{அந்தக் காலம் அது அது வசந்த் அன்கோ காலம் மாதிரி இது அந்த காலத்து அசைவக்கடைகள் பற்றிய உண்மைப் பதிவு..}
தமிழ்நாட்டில் அசைவச் சாப்பாட்டைப் பற்றி யார் சிலாகிச்சு பேசினாலும் மதுரைஓட்டல்களைப் பர்றி பேசாமல் இருக்க முடியாது. மதுரையின் சிறப்பான அயிரைமீன்குழம்பு, கறி தோசை, விரால் மீன் பத்தியெல்லாம் நிறைய கேட்டுக் கேட்டு நம்மகாதுகள் மட்டுமல்ல கபாலமே புளிச்சு போச்சு! சரி இந்தப் பதிவு எதுக்கு?
மதுரையின் அசைவக் கடைகளுக்குன்னே ஒரு மார்க்கெட்டிங் ஸ்டார்டிஜி இருந்தது! என்அப்பா என்னிடம் சொன்னது, என் தம்பியின் அனுபவம், பல மாஸ்டர்களிடம் நான் கேட்டுதெரிஞ்சிகிட்டது, என் நேரடி அனுபவம் இப்படி ஆச்சி மசாலா ஓனர் மாதிரி நான்பார்த்துப் பார்த்து தெரிஞ்சுகிட்டதை இங்க உங்க கிட்டே பகிர்ந்துக்கிறேன்!
சமீபத்தில் கூட மதுரையில் ஒரு அசைவக் கடையை பற்றி சோஷியல் மீடியாவில் கழுவிஊத்தியிருந்தாங்க! சாப்பாடு ₹100 ஆனா குழம்புக்கு தனியா காசு அங்கே எதைவாங்கினாலும் ₹250க்கு குறைவு இல்லை அப்படின்னு! ஆனா அந்த காலத்தில் இந்தநடை முறை கிடையாது அன்று அசைவக் கடைகளின் ஸ்டைலே வேற.
முதலில் அன்றைக்கு தரமான பொருட்கள், ருசியான சமையல் இதுதான் தாரகமந்திரமாக இருந்தது. நல்ல இறைச்சியைப் பார்த்து வாங்கும் நிபுணர்கள் இருந்தனர். கலப்படம் இல்லாத இறைச்சி, கைப்பக்குவம் மிக்க மாஸ்டர்கள், வாடிக்கையாளர்களுக்கு நல்ல மரியாதையோடு பரிமாறுவது அன்பான கவனிப்புஎல்லாமிருந்தது!
பொதுவா கஸ்டமர் பிரண்ட்லி அணுகு முறை தான் பல அசைவக் கடைகளின்நற்பெயருக்கு காரணமே! அன்று அதிக இறைச்சி அயிட்டங்களை விற்பனைசெய்வதைவிட கஸ்டமர் திருப்திக்கு முதலிடம் கொடுத்தாங்க! கடைக்கு வரும்கஸ்டமர்களைப் பற்றி நன்கு அறிந்துகொள்ள அன்று என்ன செய்வார்கள் தெரியுமா?
கூட்டமான கடைகளில் வெயிட் பண்ணி சாப்பிடுறவங்களுக்கு ஒரு இடம் இருக்கும்! இங்கு 2 சூபர்வைசர் இருப்பாங்க! இவங்க தான் டேட்டா கலெக்டர்கள்! வந்திருப்பவர்உள்ளூரா, வெளியூரா? என்ன தொழில் செய்யறாரு? மதுரைக்கு என்ன விஷயமாவந்துருக்காருன்னு என்று சகல விவரங்களையும் வாங்கிடுவாங்க!
வந்திருக்கிறவரு அடிக்கடி மதுரைக்கு வர்றவர்னு தெரிஞ்சா அவருக்கு தடபுடலாகவனிப்பு இருக்கும். அவர் கேட்காத குழம்பு கிடைக்கும், 4 துண்டு கறி கூடுதலாகிடைக்கும். அவரை மகிழ்ச்சி படுத்துவதன் மூலம் அடுத்தடுத்து அவரை அங்கேவரவழைக்கும் விதை அன்று விதைக்கப்பட்டு அதன் பலனை அறுவடை செய்வார்கள்!
