“இளையராஜாவும் அக்கபெல்லாவும்”
Acapella பாடல் என்பது ஒரு ஹார்மொனி வகையாகும்! ஒரு குழுவினரோ அல்லது தனிநபரோ எந்த ஒரு இசைக் கருவியும் இல்லாமல் குரலிலேயே ஏற்ற இறக்கத்துடன் பாடும்ஒரு விதமான நடை! இதன் பெயர் காரணம் ஆங்கிலத்தில் chapel என்கிற சர்ச்சில்பாடல் குழுவினர் (Choir) பாடும் முறையை குறிப்பதாக இருந்தது.
இதை இசைக்கருவி இணை இல்லாது குரலினால் மட்டுமே ஆன இசை(unaccompanied vocal music) என்றும் கூறுவார்கள்! இதிலேயே இசைக் கருவிகளான, கிடார் டிரம்ஸ், புல்லாங்குழல், டிரம்பட் போன்ற வாத்தியங்களை அந்தக் கருவிகள்இன்றி குரல்களிலேயே வாசிப்பது பீட் பாக்ஸ் என்றழைக்கப்படும்!
அர்த்தமற்ற வார்த்தைகளான பாப்பரி, ரிப்பாப்பாரிபப்பா, பம்சிக்கு, தரபம், ரம்பம்பம், ஷாகரிப்பா, டோரி, சச்சா போன்ற வார்த்தைகளை இடையில் செருகுவார்கள்! இந்தவகையில் குரல்களுக்கே முக்கியத்துவம் இருக்கும் அக்கபெல்லா பாடல்களின் தாக்கம்..
இளையராஜாவிடம் ஏராளம் அவர் ஊறுகாய் போல பல பாடல்களில் பயன்படுத்திஇருந்தாலும் வைதேகி காத்திருந்தாள் படத்தில் வரும் மேகம் கருக்கையிலே பாடலில்அந்த இசையை எடுத்துவிட்டால் ஒரு அப்பட்டமான அக்கபெல்லா! இந்த பாடல் குறித்தஒரு விவாதத்தில்,
எழுத்தாளர் என் ஆசான் சுஜாதா இளையராஜா வைதேகி காத்துருந்தாள் படம் வருவதற்கு6 வருடங்கள் முன்பே இந்த அக்கபெல்லாவை அழகாக தந்த பாடல் தான் “ஏரியிலேஎலந்தை மரம்” என்கிற பாடல் என்றார்! அந்தப் பாடல் இடம் பெற்ற..
கரையெல்லாம் செண்பகப்பூ படத்தின் கதை சுஜாதாவுடையது! கிட்டத்தட்ட மேகம்கருக்கையிலே பாடல் டியூன் போலவே தான் இந்தப் பாடலும் இருக்கும்! சுஜாதாராஜாவை இசையமைப்பாளர் அல்ல அவர் ஒரு கம்ப்போஸர் என்பார்! ஏனெனில்மேற்கத்திய..
இசை வடிவங்களான சிம்பொனி, ஆரட்டா, ஹார்மொனி, அக்கபெல்லா போன்றவடிவங்களையும், பீத்தோவான், மொஸார்ட் போன்றவர்களின் இசையையும் தமிழ்படுத்திகிராமப்புற படங்களில் தந்தவர் ராஜா! நீங்கள் அவருக்கு கண்ணாடிக் கற்களுக்கான..
பணத்தை தான் தருகிறீர்கள்! ஆனால் அந்த பணத்திற்கு அவர் உங்களுக்கு வைரக்கற்களையே தருகிறார் என்பார்! மொஸார்ட்டின் டைட்டன் எனும் மியூசிக் கம்போசிங்கை(ஆம் டைட்டன் வாட்ச் விளம்பரத்தின் அதே தீம் மியூசிக் தான்) கிழக்கு வாசல் படத்தில்..
“வீட்டுக்கு வீட்டுக்கு வாசப்படி வேணும்” என்று காதைப்பிடித்து இழுத்துவந்து கிராமத்துராகமாக்கியவர் ராஜா!
“ஏரியிலே எலந்த மரம்” பாடலின் லிங்க் 👇
https://youtu.be/dKfCUGxGgQg?si=R5DNRAx47xXMHzeu
பாடல் முழுவதும் கூர்ந்து கேட்டு ரசியுங்கள்… கோரஸில் அவ்வளவு நுணுக்கங்கள்ஒலிக்கும்!
No comments:
Post a Comment