🎺 ராஜ (ஜா) வாத்தியம் 🎷
மன்றம் வந்த தென்றலுக்கு பாடலின் முதல் பல்லவியின் இறுதியில் SPB மஞ்சம் வரநெஞ்சம் இல்லையோ அன்பே அன்பே என முடித்தவுடன் 🎵 பாபபபாங் 🎶 எனகம்பீரமாக எழும் டிரம்பட் ஒலி நினைவிருக்கிறதா! ஒவ்வொரு ரசிகனின் மனம் என்னும்டேப் ரிகார்டரில் பதிவாகியிருக்கும் இசை அல்லவா அது! டிரம்பட் எனும் வாத்தியக்கருவி இன்றைய கீபோர்டை விட எளியது!
இந்தியாவில் அதிகமாக பள்ளி பேண்டுகளில் கட்டாயம் இடம் பெற்றிருக்கும் கருவிடிரம்பட்! இரயில் கிளம்புவது போல பாங்ங்ங் என்று கனமாக ஒலிக்கும்! அதன் ஒலிஎப்போதும் கம்பீரமாகவே இருக்கும்!டிரம்பட் இசையை சினிமாவில் அதிகபாடல்களுக்குத் தந்தவர் இளையராஜா மட்டுமே! அதில் ஒரு சில பாடல்களை இங்கேபார்க்கலாம்! ராஜாவின் காலத்தில் இதற்கு முன்பு பல பாடல்கள்..
இருந்தாலும் மைக்கேல் மதன காமராஜன் படத்தில் வரும் ரம்பம்பம் பாடலிலிருந்துவருவோம் அற்புதமான துள்ளல் பாடல் அது! பாடலின் துவக்க இசையில் பேங்கோஸ் & கிடார் இசை ஒலிக்கும்! கமல் தீயணைப்பு வீரர் உடையில் அந்த வாகனத்தில் ஆடிக்கொண்டே வருவார்! டக்கென அந்த வண்டி நின்று அவர் வண்ண ஆடைக்கு மாறுவார்! அந்த இடத்தில் ரிலே ரேஸ் போல கிடாரிடம் இருந்து..
தன் இடத்தை அழகாக எடுத்துக் கொள்ளும் டிரம்பெட்! 🎵 ப்பேங்.. பபப்பேங்.. 🎶 என்றுஒலிக்க கமல் சுழன்று திரும்புவார் அங்கிருந்து பல்லவியில் எஸ்.பி.பி குரல் ஒலிக்கும்வரை இந்த டிரம்பட் இசையே ராஜ(ஜா) நடையில் அழைத்து செல்லும்! பல்லவிமுடிந்ததும் மீண்டும் முதல் இண்டர் லூடில் டிரம்பட் ராஜ்ஜியம் துள்ளலுடன் கம்பீரமாகஆரம்பமாகும்! இண்டர்லூட் முழுக்க டிரம்பெட் கமலுடன்..
இணைந்து ஆடி இருக்கும்! முதல் சரணம் “நேரம் வந்தாச்சு நானும் நட்டாச்சு காதல்கொடி” என்ற வரிகள் முடிந்ததும் சின்ன ஃபில்லராக 🎵 பேபபப்பேங் 🎶 என பாடலோடுவந்து கொண்டே இருக்கும்! இப் பாடலில் நடனம் ஆடுவது கமல் & குஷ்பு! கமல் இந்தடிரம்பட் இசைக்கு இந்த பாடலிலேயே ஒரு மரியாதை செய்திருப்பார்! இந்தப் பாடல்வரிகள் ஒலிக்கும் போது நடனமாடும் குஷ்பு கையில் ஒரு..
டிரம்பட்டை தந்திருப்பார்! இந்த இசையை குஷ்புவே வாசித்து பிறகு டிரம்பட்டை குஷ்புகமலிடம் தருவார். நான் சொன்ன ரிலே ரேஸ் போல! இது கமலின் ரசனையானயோசனையாக இருக்கலாம்! 2 வது இண்டர்லூடில் டிரம்பட் இசை சுனாமியாய் சுழலும்! கமல் கெளபாய் தொப்பி அணிந்து அவரது ஸ்டைலில் துள்ளி குதிப்பார்! அந்த இடத்தில்டிரம்பட் 🎵 பபபப்பாங் 🎶 என்று துவங்கி அந்த இசை..
