#இசைஞானியின்_புரட்சி 🎶
🎵 மாயாமாளவ கெளளை 🎵
இசைஞானி அடிக்கடி கூறுவார்! நமது கிராமிய நாட்டுப்புற பாடல்கள் எல்லாம் கர்நாடக இசை கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பே பாடப்பட்டவை என்று! கர்நாடக இசையில் வரும் மேளங்கள், தாளங்கள் எல்லாம் நம் கிராமிய இசையில் முன்பே வந்துவிட்டது அதை ஒழுங்குபடுத்தியது தான் சாஸ்திரிய சங்கீதம்!
கர்நாடக சங்கீதம் உருவான பின்பு நமது நாட்டுப்புற பாடல்கள் எல்லாம் எந்த ராகத்தை சேர்ந்தவை என்று கண்டுபிடிக்கப்பட்டன! டெண்டுல்கருக்கு கிரிக்கெட் கற்றுத் தந்த குருநாதர் இந்திய அணிக்கு ஆடவில்லை என்பது போல! சிவரஞ்சனி இராகம் சோகரசத்தை பிழியும் ஒரு ராகம்! நம்முடைய தாலாட்டு மற்றும்..
ஒப்பாரி பாடல்கள் சிவரஞ்சனியில் அமைந்திருக்கும் இதெல்லாம் நமது நாட்டுப்புற பாடல்களில் முன்பே பாடிவிட்டோம்!15வது மேளகர்த்தா இராகம் என்னும் இந்த மாயாமாளவ கெளளையில் அமைந்த பல நாட்டுப்புற பாடல்கள் இருக்கிறது! இந்த ராகம் கர்நாடக சங்கீதம் பயிலும் அனைவருக்கும் பால பாடமாகும்!
கர்நாடக இசையைக் கற்றுக் கொள்ளும் மாணவ மாணவியர் முதன் முதலில் பயிற்சிசெய்ய வேண்டிய இராகம் இது! ஏனெனில் 2 பெயர்களை உடைய ஸ்வர ஸ்தானங்கள்இந்த இராகத்தில் வராது! ஜண்டை ஸ்வரக் கோர்வைகள், தாட்டு ஸ்வரக் கோர்வைகள் & துரித கால, சௌக்ககால கோர்வைகள்..
இந்த இராகத்திற்குப் பொருத்தமாக வரும்படி வரிசைகளை இந்த இராகத்தில்இயற்றியுள்ளதால் இசை கற்பவர்களுக்கு இது முதல் பாடம் ஆகும்! மேலும் இது பல ஜன்யஇராகங்களை உடைய பழமையான மேளம். ரசிகப்பிரியா சிம்மேந்திர மத்திமம் போன்ற இராகங்கள் இதன் கிரகபேதத்தில் வரும் சிறப்பு பெற்றது!
இத்தனை சிறப்பு வாய்ந்த இந்த ராகத்தை இசைஞானி பாமரனிடம் கொண்டு எளிதாக சேர்க்கிறார் இப்படி 🎶 🎵
மாமன் வூடு மச்சு வூடு
பரிசம் போட்டது குச்சுவூடு
பாட்டுப்பாடி, ஆட்டம் போடு
பெரிய இடத்து சம்பந்தம்..
எவ்வளவு எளிமையாக பாமரனையும் மாயாமாளவ கெளளையை பாடவைத்துவிட்டார் பார்த்தீர்களா? இதைத் தான் முறையான சங்கீதம் பயிலும் மாணவர்கள் ஆரோகணத்தில் ஸ ரி1 க3 ம1 ப த1 நி3 ஸ சொல்லிப் பாடிப் பழகுவார்கள்! இதனை மிக மிக எளிதாக மாற்றியவர் நமது இசைஞானி இளையராஜா!
இசை ஞானி இசையமைத்த மாயாமாளவ கெளளை இராகத்தில் வந்த மேலும் சில பாடல்களின் வரிசை கீழே! இவையனைத்தும் ஒரே ராகம் என்பதை உங்களால் நம்பமுடிகிறதா! அதுதான் இளையராஜா! 🎵🎶
மாசறு பொன்னே - தேவர்மகன்
இதழில் கதை எழுதும் நேரமிது :- உன்னால் முடியும் தம்பி
அல்லா உன் ஆணைப்படி : சந்திரலேகா
பூங்கதவே தாழ் திறவாய் :- நிழல்கள்
மதுர மரிக்கொழுந்து வாசம் - எங்க ஊரு பாட்டுக்காரன்
No comments:
Post a Comment