#கும்பிடப்போன_தெய்வங்கள்
எங்கள் குடும்பத்திற்கு திருச்செந்தூரில் நீண்ட நாள் வேண்டுதல் ஒன்றிருந்தது! அது பலமுறை திட்டமிட்டும் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது! இந்நிலையில் சாயல்குடிஅருகில் உள்ள காவாகுளம் என்னும் ஊரிலும் ஒரு வேண்டுதல் வைத்தனர்! எங்கள்குலதெய்வம் கோவில் இருப்பது கமுதியில்! அங்கிருந்து 30 கி.மீ. தூரம் தான் சாயல்குடி! சாயல்குடியிலிருந்து திருச்செந்தூர்..
110 கி.மீ தான்! இந்த முறை குலதெய்வ வழிபாட்டு நாளை ஒரே கல்லில் 3 மாங்காயாகஅடிக்கத் திட்டமிட்டு 3 தினங்கள் ஒரு சுற்றுப் பயணத்தை முடிவு செய்தோம்! முதல் நாள்நேராக சாயல்குடி பின் அங்கிருந்து திருச்செந்தூர் சென்று தங்கி, மறுநாள் கடலில்நீராடி சுவாமியை தரிசித்துவிட்டு கடைசியாக குலதெய்வம் கோவிலில் வந்து தங்கிமறுநாள் கிடா வெட்டு எனத் துல்லியமான திட்டம்!
எனக்கு உடல் நிலை சரியில்லாத போது வேண்டிக் கொண்டது தான் சாயல்குடிவேண்டுதல்! அங்கே காவாகுளம் என்னும் ஊரில் சுடலை மாடன், இசக்கியம்மன், முத்தாரம்மன், முனீஸ்வரன் ஹை-கோர்ட் மகாராஜா என அனைத்து சக்தி வாய்ந்தகிராமத்து காவல் தெய்வங்களும் ஒன்றாக இருக்கும் கோவில்! அக்கோவில் ஒருரெண்டும் கெட்டான் புவியியல் அமைப்பில் இராமநாதபுரத்திற்கும்..
சாயல்குடிக்கும் நடுவில் கிழக்கு கடற்கரைச்சாலையில் இருந்து உட்புறம் பிரியும்சாலையில் அமைந்திருந்தது! வழி கேட்டுக் கேட்டு அங்கு போய் சேர்ந்தோம்! அந்தக்கோவில் ஒரு பொட்டல் வெளியிலிருந்தது! கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டிருக்கமண்டையில் மார்ச் வெயில் சுரீரென்று கொளுத்த கோவிலுக்குள் நுழைந்தோம். மிகபிரும்மாண்ட உயரத்தில் அனைத்து சுவாமி..
சிலைகளும் பார்த்தவுடன் நமக்கு பயத்தையே வரவழைத்தன! இது போன்ற கிராமத்துதெய்வங்களை நாம் வணங்குவதைத் தான் பய பக்தியுடன் வணங்குதல் என்கிறோம்! சின்னக் கோவில் தான் அந்த நேரத்திலும் கோவிலில் வழிபட பலர் இன்னோவா, கியா, கார்களில் வந்திருந்தனர்! இந்தக் கோவிலில் குறி கேட்பது அப்படியே நடக்கும் என்பதுநம்பிக்கை! அங்கே குறி சொல்பவரின் தந்தை..
2 தினங்களுக்கு முன்பு இறந்துவிட்டாராம்! எனவே 16 தினங்கள் கழித்தே மீண்டும் குறிசொல்லமுடியும் என்றனர்! இதனால் அந்தக் கோவிலுக்கு வந்த பலரது முகத்தில்ஏமாற்றம் தெரிந்தது! கோவிலில் இருந்த போதும், அங்கு அமர்ந்த போதும் ஏதோ ஒருசக்தி உடலில் புகுந்தது போலவே உணர்ந்தேன்! சுடலை மாடன் அருள் பெற்றபின்புசுந்தரன் முருகனைக் காண வண்டியை திருச்செந்தூருக்கு..
செலுத்தினோம்! ஆறுமுகநேரியில் என் தம்பி அருண் DCW நிறுவனத்தில் வேலைசெய்கிறான்! அவனது கம்பெனி குவார்ட்டர்சில் கடல் போல இருந்தது அவனது வீடு! நாங்கள் அனைவரும் அங்கு சென்று சேர்ந்த போது இரவு 7மணி! 8 மணிக்குதிருச்செந்தூரில் தரிசனத்திற்கு ஏற்பாடு செய்து இருந்தான் தம்பி! சூடாக ஒரு டீசாப்பிட்டுவிட்டு டக்குன்னு முகம் கழுவிக் கொண்டு கிளம்பினோம்!
அன்று சிவராத்திரி என்பதால் கூட்டம் அதிகமிருந்தது! முருகனை தரிசித்துவிட்டுதிரும்பினோம். மீண்டும் மறுநாள் காலை 4 மணிக்கு எழுந்து ரெடியாகி மிகச் சரியாக 5 மணிக்கு திருச்செந்தூர் கோவில் கடலில் நீராடி கோவிலுக்குள் சென்று முருகனை கண்குளிர தரிசித்தோம்! (திருச்செந்தூர் கோவில் அனுபவங்களை ஒரு தனிப்பதிவாகபோட்டாச்சு) அங்கிருந்து நேராக வனதிருப்பதி..
சென்று திருப்தியாக பெருமாளை சேவித்துவிட்டு சரவணபவனில் சாம்பார் இட்லி, ஆனியன் ரவா ருசித்துவிட்டு 9 மணிக்கு வீடு திரும்பினோம்! ஒரு மாறுதலுக்காகஇக்கோவில் பயணங்களுக்கு நடுவில் வீட்டுக் குழந்தைகளுக்காக காயல்பட்டினம் & மணப்பாடு பீச் அழைத்துச் சென்று அவர்களை கடலில் நீராடவிட்டு மதிய உணவைமுடித்து 2 மணிநேரம் தூங்கிவிட்டு மாலை 5 மணிக்கு..
கமுதி கிளம்பினோம்! இரவு 9மணிக்கு கமுதி வந்தடைந்தோம்! சிவராத்திரி சமயம்என்பதால் கமுதியில் தங்குவதற்கு அறைகள் ஏதும் சுலபமாக கிடைக்கவில்லை! ஒருவழியாக அறை கிடைத்த பின்பு நாங்கள் சாப்பிட்டு தூங்க செல்ல இரவு 11:45 ஆகிவிட்டது மறுநாள் விடியலில் எழுந்து குலதெய்வம் கோவில் சென்று முடி இறக்கி, கடா வெட்டி விருது படைத்து நிறைவாக ஊர் வந்து சேர்ந்தோம்!
🙏 ஓம் நமச்சிவாய 🙏
{சொந்த பந்தங்களோடு இருந்த இந்த 3 நாட்கள் அடுத்த 3 ஆண்டுகளுக்கு என்னைபுத்துணர்வில் வைக்கும்}
No comments:
Post a Comment