சுழல் போல சுழல ஆரம்பிக்கும்! பாடலின் நடன அமைப்பும் இந்த இசைக்கு ஏற்றதுபோல சுற்றிச் சுற்றி ஆடுவார்கள்! இந்தப் பாடலில் இன்னொரு ஹீரோ டிரம்பட் தான்! ராஜா எப்போதும் கமல் படங்களில் டிரம்பட் இசையை அதிகம் வைத்திருப்பார்! அது ஏன்தெரியுமா? எனக்கு குறும்பான ஒரு காரணம் தெரிகிறது! டிரம்பட் இசைக்கும்கலைஞர்களுக்குத் தெரியும் அதை வாசிக்கும் போது ஊதுவது..
போல தெரிந்தாலும், டிரம்பட்டின் வட்டமான வாய்ப் பகுதியில் நம் உதட்டைக் குவித்துமுத்தமிடுவது போல உதட்டில் அழுத்தி ஊத வேண்டும்! அதனால் தான் முத்த நாயகனுக்குஇந்த சத்த வாத்தியத்து இசையை ராஜா தருகிறார்னு நினைக்கிறேன்! கமல் + முத்தம் + டிரம்பட் இந்த மூன்றையும் வைத்து ஒரு பாடலில் இசை ராஜாங்கமே ராஜாநடத்தியிருப்பார் என்றால் அது ஜப்பானில் கல்யாணராமன்..
படத்தில் வரும் “அப்பப்பா தித்திக்கும் உந்தன் முத்தம்” பாடலைச் சொல்லலாம்! எஸ்பிபியே இந்தப் பாடலை நான் டிரம்பட்டோடு சேர்ந்து பாடினேன் என்பார்! ஆம்அப்பாடல் முழுவதும் எஸ்பிபி பாடாத இடத்திலும் பாடிய பாடகர் டிரம்பட்டே! பாடலின்துவக்கத்தில் டிரம்ஸ் மற்றும் கிடார் இசை ஒலிக்க டிரம்பட் கம்பீரமாக 🎵 பேங்பெபபேங்துவங்கும் 🎶 இந்த இசை ஒலிக்கும் காட்சியில்..
கமல் தடுமாறி கீழே விழுவது போல வரும்! ஆனால் பாடல் துவங்கி இறுதி வரைதடுமாற்றம் இன்றி பயணிப்பது இந்த டிரம்பட் இசையே! இப்பாடலில் டிரம்பெட்டின்இசையை ஒரு யானைக் கூட்டமாக நினைத்துக் கொள்ளலாம்! அந்த கூட்டத்தில்எப்போதும் துறு துறுவென ஒரு குட்டியானை தென்படும்! அதன் சேட்டைகள் நம்மைமகிழ்விக்கும்! இந்தப் பாடல் அதிவேக தாளக்கட்டு உள்ள பாடல்!
இதில் ஃபில்லர்ஸ் இசை எங்கே வைப்பது? “அப்பப்பா தித்திக்கும் உந்தன் முத்தம்பொன் முத்தம்” என்ற முதல் வரிக்கும் மோட்சங்கள் சித்திக்கும் எனும் இரண்டாம்வரிக்கும் இடையே இருக்கும் இடை வெளி அரை விநாடிக்கும் சற்று குறைவே! ஆனால்நம் இளையராஜா எனும் இசை ராட்சசன் டிரம்பெட் இசையை அந்த சுட்டி யானையாக்கிஅந்த அரை விநாடிக்குள் நுழைத்து நம்மை ரசிக்க வைத்திருப்பார்!
