ஆசான் சுஜாதா பாணியில் சொல்வதென்றால் இந்த வஸ்து ஒரு ஸ்வீட் லாகிரி! நிகோடின்பழக்கம் போல இந்த போளியின் ருசியை நம் நாக்கு தேடும் அளவிற்கு பொல்லாதது! தின்னு கெட்ட மதுரைக்காரர்களின் கண்டுபிடிப்பே இந்த ஜீரா தோசை! பலகாரப் பந்திஎன்றாலே பாண்டியநாடு தான் என்பது திருமலை நாயக்கர் காலத்தில் ஆரம்பமானது! இதற்கு அவரது தொந்தியே சான்றாகும்!
நாயக்கர் காலத்துக்கு முன்பு அரிசியின் பயனே குறைவு தான்! கேப்பையும், கம்பும், திணையும், கிழங்கும், வெல்லமும் தான் பாண்டிய நாட்டின் உணவுகளாகும்! அரிசி வந்தபின்பு புட்டு எனும் பலகாரம் ருசிமிகுந்ததாக இருந்தது! அந்த புட்டுக்கு யூடியூபர்கள்போல சிவனே மதுரைக்கு வந்து மண் சுமந்து பிரம்படி வாங்கி அதற்கு தனதுதிருவிளையாடல் சானலில் ரிவ்யூ அளித்துள்ளார்!
திருமலை நாயக்க மன்னர்களுக்கு வருவோம்! நாயக்க மன்னர்கள் போஜனப்ரியவம்சத்தை சேர்ந்தவர்கள்! தினசரி 8வகை கூட்டுப் பொரியல் இருந்தால் தான் சோறேஉள்ளே இறங்குமாம்! உணவு வகைகள் மட்டுமின்றி விதவிதமான பலகாரங்களும்அவர்களது மெனுவில் தினமும் இடம் பெறும்! இன்றைய மதுரையின் உணவுக்கலாச்சாரம் நாயக்க மன்னர்களிடம் இருந்த தொடர்ச்சியே ஆகும்!
நாயக்க மன்னர்கள் காலத்தில் தான் சித்திரைத் திருவிழா சித்திரை மாதத்தில்கொண்டாடப்பட்டது! அதற்கு முன் தை மாதம் மீனாட்சி திருமணமும், மாசியில்தேரோட்டமும், சித்திரையில் அழகர் ஆற்றில் இறங்குவதும் மூன்று தனித் தனிவிழாக்களாக கொண்டாடப்பட்டன! இந்த மூன்று ஒத்த ரோசாக்களையும் ஒரே சித்திரைமாத பேக்கில் த்ரீ ரோஸஸ் ஆக்கியவர் நமது மன்னர் திருமலை நாயக்கர்!
பண்டிகைகள் மட்டுமின்றி பலவித பண்டங்களையும் மதுரைக்கு கொண்டுவந்தார்மாமன்னர்! சுசீயம், அப்பம், ஆம வடை, தவல வடை, தவால் வடை (இரண்டும் வெவ்வேறு) போண்டா, போளி வகைகள் அனைத்தும் நாயக்கர் காலத்தில் மதுரைக்குள் காலடிஎடுத்து வைத்தவையே! உலக வரலாற்றில் முதல் முறையாக நாட்டை ஆண்டு கொண்டேஅதிக வடைகளைச் சுட்டது நாயக்க மன்னர்களே!
ஜீரா போளியானது நாயக்க மன்னர்களால் விரும்பி சாப்பிடப்பட்ட உணவுகளில்ஒன்றாகும்! ஜீரா போளி மட்டுமின்றி பருப்பு போளி, தேங்காய் போளி, வெல்ல போளி, பால் போளி, பன்னீர் போளி, கல்கண்டு போளி, குல்கந்து போளி என ஏராளமான போளிவகைகள் சமைக்கப்பட்டன! ஆம் இந்த மன்னர்களுக்கு அந்தப் புரத்தில் தோழிகளும், அடுப்பங்கரையில் போளிகளும் மிக அதிகம்!
