#எடிசனும்_ஈசனும்
திருவாதவூர் சிவன் கோவிலைப் பற்றி விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கேள்விப்பட்டுவியந்து மதுரைக்கு வந்து இக்கோவிலைக் காணவேண்டும் என ஆசைப்பட்டாராம். ஏனோ அது கடைசி வரை நிறைவேறவில்லை! ஆனால் தாமஸ் ஆல்வா எடிசன்இக்கோவிலுக்கு வந்து சென்றது உங்களுக்குத் தெரியுமா?! ஆம்! இதை சுந்தரபட்டர்என்பவர் 1878லேயே ஒரு பட்டர் பேப்பரில் எழுதி வைத்துள்ளார்.
பிரிட்டிஷ் அரசரின் சிறப்பு அனுமதியோடு கப்பலில் மதுரை வந்த தாமஸ் ஆல்வா எடிசன்மதுரை கலெக்டர் ஆல்பர்ட் விக்டர் மாளிகையில் தங்கியிருந்தார். அவரை அனைவரும்கலெக்டரின் உறவினர் என்றே நினைத்திருந்தனர்! பல ரகசிய காரணங்களுக்காகஅன்றைய ஆங்கிலேய அரசு எடிசனின் வருகையை எந்த இடத்திலும்ஆவணப்படுத்தவில்லை என்கின்றனர் வரலாற்று ஆர்வலர்கள்.
எடிசன் மதுரை வர இன்னொரு முக்கியக் காரணம் இந்த பிரபஞ்சம் இயங்கஅடிப்படையாக இருப்பது 2 பெரிய தத்துவங்கள். ஒன்று சைவம் இன்னொன்றுவைணவம்! ஆம் இந்த சிவன் கோவில் வரும் வழியிலேயே ஒரு பெருமாள் கோவிலும்உள்ளது! மதுரை ஒத்தக் கடையில் இருந்து வலது புறம் பிரியும் சாலையில் 2 கி.மீவந்தால் திருமோகூர் கோவில் வரும்! இது ஆழ்வார்களால் பாடப்பட்ட திருத்தலம்! இந்தப் பெருமாளை வழித்துணை பெருமாள் அல்லது..
ஆப்தன் (நண்பன்) என்றும் அழைப்பார்கள்! மிகவும் சக்தி வாய்ந்த பெருமாள்! இங்குதான் சக்கரத்தாழ்வார் சந்நிதியும் உள்ளது.! சக்கரத்தாழ்வார் பெருமாளை தனது வழித்துணை நண்பனாக்கியவர்! அங்கிருந்து சில மைல்கள் தூரத்தில் தான் திருவாதவூர் ஈசன்கோவிலும் உள்ளது! மாணிக்க வாசகர் பாடிய திருத்தலமான திருவாதவூர் திருமறைநாதர் கோவில் என்பது இதன் பெயர்!
இந்த சைவ & வைணவக் கோவில்கள் அமைந்திருக்கும் திசை தான் இந்த அறிவியல்உலகிற்கு மிகப் புதியது! 8 திசைகளிலும் இல்லாத கோணமான தென் வடக்கில்அமைந்த கோவில்கள் இவை! உலக உருண்டையைத் தவிர காந்தத்திற்கு மட்டுமே தென்& வடபுலம் என இருக்கும்! காந்தத்தின் எதிரெதிர் திசைகள் ஒன்றை ஒன்று ஈர்க்கும். ஒரேதிசை அதை விலக்கும், இதுவே அறிவியல்!
ஆனால் தென் வடக்கில் அமைந்துள்ள இந்தக் கோவில்களின் அமைப்பு உலகின் எந்தஒரு விஞ்ஞானத்தாலும் இன்றும் அறிந்து கொள்ள முடியாத விந்தையாக உள்ளது! இவைஒன்றை ஒன்று ஈர்க்காமல், அதே நேரத்தில் விலகியும் விடாமல் இருப்பதே இதன்தனிச்சிறப்பு! இங்கு வந்து சென்ற அடுத்த வருடம் தான் எடிசன் பல்பை கண்டுபிடித்தார்! பல்பை கண்டுபிடிக்கும் முயற்சியில்..
பலமுறை பல்பு வாங்கிய எடிசன் பல்பை கண்டுபிடித்தது, இங்கு வந்தபின்பு தான்! இங்குநரிகள் பரிகள் ஆன கதையை எடிசன் கேட்ட பின்பு தான் அவரே ஒரு திரில்லானதிரைக்கதையாக எழுதி பிறகு சினிமாவையும் கண்டு பிடித்தாராம்! எடிசனின் நெருங்கியநண்பர் ஹென்றிஃபோர்டிடம் சிவன் நரிகளை பரிகளாக்கிய கதையை எடிசன்கூறினாராம்! அதில் ஸ்பார்க் ஆனா ஃபோர்டு..
