Tuesday, 21 January 2025

#பால்பன்

 #பால்_பன்    {👑 டீக்கடைகளின் அரசன்👑}




ஜிகர்தண்டாபன் பரோட்டாகறி தோசை வரிசையில் மதுரை மண்ணின் தனிஅடையாளம் இந்த பால்பன்சப்பாத்தி தேய்க்கும் கட்டையை பூரிக் கட்டைன்னுசொல்வது போல தயிரில் செய்யும் இந்த பன்னை பால்பன் என்றே அழைக்கிறார்கள்இதற்கும் பாலுக்கும் எந்த ஒட்டும்உறவுமில்லைமைதா மாவுசர்க்கரைதயிர் இவைமூன்றும் தான் இந்த பால்பன்னிற்கு முக்கியம்


பால்பன் பாரதிராஜாவின் விசிறிஆம்நகர்ப்புறங்களைவிட  கிராமத்தில் தான் எல்லாடீக்கடைகளிலும் கிடைக்கும்பால் பன்னை தென் தமிழகத்தின் மக்கன் பேடா என்றால்அது பொய் இல்லைநான் முதன் முதலில் மதுரையில் இதை ஒரு டீக் கடையில் பார்த்தபோது சிறிய பன் சைஸில் ஜீராவில் ஊறி அங்கம் மினுமினுக்க பார்த்த மறுவிநாடியேஅதை எடுத்து ருசிக்கத் தூண்டியது


பின்னாளில் சிங்கப்பூரில் முதன் முதலில் டோனெட்டை ருசித்த போது அடஇது நம்மஊரு பால் பன்னை போலவே இருக்கேன்னு வியந்து இருக்கிறேன்ஆம்கிட்டத்தட்டடோனெட் ருசியே தான்இந்த பால்பன்னை சாமானியர்களின் டோனெட் எனலாம்சூடாக சாப்பிடும் போது ஒரு ருசியிலும் ஆறியதும் ஒரு ருசியிலும் இருக்கும்ஆனால்இரண்டுமே நம்மை ரசிக்க வைக்கும் ருசியே


சில இடங்களில் சர்க்கரை பாகு காய்ந்து போய் மலைகள் மீது பனி படர்ந்திருப்பதுபோல பால்பன் மீது வெண்ணிறப் பாகு காட்சி அளிக்கும்அது போன்ற பதத்தில் இதைசாப்பிடவேக் கூடாதுஅன்னப் பறவை பார்த்த வேலை போல அதில் சர்க்கரை தனியேபால்பன் தனியே என அவற்றின் ருசி இரண்டாகப் பிரிந்துவிடும்பால்பன்னை மிதமானசூட்டில் ஜீரா ஒழுக ருசிப்பதே சிறப்பு


மதுரையில் அதிகாலையில் 2 பால் பன்களை சாப்பிட்டு அப்படியே 2 வடை ஒரு டீசாப்பிட்டால் காலை உணவே தேவைப்படாதுஜீராவில் ஊறிய பால் பன்னின் மீதுசர்க்கரைகலர் தேங்காய் துருவல்கள்முந்திரி சீவல்கள் என அட்டகாசமாக சிலகடைகளில் தூவித் தருவார்கள்ஜீரா ஒழுகத் தருவதால் இதை சிறிய வாழைஇலையிலோ அல்லது சிறிய தட்டிலோ வைத்துத் தருவார்கள்


மதுரை அலங்காநல்லூர்பாலமேடுகுமாரம் பக்கம் எல்லாம் பால் பன் படு ஃபேமஸ்ருசியில் சிறந்தது பாலமேடு பால் பன்னா அலங்காநல்லூர் பால்பன்னாஎன்று சாலபன்பாப்பையா தலைமையில் ஒரு பட்டி மன்றமே வைக்கலாம்ஜல்லிக்கட்டுக்கு இணையாஇங்க பால்பன் அவ்வளவு புகழ் வாய்ந்ததுசிவகாசிவிருதுநகர்சாத்தூர் பக்கம் தேன்கலரில் தேனாகக் கிடைக்கும்


ஊரு டீக்கடையில் அமர்ந்து ஒருவர் தன் விரல்களை சூப்பிக் கொண்டிருந்தால் அவர்பால்பன் ருசித்துள்ளார் என்று அறியலாம்சிலர் தட்டிலுள்ள மீதி ஜீரா மீது மிக்சர் அல்லதுமுறுக்கை நொறுக்கித் தூவி கலந்து உண்பார்கள்பாயாசம் & அப்பளம் போல அது ஒருபெக்கூலியர் காம்போபால்பன்னிற்கும் அந்த இலவச கார மிக்ஸருக்கும் கூட்டம்மொய்க்கும் கடைகள் பல உண்டு


எனது ஆச்சரியம் எல்லாம் கடைகளில் அப்பம்சுசீயம்முட்டைகோஸ் போன்றஇனிப்புகளுக்கு நடுவில் ராஜாவாக பால்பன் இருந்தது தான்ஏனெனில் அதன் ருசிஅப்படி நம்மை மயக்கும்சில கடைகளில் பால்பன் & சுண்டல் மொச்சைகளின் காம்போபட்டையைக் கிளப்பும்பால்பன் செய்முறை மிகமிக எளிது என்பதால் எங்கும்சாப்பிடலாம்பால்பன்னை உங்கள் வீட்டில் செய்ய இதோ அதன் ரெஸிபி! 👇🏿


பொடித்த சர்க்கரை அரை கப் தயிர், 1 கப் மைதா, 2 ஸ்பூன் நெய், 1 ஸ்பூன் பேக்கிங்சோடா அனைத்தையும் கலந்து பிசைந்து 30 நிமிடம் மாவை  ஊறவைத்துவிட்டால்போதும்அந்த மாவை உருண்டையாக உருட்டி அதை எண்ணெய்யில் பொரித்து எடுத்துவைத்துவிட்டுபின்னர் அரைக் கம்பி பதத்தில் ஜீராவை கொதிக்கவிட்டு எடுத்து பொரித்தமாவு மீது ஊற்றி ஊறவிட்டால் பால்பன் ரெடி


மதுரை மட்டுமல்ல இராம்நாட்தேனிதிண்டுக்கல்விருதுநகர் மாவட்டங்களிலும் இந்தபால்பன் ஃபேமஸ்கை பிசுபிசுக்க மிதமான சூட்டில் பால்பன்னை சாப்பிட்டு கொஞ்சம்மிக்ஸரை கொறித்து ஒரு டீ சாப்பிடும் சுகமிருக்கே.. அடடா!! அதெல்லாம் சொன்னாபுரியாதுநீங்க நேரடியா அனுபவிக்கணும்அடுத்த முறை நீங்க இந்த ஊர்களின் பக்கம்வந்தால் பால்பன்னை ருசிக்க மறக்காதிங்க!

No comments:

Post a Comment