அம்புட்டு ஒணக்கையா சாப்பிட்டு இருக்காங்க! தெலுங்கில் மதுரா என்றால் இனிப்புன்னுஅர்த்தம். அதனால் பொருத்தமாக இதனை மதுரையில் அறிமுகம் செய்தனர்! மன்னர்களுக்கு பால், சர்க்கரை கலந்து தரப்பட்ட இந்த போளி பொது மக்களிடையேவரும் போது சற்று செய்முறையில் மாறி ஜீரா போளியாக வடிவம் எடுத்தது.! போளிக்குமைதா தான் பெஸ்ட் கோதுமை நன்றாக இருக்காது!
அரைக் கம்பி பதம் வரும்படி சர்க்கரையில் ஜீராவை காய்ச்சிவிட்டு பின் மைதாவில்முந்திரியை விழுதாக அரைத்து சேர்த்து இவற்றை மாவாக பிசைந்து எண்ணெய் தடவி 1 மணி நேரம் ஊற வைத்து அதை சிறுசிறு உருண்டைகளாக உருட்டிப் பிடித்து ஒவ்வொருஉருண்டையையும் மெல்லிய தோசை போல கைகளால் தட்டி எண்ணெய்யில் பொரித்துஎடுத்து தனியே வைக்கவேண்டும்!
பிறகு பொரித்த போளியை ஜீராவில் போடணும். இந்த போளி மாவை குஷ்பு போலபோஷாக்காக தட்டி விடாமல் இலியானா போல ஸ்லிம்மாக தட்டணும்! அப்போ தான்போளி ஜீராவில் நன்கு ஊறி ஓரளவு “நூ காவாலய்யா” தமன்னா ஸைஸில் தயாராகும்! தேய்த்த மாவு மெலிசாக இல்லாமல் சிறிது தடிமனாக இருந்தால் ஜீராவும் போளியில்சரியாகப் பரவாமல் ஆங்காங்கே தேங்கி நிற்கும்!
குறைந்தது 2 மணி நேரமாவது போளி ஜீராவில் குளித்தால் ஃபிரஷ் ஆகிவிடும்! ஜீராவைகாய்ச்சிய பின் அதில் ஏலக்காய், குங்குமப்பூ தூவுதல் கூடுதல் சிறப்பு! மாவு பிசையும்போதே கேசரி பவுடர் ஒரு சிட்டிகை தூவி பிசைந்தால் ஜீரா போளி வாயில் வண்ணமாகஇனிக்கும்! துருவிய முந்திரி, பிஸ்தா, நட்ஸ், வறுத்த தேங்காய் துருவல், ட்ரூ பிஸ்கெட்மீது சர்க்கரை போன்ற துருவல்களை..
ஊறிய போளி மீது மழைத் தூறல் போல தூவுவது இதற்கு செய்யும் முதல் மரியாதையாகும்! போளி சூடாக சாப்பிடும் போது ஒரு ருசியிலும் நன்கு ஊறிய பின்பு சாப்பிடும் போது ஒருருசியிலும் இருக்கும்! பொரிக்கும் போது வட்டமாகவும் ஊறிய பின்பு மடித்தும் விடலாம்! ஜீராவில் நன்கு ஊறியிருக்கும் போளியை தட்டில் பரப்பி நாம் கேட்டதும் சூடாக ஜீராவைஅதன்மீது ஊற்றித் தருவார்கள்.
ஜீரா ஒழுக அதைச் சாப்பிடுவது இன்னும் இன்பமாக இருக்கும். படிக்கும் போதே நமதுநாக்கு ஊறுதில்லையா! மதுரையில் இன்றும் பல இடங்களில் இது கிடைத்தாலும் கோபுஅய்யங்கார் கடை ஜீரா போளிக்கு தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது! திருப்பதி தரிசனம்போல கடை வாசலில் வந்து காத்திருந்து ஜீரா வழிய வழிய சூடான ஜீரா போளியும், மிளகாய் சட்னி வைத்து ஒரு வெள்ளையப்பமும்..
ஒரு ஃபில்டர் காபியும் சாப்பிட்டு விட்டு இதுதான்யா சொர்க்கம்னு உயிர் வாழும்போதேகெத்தா சொல்லுவாய்ங்க நம்ம மதுரையன்ஸ்!
No comments:
Post a Comment