் ஓட்டல்கள் எனவிரிவடைந்து பை நைட் என்று தூங்கா நகரின் இமையை இழுத்துப் பிடித்து நிறுத்தியது! நவரத்தின குருமாவும், மில்க் பரோட்டாவும், பால் பொங்கலும், சாம்பார் வடையும், தயிர்வடையும், ஸ்பெஷல் ரவா எனப்படும் ஆனியனும் மசாலாவும் கலந்த மெகா முருகல் ரவாதோசையும், ஆந்திர பெசரட் தோசையும் அதற்கு உப்புமாவும்..
கேரட் குருமா செட் தோசையும் மதுரை நாவுகளை பல ஆண்டுகளுக்கு அடிமைப்படுத்திவைத்திருந்தன! மதிய சாப்பாடெல்லாம் தெய்வ லெவலில் இருக்கும். 1989இல் ஒருஅன்லிமிடெட் சாப்பாடு ₹20 தான்! நெய்யில் ஆரம்பித்து இறுதியில் பாயாசம் வரைஅப்படி அத்தனை மெனுக்கள்! இடையில் இதே உடுப்பி தங்கள் கடையைஆரியபவனிடம் தந்துவிட்டு தங்கள் கொடியை வாலண்டியராக இறக்கிக் கொண்டனர்!
அந்த இடத்தில் ஆரியபவன் தங்களது மதிய மீல்ஸ் செக்ஷனை ஆரம்பித்து வெகு நாட்கள்தம் வெற்றிக் கொடியை பசி போக்க பறக்கவிட்டனர்! மதுரையில் ஆரியபவன் எனும்கோஹினூர் வைரத்தின் பேரொளியிலும் மனோரமா ஓட்டல், பெரியார் பேருந்துநிலையம் அருகில் கீதா கஃபே, கே.பி.எஸ், அசோக் பவன், வசந்த பவன், பரசுராம், குருபிரசாத் என தனக்கென்று தனித்துவ உணவு வகைகளை கொண்ட பல சைவ..
ஓட்டல் கடைகள் மினுக்கிட்டன! உடுப்பி ஓட்டல் போலவே ஆரியபவனின் வெற்றிக் கொடியும் ஓர் நாள் கீழிறிங்கியது.! அவர்கள் இப்போது அந்தத் தொழிலிலேயே இல்லை! மாடர்ன் ரெஸ்டாரெண்ட் மட்டும் இன்னும் பழைய ஜமீனாக வலம் வருகிறது! கோபுஅய்யங்கார் கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் சரணடைய, மனோரமாவும் இப்போதுகைமாறிவிட்டது! இன்று மதுரையில் சபரிஷ், டெம்பிள் சிட்டி, நடிகர்..
பரோட்டா சூரியின் அம்மன் & அய்யன் போன்ற உணவங்கள் பேருக்கு இருந்தாலும், அந்தகாலத்து உடுப்பி, மாடர்ன் போல அல்லது சுனாமியாய் வந்த ஆரியபவன் போல உயர்தரமான சைவ ஓட்டல்களோ அல்லது விதவிதமான ருசி மிகுந்த புதிய சைவமெனுக்களோ மதுரையில் வருவது அருகிவிட்டது! கோவை போல பாரம்பரியம் மிக்கசிறந்த சைவ உணவுகளுக்கு ஒரு நல்ல ஓட்டல் கடை மதுரையில் தற்போது இல்லை!
இதுவே நெஞ்சம் கனக்கும் உண்மையாகும்!
விடுபட்டு போனவை : சோலைமலை தியேட்டர் அருகே கெளரி கிருஷ்ணா, கோரிப்பாளையம் கிங் மெட்ரோ, பீபீ குளம் நாராயணா, பழைய திருவள்ளுவர் போக்குவரத்து பஸ் ஸ்டாண்ட் அருகில் அசோக் பவன்.. மஹால் ரோட்டில் இருந்த வாஸன்டிபன் ஹோம்..
{இதே காலகட்டத்தில் மதுரையில் இருந்த வேறு சைவ ஓட்டல்களின் பெயர்கள்இப்பதிவில் விட்டுப் போயிருந்தால் விபரம் அறிந்தவர்கள் கமெண்ட்டில் தெரிவிக்கவும்}
No comments:
Post a Comment