..தித்திக்கும் உந்தன் முத்தம் என்ற வரி முடிய 🎵பேங் 🎶 அடுத்து வெட்கம் என்றுமுடிய🎵 பபாங் 🎶 ஆனந்தம் 🎵பாங் 🎶 பேரின்பம் 🎵 பபாங்🎶 என குட்டி யானையின்செல்லப் பிளிறலாக வரிக்கு வரி டிரம்பட்டை ஒலிக்கவிட்டது இசைக்கு பேரழகு! இப்பாடலின் பல்லவி முழுவதும் குட்டி யானையாய் SPB யோடு பாடிக் கொண்டே வரும்டிரெம்பட் முதல் இண்டர்லூடின் ஆரம்பத்தில் ஒரு பெரிய..
காட்டு யானையாக மாறி கத்த அதற்கு பதில் தரும் மற்ற யானைகள் கத்த என்பது போலதுவங்கும்! இப்பாடல் முழுவதும் கமலும் கதாநாயகி ராதாவிடம் முத்தத்தால் டிரம்பட்வாசித்துக் கொண்டு இருப்பார்! கமலுக்கு நான் சொன்ன உதாரணம் சரியானது தானே! இதேபோல் இன்னும் கமல் படங்களில் பேர் சொல்லும் பிள்ளை படத்தில் ‘அம்மம்மாவந்ததிந்த சிங்கக் குட்டி’ அபூர்வ சகோதரர்கள்..
படத்தில் வரும் ராஜா கைய வச்சா பாடல்கள் எல்லாம் டிரம்பட் இசைக்கு முக்கியத்துவம்தரும் பாடல்களாகும்! வெற்றிவிழா படத்தில் வரும் “சீவி சிணுக்கெடுத்து” பாடலைப்பாடும் நாயகனே பேண்ட் வாத்தியக் குழு தலைவன்! கேட்கவேண்டுமா ராஜாவுக்கு! பாடலின் துவக்க இசையே அத்தனை கம்பீரமாக டிரம்பெட்டில் துவங்கும்! இதில் பாண்ட்வாத்தியக் குழு என்பதால், கிளாரினட்..
துபா, டிராம்போன், ஹார்ன் எல்லா பேண்ட் இசை மாணவர்களையும் ராஜா மாஸ்டர்அழைத்துவந்து இசைத்து இருப்பார்கள்! இந்தப் பாடல்கள் எல்லாம் காட்டாறு எனில்மைடியர் மார்த்தாண்டனில் வரும் சத்தம் வராமல் முத்தம் பாடல் ஒரு தெளிந்த நீரோடை! கடற்கரையில் அலைகள் கால் நனைக்க குஷ்பு ஓடி வந்து பிரபுவிடம் ஒரு சங்கிற்குள் ஐலவ்யூ சொல்லி அதை அவர் காதில் வைக்க அந்த ஆர்ப்பரிக்கும்..
கடல் அலைகளை புறம் தள்ளிவிட்டு கம்பீரமாக பாடலில் டிரெம்பெட் இசை துவங்கும்! 🎵 பேங்..பேங்.. பப்ப.. பேங்.. பேங்.. 🎶 என ஒலிக்கும் போதே நமக்குள் சிலிர்க்கும்! இங்கு ஆரவாரமின்றி ஆளுமையாக டிரம்பட் இசை ஒலிக்கும்! இந்தப் பாடல் முழுவதும்தேவையான இடத்தில் டிரம்பட் ஒலித்து நான் அலறும் வாத்தியமல்ல என்னாலும்அலட்டாமல் இருக்கமுடியும் என நிரூபித்திருக்கும்!
ராஜாவின் டிரம்பட் இசை பற்றி எழுத உட்கார்ந்தது நைல்நதியை நைன்டிML கப்புக்குள்அடக்கப் பார்த்தது போல! கமலுக்கே இன்னும் 4 பாகங்கள் எழுதலாம்! ரஜினிபாடல்களுக்கு ஒரு 4 பாகங்கள் எழுதலாம்! பிற நாயகர்கள் என்றால் பொன்னியின்செல்வன் சைசுக்கு எழுதலாம்! இந்த முத்த வாத்தியத்தின் சத்தம் எடுத்துஇசைஞானியின் கரங்களில் முத்தமிடுகிறேன் 💋💋
No comments:
Post a Comment