#பால்_பன் {👑 டீக்கடைகளின் அரசன்👑}
ஜிகர்தண்டா, பன் பரோட்டா, கறி தோசை வரிசையில் மதுரை மண்ணின் தனிஅடையாளம் இந்த பால்- பன்! சப்பாத்தி தேய்க்கும் கட்டையை பூரிக் கட்டைன்னுசொல்வது போல தயிரில் செய்யும் இந்த பன்னை பால்பன் என்றே அழைக்கிறார்கள்! இதற்கும் பாலுக்கும் எந்த ஒட்டும், உறவுமில்லை! மைதா மாவு, சர்க்கரை, தயிர் இவைமூன்றும் தான் இந்த பால்பன்னிற்கு முக்கியம்!
பால்பன் பாரதிராஜாவின் விசிறி! ஆம்! நகர்ப்புறங்களைவிட கிராமத்தில் தான் எல்லாடீக்கடைகளிலும் கிடைக்கும். பால் பன்னை தென் தமிழகத்தின் மக்கன் பேடா என்றால்அது பொய் இல்லை! நான் முதன் முதலில் மதுரையில் இதை ஒரு டீக் கடையில் பார்த்தபோது சிறிய பன் சைஸில் ஜீராவில் ஊறி அங்கம் மினுமினுக்க பார்த்த மறுவிநாடியேஅதை எடுத்து ருசிக்கத் தூண்டியது!
பின்னாளில் சிங்கப்பூரில் முதன் முதலில் டோனெட்டை ருசித்த போது அட! இது நம்மஊரு பால் பன்னை போலவே இருக்கேன்னு வியந்து இருக்கிறேன்! ஆம்! கிட்டத்தட்டடோனெட் ருசியே தான்! இந்த பால்பன்னை சாமானியர்களின் டோனெட் எனலாம். சூடாக சாப்பிடும் போது ஒரு ருசியிலும் ஆறியதும் ஒரு ருசியிலும் இருக்கும். ஆனால்இரண்டுமே நம்மை ரசிக்க வைக்கும் ருசியே!
சில இடங்களில் சர்க்கரை பாகு காய்ந்து போய் மலைகள் மீது பனி படர்ந்திருப்பதுபோல பால்பன் மீது வெண்ணிறப் பாகு காட்சி அளிக்கும்! அது போன்ற பதத்தில் இதைசாப்பிடவேக் கூடாது. அன்னப் பறவை பார்த்த வேலை போல அதில் சர்க்கரை தனியேபால்பன் தனியே என அவற்றின் ருசி இரண்டாகப் பிரிந்துவிடும். பால்பன்னை மிதமானசூட்டில் ஜீரா ஒழுக ருசிப்பதே சிறப்பு!
மதுரையில் அதிகாலையில் 2 பால் பன்களை சாப்பிட்டு அப்படியே 2 வடை ஒரு டீசாப்பிட்டால் காலை உணவே தேவைப்படாது! ஜீராவில் ஊறிய பால் பன்னின் மீதுசர்க்கரை, கலர் தேங்காய் துருவல்கள், முந்திரி சீவல்கள் என அட்டகாசமாக சிலகடைகளில் தூவித் தருவார்கள்! ஜீரா ஒழுகத் தருவதால் இதை சிறிய வாழைஇலையிலோ அல்லது சிறிய தட்டிலோ வைத்துத் தருவார்கள்!
மதுரை அலங்காநல்லூர், பாலமேடு, குமாரம் பக்கம் எல்லாம் பால் பன் படு ஃபேமஸ்! ருசியில் சிறந்தது பாலமேடு பால் பன்னா? அலங்காநல்லூர் பால்பன்னா? என்று சாலபன்பாப்பையா தலைமையில் ஒரு பட்டி மன்றமே வைக்கலாம்! ஜல்லிக்கட்டுக்கு இணையாஇங்க பால்பன் அவ்வளவு புகழ் வாய்ந்தது! சிவகாசி, விருதுநகர், சாத்தூர் பக்கம் தேன்கலரில் தேனாகக் கிடைக்கும்!
ஊரு டீக்கடையில் அமர்ந்து ஒருவர் தன் விரல்களை சூப்பிக் கொண்டிருந்தால் அவர்பால்பன் ருசித்துள்ளார் என்று அறியலாம்! சிலர் தட்டிலுள்ள மீதி ஜீரா மீது மிக்சர் அல்லதுமுறுக்கை நொறுக்கித் தூவி கலந்து உண்பார்கள்! பாயாசம் & அப்பளம் போல அது ஒருபெக்கூலியர் காம்போ. பால்பன்னிற்கும் அந்த இலவச கார மிக்ஸருக்கும் கூட்டம்மொய்க்கும் கடைகள் பல உண்டு!
எனது ஆச்சரியம் எல்லாம் கடைகளில் அப்பம், சுசீயம், முட்டைகோஸ் போன்றஇனிப்புகளுக்கு நடுவில் ராஜாவாக பால்பன் இருந்தது தான்! ஏனெனில் அதன் ருசிஅப்படி நம்மை மயக்கும்! சில கடைகளில் பால்பன் & சுண்டல் மொச்சைகளின் காம்போபட்டையைக் கிளப்பும்! பால்பன் செய்முறை மிகமிக எளிது என்பதால் எங்கும்சாப்பிடலாம். பால்பன்னை உங்கள் வீட்டில் செய்ய இதோ அதன் ரெஸிபி! 👇🏿
பொடித்த சர்க்கரை, அரை கப் தயிர், 1 கப் மைதா, 2 ஸ்பூன் நெய், 1 ஸ்பூன் பேக்கிங்சோடா அனைத்தையும் கலந்து பிசைந்து 30 நிமிடம் மாவை ஊறவைத்துவிட்டால்போதும். அந்த மாவை உருண்டையாக உருட்டி அதை எண்ணெய்யில் பொரித்து எடுத்துவைத்துவிட்டு, பின்னர் அரைக் கம்பி பதத்தில் ஜீராவை கொதிக்கவிட்டு எடுத்து பொரித்தமாவு மீது ஊற்றி ஊறவிட்டால் பால்பன் ரெடி!
மதுரை மட்டுமல்ல இராம்நாட், தேனி, திண்டுக்கல், விருதுநகர் மாவட்டங்களிலும் இந்தபால்பன் ஃபேமஸ்! கை பிசுபிசுக்க மிதமான சூட்டில் பால்பன்னை சாப்பிட்டு கொஞ்சம்மிக்ஸரை கொறித்து ஒரு டீ சாப்பிடும் சுகமிருக்கே.. அடடா!! அதெல்லாம் சொன்னாபுரியாது, நீங்க நேரடியா அனுபவிக்கணும்! அடுத்த முறை நீங்க இந்த ஊர்களின் பக்கம்வந்தால் பால்பன்னை ருசிக்க மறக்காதிங்க!
No comments:
Post a Comment