#நாஸ்தால்ஜியா
[சேலத்தின் அந்தக் கால ஃபேமஸ் ஓட்டல்கள்]
சேலம்! அதியற்புத உணவுப் பிரியர்கள் வாழும் ஊர்! இயல்பிலேயே சேலம் மக்களுக்குநாவில் ருசி மொட்டுகள் ரொம்பவும் ஷார்ப்! சேலத்தின் ஸ்பெஷலான உணவுகளைப் பற்றிஏராளமாக எழுதிக் கொண்டே போகலாம்! இந்தப் பதிவில் அந்தக் கால சேலத்துமக்களை தமது அபார சுவையால் கட்டிப் போட்ட ஓட்டல்களைப் பற்றி பார்ப்போமா! ஏறுங்க இந்த டைம் மெஷினில்…
சேலத்தின் சைவ ஓட்டல்களில் பெரும் புகழ் பெற்ற ஓட்டல் வில்வாத்திரி பவன்! முதல்அக்ரஹாரத்தில் இராஜகணபதி கோவிலின் இருபுறமும் ஒரு புறம் நரசுஸ் காபியின்மணம் வீசும் இன்னொரு பக்கம் வில்வாத்திரியின் சாம்பார் மணம் வீசும்! இந்தஅற்புதமான மணங்களை தினசரி அனுபவிக்கத்தான் விநாயகர் இராஜகணபதியாகஇங்கே வந்து அமர்ந்துவிட்டார் என்பேன்!
சூரியன் உதிக்கும் முன் காலை 4 மணிக்கே வில்வாத்திரி விழித்து எழும்! 120 பேர்அமரும் விசாலமான டைனிங்! அதிகாலை 4:30 மணிக்கு 120 பேரை முதல் பேட்ஜாககாபி சாப்பிட அனுமதித்து பரிமாறுவார்கள்! அடுத்த பேட்ஜ் வெளியே காபி மணத்தைநுகர்ந்தபடி அரக்க பரக்க காத்திருக்கும்! ஸ்டிராங்கா, சர்க்கரை கம்மியா, மீடியமா, லைட்டா என கலவையாக குரல்கள் ஒலிக்கும்!
4:30 மணிக்கு ஆரம்பித்த காபிக்கடை 6:30க்கு டிபன் வகைகள் துவங்கும் வரை களைகட்டும்! காலையில் முதலில் நெய்யில் தாளித்த மிளகும், சீரகமும், முந்திரியும் போட்டகுழைவான வெண்பொங்கல் கரண்டியில் அள்ளி இலையில் வைத்தால் தள தளன்னுகுலுங்கி விழும்! பரங்கிக்காயும் சின்ன வெங்காயமும் போட்ட அரைத்துவிட்ட சாம்பார்கொத்துமல்லி மணக்க வரும்!
இந்த சாம்பாரில் குழைந்த துவரம் பருப்பு இறைவனைப் போல யாருக்குமே அகப்படாது! பரங்கி & சின்ன வெங்காயத்தின் மெல் இனிப்பும் பொங்கலின் மிளகோடு இணையும்போது அடடா நாவில் நவரசமும் ஊறும்! பொங்கலும் சூடாக சாம்பாரும் சூடாக கையில்வெண்ணெய் போலக் குழையும்! அவ்வப்போது கடிபடும் முந்திரி இன்னொரு அற்புதருசியனுபவத்தை நாவில் வழங்கும்!
அடுத்து இதற்கு தரும் தேங்காய் சட்னி! பொட்டுக் கடலையும் தேங்காயும் சரியானகாம்போவில் சேர்த்து சிறிது இஞ்சி & புளி சேர்த்து அரைத்த தேங்காய் சட்னி! மணக்கமணக்க சிறிய சன்ன கடுகு போட்ட தாளிப்புடன் கிடைக்கும்! சட்னி ஊற்றும் போதேதாளிப்பு மணம் நாசியை வருடும்! அன்று மற்ற சட்னி வகைகள் கிடையாது! இந்தக்காம்போவில் வைக்கும் மெதுவடை! அடடா!
இன்றைய டோனட் சைஸில் பெரிதாக இருக்கும்! ஒன்லி ஹீரோ தான் எனும்விருச்சிககாந்த் போல இதில் ஒன்லி உளுந்து மட்டுமே! அரிசி / கார்ன் மாவுகலப்படங்கள் கிடையாது! மாவுடன் சி.வெங்காயம், துருவிய பச்சை, மிளகாய் & இஞ்சி, மிளகு சேர்த்து சுடும் வடை! வெளியே கிரிஸ்பியாகவும் உள்ளே சாஃப்டாகவும் எதிரெதிர்குணமுள்ள டபுள் ஹீரோ போல ருசியில் அசத்தும்!
இதே வடையை சாம்பாரில் போட்டு சாம்பார் வடையாகத் தருவார்கள்! சாம்பாரை குடித்தவடை போஷாக்காக இருக்கும்! ஒரு சாம்பார் வடையும் ஒரு பில்டர் காபியும் போதும் 3 மணி நேரம் பசிக்காதுன்னு ப்ரீத்திக்கு தரும் கியாரண்டியை விட 2 மடங்குகியாரண்டியை அன்றைய சேலம் வாசிகள் வழங்கினார்கள்! அடுத்து இட்லி, பூரி, தோசை, ரோஸ்ட் வகைகள் எல்லாமே..
