#கல்பாத்தி_உணவகம்
பாலக்காட்டில் கல்பாத்தி அக்ரஹாரத்தில் அமைந்துள்ள டேஸ்ட் ஆஃப் கல்பாத்திஎன்னும் 1000% ப்யூர் சைவ உணவகத்தை பற்றித் தான் இப்பதிவு! இனி ஞான் எழுதறதய்முழுசா மைக்கேல் மதன காமராஜன் படத்தில் வரும் காமேஸ்வரன் கமல் ஸ்டைலில்படிக்கணும் கேட்டேளா! பாலக்காட்டிலே போயி கல்பாத்தி அக்ரஹாரம்னுவிஜாரிச்சாலே மதி! இது வல்லிய ஃபேமஸாக்கும்!
இவிட மதுரையய் தொட்டடுத்துள்ள ஒரு குக் கிராமத்தில் பிறந்த குக்கான ஞானும்பின்னே என்னோட சகாவான பிரியப்பட்ட தோழனும் (அவனும் குக்காக்கும்) ச்சேர்ந்துஇவிட போயி இறங்கும் போழ் கடையில நல்ல கூட்டமாக்கும்! அதய் கடைனு பறைஞ்சாஅது ஷெரியில்லை! ப்ரோப்பர் அக்ரஹாரத்து வீடுன்னு பறைஞ்சா அது ஷெரியாக்கும்! இப்போழ் எங்களுக்கு ஷாப்பிட இடம் கிட்டி!
(முடியல! இனி என் ஸ்லாங்கிலேயே வர்றேன்) பெரிய அக்ரஹார வீட்டை பட்டி டிங்கரிங்பார்த்து ஓட்டலாக ஆக்கி இருந்தனர்! மொத்தமே 6 டேபிள்கள் 24 நபர்கள் அமரலாம்! வாசலில் அந்த காலத்து உடுப்பி ஓட்டல்கள் போல மரபீரோவில் கண்ணாடி பொருத்தியகதவுகளுக்கு பின்புறம் ஊறுகாய், வத்தல், வடகங்கள் அப்பள வகைகளைவைத்திருந்தனர்! அவர்கள் தயாரிப்பே தான்!
அதன் எதிர்புறம் அந்தகாலத்து ஓட்டல் ஸ்டைல் கல்லா போட்டு இருந்தனர்! அந்த கல்லாமீது இருந்த Gpay QR code அட்டை மட்டும் வாழை இலையில் பீட்ஸா வைத்தது போலமிக அந்நியமாகத் தெரிந்தது! இது நம்ம ஆளு ஷோபனாவுக்கு 45 வயது ஆனது போலகண்ணாடி அணிந்த மாமி ஒருவர் துறுதுறுப்பாக நின்று கொண்டு இருந்தார்! எல்லாருடனும் பாலக்காடு தமிழையாளத்தில் பேசினார்!
அவரது ஒவ்வொரு வார்த்தையும் ஆக்கும், டேளா என்றே முடிந்தது! இடை இடையில்சரளமாக கேரள மலையாளத்திலும் சம்சாரித்தார்! அந்த மாமியைக் கடந்து எங்கள்மேசைக்கு போகும் போது எதிரே நெய் மணக்க ஒரு தட்டில் சூடான மைசூர்பாக்கைகொண்டு வந்து கல்லா பெட்டி அருகே வைத்தார்கள்! என் அப்பா மைசூர்பாக் செய்தால்வரும் அதே நறுமணம்! சரி ஸ்வீட்டோடு ஆரம்பிப்போம்..
என முடிவெடுத்து மேசையில் அமர்ந்தோம்! சேர நன்னாட்டின் செழுமையைச் கிளிப்பச்சை நிறத்தில் சொல்லிடும் இரண்டு பெரிய வாழை இலைகள் விரிக்கப்பட்டன! அதில்நீர் தெளித்து துடைத்து முதலில் சூடான மைசூர்பாக் என்றோம்! தமிழ் நாட்டுக்கு வரிஇல்லை என்று சொல்லும் மத்திய அரசு போல டக்குன்னு இல்லை என்றார்கள்! சேட்டாஇப்போ தான் நாங்க உள்ளே..
வரும் போது சூடா எடுத்துட்டு வந்தாங்க அதிகபட்சம் 3 நிமிடங்கள் கூட இருக்காது! நல்லா செக் பண்ணுங்க என்றோம்! இல்ல சாரே அதை ஒரு கஸ்டமர் அப்படியேமொத்தமா பார்சல் வாங்கிட்டு போயிட்டாராக்கும் என்றார்! கல்லாவுக்கும் எங்கமேசைக்கும் அதிக பட்சம் 16 ஸ்டெப்புகள் தான் இருக்கும்! மின்னல் வேகத்தில் அதுமிஸ்ஸானது! சரி சரி கேரளாவில் வந்து எதுக்கு மைசூர்னு மனதை..
திடப்படுத்திக்கொண்டு சாப்பாடு கேட்டோம் கேரள அரிசியா? இல்ல தமிழக அரிசியா? என்று அரிசியில் இருக்கும் அரசியல் தெரிந்து கேட்டனர்! தமிழக அரிசியாக்கும்என்றோம்! இலையில் முதலில் பருப்பு, நெய், பப்படம் பின்பு ஸ்வீட் கோட்டிங் செய்தசீரகம் போன்ற சைசில் குண்டு குண்டான வெள்ளையரிசி சாதம் பரிமாறினார்கள்! இஞ்சிக் கறி, அவியல், csk டீம் ஜெர்சி கலரில் புளிசேரி வைத்தனர்!
பிறகு புகழ் பெற்ற டிபிகல் பாலக்காடு சாம்பார்! பிறகு ரசம், மோர் கடைசியில் பருப்புபாயாசம் என நிறைவாக இருந்தது! இந்தக் கடை உணவு மிக மிகச் சிறப்பு என்றெல்லாம்சொல்ல முடியாது! பாலக்காடு சாம்பார்னு சொன்னேனே அந்த ஃப்ளேவரில் அந்தபக்குவத்தில் சாம்பார் இங்கு மட்டுமே சாப்பிட முடியும்! மதுரை கோபு அய்யங்கார் கடைபோலவே ஒரு பாரம்பரிய ருசியும் பக்குவமும் இங்குண்டு!
கல்லாவில் ஜிபேவில் ஸ்கேன் செய்யும் போது “மைசூர்பாக் தீர்ந்துடுத்தாக்கும் சாரி” என்றார் ஷோபனா மாமி! அவர் கண்கள் லேசாக கலங்கி இருந்ததா அல்லது அவரதுகண்ணாடியில் தெரிந்த Blurஆ என்பதை அறியாது மாமி மனம் வருந்தக் கூடாதே என்றுவத்தல்,அப்பளம், ஊறுகாய் வகைகளை ஏராளமாக வாங்கினோம்! இப்போது மாமி முகம்மலர்ந்து சிரித்தார்! மாமியின் சிரிப்பில் இறைவனைக் கண்டோம்! எங்கள் வயிறும்மகிழ்ந்து சொன்னது..
😊😊 ஏவ்வ்வ்வ்வ்வ் ☺️☺️
No comments:
Post a Comment