Thursday, 16 January 2025

வடை புராணம்

#மதுரை_வடை_ஃபேக்டரிகள்

மதுரையில் நிறைய வடைக் கடைகளை கடை என்பதை விட வடை ஃபேக்டரின்னே கூறலாம். சர்வ சாதாரணமாக தினமும் 2000 வடைகள் விற்கும் கடைகளே நூற்றுக்கும் அதிகமாக இருக்கும் அதில் தலையானது மேலமாசி வீதி வடக்குமாசி வீதி சந்திப்பிலுள்ள V பாம்பே ஸ்வீட்ஸ்! சூரியன் உதிப்பதற்கு முன்பே சூரியனின் வெப்பம் போலவே தயாராகும் அப்பம் மதுரையின் அடையாளமாகும் V!

அதிகாலை 4 மணிக்கே இனிப்பு அப்பத்துடன் தங்களது நாளை துவக்குபவர்கள் சூரிய உதயத்திற்கு பின்பு வரிசையாக உளுந்துவடை மசால்வடை, வெங்காயவடை, சமோசா என Vசுட்டுத் தள்ளுவார்கள். ஒவ்வொன்றிலும் தலா 200 வடைகள் போடுவார்கள். அப்பம் தன் வெப்பத்தை இழந்திருந்தாலும் அந்த அப்பத்தை ருசித்து விட்டு தேங்காய் சட்னியோடு V சூடான வெங்காய வடையோ அல்லது,

2 உளுந்து வடையோ உண்ணும் ஜீவராசிகள் பலர் மதுரையில் உண்டு 15 வருடங்களுக்கு முன்பு நானும் அந்தப்பட்டியலில் இருந்தேன். V எனக்குப் பிடித்த மெனு அப்பம் & சமோசா! அதிலும் சமோசாவிற்கு ஆனியன் தக்காளி குருமாவும், வடைகளுக்கு கடலைமாவில் செய்த பாம்பே சாம்பாரும் தருவார்கள்.. V அடடா என்ன காம்பினேஷன் தெரியுமா அது! சில நேரங்களில் வெள்ளையப்பம், காரபோண்டா..

தவளவடை, ஆமவடைக்கு அற்புதமான தக்காளி & மல்லிச் சட்னி தருவாங்க! மொறு மொறுன்னு அங்கம் மினு மினுக்க கிடைக்கும் பூண்டு தட்டிப்போட்ட மசால் வடைக்கும், V தவள வடைக்கும் அந்தச் சட்னி தேவார்மிதமாக இருக்கும் மாலையில் மைசூர் போண்டா/ பட்டணம் பக்கோடா என அழைக்கப்படும் போண்டாவிற்கு ஒரு புதினா சட்னியும் மிளகாய் சட்னியும் தருவார்கள் பாருங்க.. V

அது டிவைன்! அதே போல பஜ்ஜியில் தான் எத்தனை எத்தனை வகைகள்! பெரிய கத்திரிக்காய், சுரைக்காய், உருளைக் கிழங்கு, வாழைக்காய், V வெங்காயம், முட்டை என வெரைட்டியாக காவிக் கலரில் வந்து இலையில் விழும் கொதிக்கும் பஜ்ஜியோடு சட்னியை ருசித்துக் கொண்டே V ரோட்டில் செல்லும் பெண்களை சைட் அடிக்கும் பெண் பார்க்கும் படலத்தை ஆண்கள் நடத்துவார்கள்.

சில சமயம் சூடான அதே காவி நிறத்தில் சொஜ்ஜியும் (கேசரி) கிடைக்கும்! பிரமாதமான இனிப்பில் முந்திரி, திராட்சையுடன் வாயில் வைத்தாலே சர்ரென வயிற்றில் இறங்கும் வழவழப்பில் V தயாரிக்கப்பட்ட கேசரி அது. வெங்காய பஜ்ஜி சாப்பிடுவது தான் கொஞ்சம் கஷ்டம்.. அவர்கள் தரும் சூட்டில் பஜ்ஜியைக் கடித்தால் வாய் வெந்து விடும். வெங்காயத்தின் வெப்பம் அப்படியிருக்கும்!