பில் தொகையில் 10 ரூபா 20 ரூபா குறைஞ்சா கூட அடுத்து வரும் போது தாங்க என்றுவிட்டுக் கொடுக்கவும் செய்வாங்க! இன்னொரு முக்கியமான டெக்னிக் பிரியாணிக்குஅரை சாப்பாடு இலவசம்! அதுக்கு அசைவ குழம்புகள், ரசம், மோர் உண்டு. சூடா ஒருஆம்லெட் போடவாண்ணேன்னு கேட்டு சுடச்சுட அவர்கள் தரும் ஆம்லெட் நமக்குஒன்றோடு நிற்காது.
பின்னாளில் அரைச் சாப்பாட்டுக்கு ரசம், மோர் மட்டும் தான் என்று புது கண்டிஷன்அப்ளை செய்து மக்களுக்கு உணவு சப்ளை செய்யும் வாய்ப்பை இழந்து கடையைமூடியவர்களும் உண்டு! இன்னொரு அற்புத வெரைட்டி சாதா அசைவ சாப்பாடு! அதென்னசாதா? சோற்றுடன் எல்லா குழம்புகளும் தருவாங்க அதில் இறைச்சி இருக்காது! குழம்புமட்டும் தான்!
நாம தனியா கறி வாங்கியாகணுமுன்னு எந்த அவசியமும் இல்லை! ஆனா மட்டன் குழம்புஊத்தினா அதில் ஒரு கரண்டி நிறைய எலும்பு துண்டுகள் சோற்றில் விழும்! அட வெறும்மட்டன் குழம்பிலேயே இவ்வளவு கறியான்னு மக்கள் முகம் வியக்கும்! ஆக்சுவலா அந்தஎலும்பில் கறி என்பது 8000 கோடி ரூபாயை 5000 இல்லை 50 ஆயிரம் கோடி பேருக்குதந்தால் எப்படி இருக்குமோ..
அந்தளவுக்கு தான் கறி இருக்கும்! சிக்கன் குழம்பில் சிக்கன் உதிரிகளான கழுத்து, ஈரல், விங்ஸ் துண்டுகள் நிஜமாகவே இருக்கும். சில மீன் குழம்புகளிலும் இப்படித்தான் மீன்கள்நீந்தும்! அடடா இறைச்சிக்கு பணம் வாங்காமலேயே கறியைத் தர்றாங்க என்னாமனுசன்யா என்று வடிவேலு டெம்ப்லட் போல மக்கள் சிலாகித்து உருகிவிடுவார்கள்.
இன்னொரு முக்கிய விஷயம் கறிக் குழம்பில் எலும்பு போட்டு சமைத்தால் எலும்பின்எசன்ஸ் இறங்கி குழம்பின் ருசி அபாரமாக இருக்கும்! இதுபோல மக்கள் சேவையும்செய்து , வசதியானவர்களை கண்டறிந்து அவர்களை திருப்திபடுத்தியே தங்கள்மார்க்கெட்டை மதுரை அசைவக்கடைகள் தக்கவைத்துக்கொண்டன! இரண்டாவதுஅவர்களின் தனித்த ருசி!
முனியாண்டி விலாஸ் ஓட்டல்களில் இறைச்சிக்கு குறிப்பிட்ட கிராமங்களில் இருந்துதான் ஆடு வாங்குவார்கள். பிரியாணியில் ஆட்டுக் கொழுப்பு கட்டாயம் கலப்பார்கள். நெய்செலவு குறையும். ஆட்டுக் கொழுப்பு நெய்யின் இடத்தை ஈடுகட்டிவிடும்.. ருசியும்குறையாது! கோழி, மீன் வகைகளிலும் இதுபோல ருசிக்கு பல தரக் கோட்பாடுகள்உண்டு.
சில அசைவ ஓட்டல்களில் வாடிக்கையாளர்கள் சாப்பிட்டு இலையில் மீதம் வைக்கும்எலும்புகளை கடையின் குப்பைத் தொட்டியில் சேகரித்து அதை குறிப்பிட்ட தூரம்வண்டியிலெ எடுத்து போய் தெரு நாய்களுக்கு போடும் வழக்கம் இருந்தது. அன்று இப்படிநாய்களையே கருணையோடு கவனித்த அசைவ ஓட்டல்கள் தான் இன்று மனிதர்களை… 😢🥱
யெஸ் அந்தக் காலம் நிஜமாகவே பொற்காலம்..
No comments:
Post a Comment