வில்வாத்திரியின் சாம்பார் சட்னியின் துணையால் அற்புத ருசியில் இருக்கும்! புரோட்டா, சப்பாத்தி எல்லாம் அப்போது இல்லை! அந்த வட இந்திய வகைகளுக்குப் புகழ் பெற்றஆரியபவனை வில்வாத்திரி பக்கத்திலேயே துவங்கினார்கள்! (என் அப்பா வேலை பார்த்தகடை) வில்வாத்திரி அருகில் ஆரியபவன் வந்ததும் ஸ்வீட் மணத்தையும் நுகர்ந்து கண்பதிபப்பா மோர்யா பாடினார் ராஜகணபதி!
சேலம் கஃபேன்னு டவுன் போலீஸ் ஸ்டேஷன் பக்கம் ஒரு கடை (இன்றைய தங்கமயில்கடை) அது சின்ன வில்வாத்திரி என்று அழைக்கப்படும் கடை! அன்றைக்கு அதுவும் ஒருபுகழ் பெற்ற ஓட்டலாகும்! பேலஸ் தியேட்டர் எதிரில் சிவசக்தி கந்த விநாயகா ஓட்டல்னுப்ளைன் ஊத்தப்பத்திற்கு புகழ் பெற்ற ஒரு கடை இருந்தது! சேலத்தில் அந்தக் கடைதோசையை அடிச்சிக்க இன்று வரை ஆளில்லை! தோசை சங்கு சக்கரம் போல உருளும்!
அந்தக் கடை ஓனர் பெயர் சண்முகம்! அந்த பேலஸ் தியேட்டரை ஒட்டியே விநாயகாஓட்டல் இருந்தது! என் அப்பாவின் நண்பரான வீரப்பன் மாமா நடத்திய ஓட்டல் அது! கிச்சடி, பூரிக்கு மிகவும் புகழ் பெற்ற ஓட்டல்! பள்ளியில் எனது NCC காலத்தில் இந்தக்கடை கிச்சடி & சாம்பாரும், பூரியும் தான் வரும்! இன்று நினைத்தாலும் ருசி நாவில்உணர முடிகிறது! பேலஸ் தியேட்டரில் இருந்து டவுன் ரயில் நிலையம் செல்லும்ரோட்டில்..
ஶ்ரீகிருஷ்ணா (இன்றும் இருக்கிறது) எல்லா டிபன் வகைகளுக்கும், வடை, பஜ்ஜி, போண்டா வகைகளுக்கும் புகழ் பெற்ற ஓட்டல்! இந்தக் கடையின் ரவா தோசைஅவ்வளவு ஃபேமஸ்! செவ்வாய் பேட்டை தீயணைப்பு நிலையம் அருகில் இருந்த இந்திராகேப் “சட்னி ரோஸ்ட்” சேலத்தின் அன்றைய சிக்னேச்சர் உணவாகும்! சேலம் லீ பஜார்சத்திரத்தில் அன்னபூர்ணா.!
(மைசூர் போண்டா & மெது போண்டா ஃபேமஸ்) செவ்வாய் பேட்டை மாரியம்மன்கோவில் அருகில் கீதா கேப்.. இந்தக் கடையின் தயிர் வடையை சாப்பிடாதசெவ்வாய்பேட்டை வாசிகளை செவ்வாய் கிரகத்தில் மட்டும் தான் காண முடியும்! இந்தலிஸ்டில் எங்க கடையான ராஜகணபதி ஸ்வீட்சின் நெய் ரோஸ்ட்டும், பால் அல்வாவும், ஆனியன் பக்கோடாவும் இருந்ததுன்னு சொல்லிக்கிறதில் எங்க பரம்பரைக்கே பெருமை!
அசைவத்தில் அன்று பிரியாணிக்கு புகழ் பெற்ற கடை பாம்பே சுந்தரவிலாஸ்! பால்மார்க்கெட் போகும் வழியில் இருந்தது! அங்கேயே பராசக்தி, அம்பிகா போன்ற பிரியாணிஓட்டல்களும் அன்று சேலத்தில் அசைவச் சேவை ஆற்றின! சில மிலிடெரி ஓட்டல்களும்இதில் உண்டு! இத்தனை சிறப்பான உணவுகளை வழங்கிய என்னுடைய சேலம் தான்இன்று.. சரி சரி விடுங்க!
{இந்த லிஸ்டில் ஈஸ்வரன் கோவில் திருப்பத்தின் எதிரே உள்ள சந்திரா கஃபே & முள்ளுவாடி கேட் லக்ஷ்மிபவனை மறந்துட்டேன்! இங்கு நான் சொல்ல மறந்த அல்லதுஉங்களுக்குத் தெரிந்த சேலம் உணவகங்களை நீங்களும் சொல்லலாம்! குறைந்தது 40 ஆண்டு கால பழமையாவது அதுக்கு இருக்கணும்}
No comments:
Post a Comment