ஓபன் ஹார்ட் சர்ஜரி போல பஜ்ஜியை இரண்டாகப் பிளந்து அதன் சூடு போக வாயால் அதை ஊதி ஊதி வெங்காயத்தை லேயர் லேயராக எடுத்து சட்னியில் குழைத்து ரசித்து உண்ணவேண்டும்V! அப்படியே அண்ணா பஸ்ஸ்டாண்ட் சென்றால் அங்கு சங்கர் காபிக் கடையில் ஒவ்வொரு வடையும் ஒரு டோனெட்டை விட ஒரு சுற்று பெரிதாக இருக்கும். காலையில் 2 வடை 1 டீ சாப்பிட்டால் போதும்.

மதியம் வரை பசிக்காது ! இங்கும் மெதுவடை, ஆமமவடை, போண்டா, வெங்காய வடை, சமோசா எல்லாம் கிடைக்கும் V உங்கள் கண் எதிரே ஐந்தாறு கிரைண்டர்களில் ஊற வைத்த உளுந்து, கடலை பருப்பு, V தேங்காய் சட்னி எல்லாம் அரைத்துக் கொண்டிருப்பார்கள்! சட்னியை பெரிய பாத்திரத்தில் மாற்றிய கையோடு தாளித்து கொட்டி அப்படியே ஐஸ்க்ரீம் போல ஸ்பூனில் அள்ளி வடையோடு தருவார்கள்!

அந்த வடையின் சூடும் அந்தச் சட்னியும் அடடா.! செம.! அதே போல யானைக்கல் ஆசீர்வாதம் கடையின் வடைகளையெல்லாம் ஒரு யானையே வந்து விழுங்குவது போல மதுரையன்கள் விரும்பி V விழுங்குவார்கள். கூடல் நகர் பாலம் தாண்டி சர்ச் வாசலில், பீபிகுளம் உழவர் சந்தையில், பைபாஸ் ரோடு KFC முன்புறம் இங்கெல்லாம் உள்ள வண்டிக் கடைகளில் V ருசியான வடை வகைகள் கிடைக்கும்!

அங்கே விதவிதமான சட்னிகள், வித்தியாசமான சைடு டிஷ்களோடு கிடைக்கும். சீரகம், அரிசி, மிளகுத்தூள் கலந்து அரைத்த பொடியை முட்டை போண்டாவைக் கீறி V உட்புறம் தூவித் தருவார்கள்! ஆஹா! அதைச் சொல்ல வார்த்தைகளில்லை. மல்லி சட்னியோடு வடைகள் V போண்டா, சமோசா என இங்கும் உண்டு. நாயக்கர் மஹால், முனிச் சாலை ஏரியா சென்றுவிட்டால் முள் முருங்கைவடை கிடைக்கும்.

கல்யாண முருங்கையில் குட்டிபூரி போல இருக்கும்! முள்முருங்கை வடை ருசியானது ஆரோக்கியமானதும் கூட V . அதற்கு ஒரு பொடி தருவாங்க! பொட்டுக் கடலையில் செய்த பொடி பார்க்க இட்லி பொடி போலவே இருக்கும்! அந்தப் பொடியோடு முள் முருங்கை வடை ருசிக்கஅபாரமா இருக்கும் V. வாழைப்பூ வடை, கீரை போண்டா, மெது போண்டா, கருப்பு உளுந்து வடை, தவல வடை, தவால் வடை..

காரசீயம், இனிப்பு சீயம், தேங்காய் போளி, பருப்பு போளி என வெரைட்டியாகவும், ருசியில் வித்தியாசமாகவும் பலப்பல வடைகளை ருசிக்கலாம். மீனாட்சி அம்மன் கோவில் அருகிலுள்ள V கோபு அய்யங்கார் கடை வெள்ளையப்பம் காரச் சட்னி ஃபேமஸ், உருளை கத்திரிக்காய் பஜ்ஜி வடை வகைகளும் இங்கு சாப்பிட க்யூவே நிற்கும் மேலாவணி மூல வீதி மீனாட்சி காபி வடைகளும் அல்டிமேட் ரகம். V

சின்னச் சொக்கிக் குளத்தில் அருமையான தயிர்வடை, சாம்பார் வடை காராபூந்தி தூவி கிடைக்கும். V இங்கு கிடைக்கும் பிரட் பஜ்ஜி, உருளைக் கிழங்கு போண்டாவிற்கு புவிசார்பு குறியீடு வழங்கினாலும் தவறில்லை. பீபீ குளம் மீனாட்சிபுரம் ஜங்ஷனில் கிடைக்கும் பால்பன், முட்டை கோஸ் அப்பம், வடைகள் எல்லாம் 5ஸ்டார் மதிப்புடையவை. கிருஷ்ணாபுரம் காலனியில் V வண்டிக்கடை ஒன்று இருக்கிறது.

4 வடைகள்₹10 க்கு கிடைக்கும். இட்லி மாவில் ஒரு போண்டா செய்து மிளகுப் பொடித் தூவித் தருவார்கள்! V அப்படியே அருகில் இருக்கும் உழவர் சந்தை தாண்டிய வண்டிக் கடையில் சுண்டல் குழம்பு & சமோசா, முட்டை போண்டா எல்லாம் பரபரன்னு வியாபாரம் ஆகும்! V சுண்டல் குழம்பில் முட்டை போண்டா & சமோசாவை பிச்சு போட்டு கலக்கி தரும் சுண்டல் முட்டை செட் ஒரு சிக்னேச்சர் டிஷ்!

இங்கே மிளகாய்பஜ்ஜி, கார உருண்டை, நைஸ் மசால் போண்டா, வெங்காய போண்டா, உளுந்து போண்டா, இவையெல்லாம் முறையே தேங்காய்/ தக்காளி/ மல்லி/ காரச் சட்னிகளோடு பரிமாறப்படும் V! போனஸாக அந்த சுண்டல் குழம்பும், பாம்பே சாம்பாரும் தருவாங்க (இப்போ சாம்பார் சட்னி வகைகள் தருவதில்லையாம்) இங்கு எல்லா வடைகளும் சூடாக போடும் வரை V காத்திருந்தே சாப்பிடமுடியும்.

மதுரை பழைய ராஜ்மஹால் கடையிலிருந்து அம்மன் சன்னதி போகத் திரும்பும் சந்திப்பில் பிளாட்பாரத்தில் ஸ்டூல் மேல் V பெரிய தூக்கு வாளி வைத்து போளி, வடை விற்பார்கள். எல்லாமே அட்டகாச ருசியில் இருக்கும்! பெரியார் பேருந்து நிலைய கேபிஎஸ் ஓட்டல் வாசல் மெகா சைஸ் மெதுவடைக் கடை, கிராஸ் ரோடு வடைக் கடை செல்லூர் மெயின் ரோட்டிலிருக்கும் V செல்வம் கடை..

குணுக்கு எனும் கோலி குண்டு சைஸ் வடைகள் போடும் வண்டிக் கடைகள் என மதுரையில் பலப் பல சிறு பெரு வடை ஃபேக்டரிகள் உண்டு V! தற்போது நடிகர் பரோட்டா சூரியின் அம்மன் உணவகத்தில் வடை வகைகளைத் தின்ன கூட்டம் அலைமோதுகிறது! V இங்கு நான் சொன்னது கொஞ்சமே! மதுரையின் 16 திசைகளிலும் சுடச்சுட வெரைட்டியாக கிடைக்கும் அற்புத உணவு வடைகள் மட்டுமே.!

கதைகளில் காகங்கள் பாட்டியிடம் வடை திருடினாலும் மதுரையில் மட்டும் வடை சுட்டு விற்கும் பாட்டிகளுக்கு அந்தப் பிரச்சனையில்லை ஏனெனில் பாட்டிகள் முதல் வடையை சுட்டதும் அதை காக்கைக்கு V வைத்துவிட்டே கடையைத் துவக்குகிறார்கள். நீங்கள் மதுரைக்கு வந்தால் சிறந்த வடைக் கடையை அடையாளம் காண சிறந்த வழி V ஒன்று இருக்கிறது. கடைகளில் ஈ மொய்ப்பது போல கூட்டமிருக்கும்!

அந்தக் கடையில் அவர்கள் வடைக்கு எத்தனை சட்னி வகைகள் தருகிறார்கள் எனப் பார்த்தாலே போதும் V! இரண்டு சட்னிகள் எனில் அது 3 ஸ்டார். 3க்கு மேல் விதவிதமாக என்றால் அது 5 ஸ்டார்! நாரதர் மட்டும் மதுரையில் பிறந்திருந்தால் திருவிளையாடலில் ஞானப் பழத்திற்கு பதில் வடையை தந்திருப்பார் V ! தற்போது பழனி மலை மதுரையில் அமைந்திருக்கும் என்பதே ஆகச்சிறந்த உண்மை!

No comments:

Post a Comment