ஹார்ஸ் பவர் என்பதைக் கண்டறிந்து அதன் பிறகே உலகின் முதல் மோட்டார் காரானஃபோர்டு கார் கண்டு பிடிக்கப்பட்டது! இதை ஹென்றி ஃபோர்டு ஒரு டைரியில் எழுதிஅதை எங்கோ தவற விட்டு விட்டதால் அந்த ஆதாரம் கேள்விக் குறியாகவே உள்ளது! சிவனின் சிலம்பொலி இங்கு தான் முதலில் ஒலித்ததாம்! இது தெரிந்துதான் வானொலிகண்டுபிடிக்கப்பட்டதாம்! மேலும் எடிசன் தொடர்ந்து..
டைனமோ, பல்பு, ஜெனரேட்டர், மோட்டார் கார் போன்ற 897 கண்டுபிடிப்புகளைக்கண்டறியக் காரணம் திருவாதவூர் சிவன் கோவிலும் அதன் தென் வடக்கே உள்ளதிருமோகூரும் தான்! அமெரிக்க அறிவியல் வரலாற்றிலேயே இதெல்லாம் பதிவு செய்யப்பட்டு நாசா துவங்குவதற்கு 100 ஆண்டுகளுக்கு முன்பே ஆவணப் படுத்தப்பட்டது! அப்போது அமெரிக்காவின் நிழல் தலைநகரமாக இருந்தது வர்ஜீனியாவின் ரிச்மாண்ட்நகரம்!
ஜேம்ஸ் நதி பாலத்தின் அருகே இருந்த நூலகத்தில் இந்த ஆவணங்கள்பாதுகாக்கப்பட்டன. அந்தோ பரிதாபம் அப்போது நடந்த உள்நாட்டுப் போரில்அப்பாலத்தை எதிரிகள் தீவைத்து கொளுத்திவிட அத்தனை சான்றுகளும் எரிந்துஅழிந்து போயின. பிற்காலத்தில் பென்ஜமின் ஃபிராங்ளின் இடி தாங்கியை கண்டுபிடித்தபோது அதன் எரிந்த பக்கங்களை கண்டறிய..
ஃபயர்டு கார்பன் மெத்தேடில் கண்டுபிடித்து எழுதினார். ஆனால் மீண்டும் ஒரு அந்தோபரிதாபம் அதன் மீதும் ஒரு இடி தாக்கி அத்தனையும் பஸ்பமாகிவிட்டன! இடி அடிக்கடிஇந்த ஆவணங்களை எரிக்கக் காரணம் எடிசனும் ஃபோர்டும் நன்றி மறந்து சிவன் மற்றும்பெருமாளுக்கு அங்கு யாகமோ தானமோ தராதது தான். வேத விற்பன்னர்களின் வயிறுஎரிந்தது போல ஆவணங்களும் எரிந்தன!
இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கும், விஞ்ஞானத்திற்கும் முன்னோடி நம்திருவாதவூர் சிவனும் திருமோகூர் பெருமாளுமே காரணம்! பூமி தன்னைத் தானே சக்கரம்போல சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றுகிறது என்பதாலேயே திருமோகூர்ஆழ்வாருக்கு சக்கரத் தாழ்வார் எனும் பெயர் கிடைத்தது என்பதை உலகில் எவரும் மறுக்க முடியாது! இது நாசாவே வியந்த உண்மை!
உலகில் காந்த சக்தியில் இயங்கும் அதி நவீன புல்லட் டிரெயின்கள் கூட இந்த தென் வடபுலங்களின் தத்துவத்தில் இருந்தே கண்டு பிடிக்கப் பட்டவையாகும். இதை ஜப்பானைசேர்ந்த “குச்சிமோ சலம்புரசேவா” என்னும் விஞ்ஞானி பண்டைய ஜப்பான் & மாண்டரின்மொழியில் எழுதி வைத்துள்ளார். அதை சரியாக மொழி பெயர்க்கத் தெரியாத பலர்தங்கள் இஷ்டம் போல வரலாற்றை திரிக்கின்றனர்.
மேலும் இந்த கோவிலுக்கு வந்து சென்ற பின்னர் எடிசன் தன் பெயரை எடி ஈசன் என்று கூட மாற்றிக் கொண்டதாக ஒரு கருத்து நிலவுகிறது! மீனாட்சி அம்மன் கோவிலைப்பார்த்து எப்படி நாஸா தன்னை வடிவமைத்து கொண்டதோ அதேபோல உலகின்அறிவியல் கண்டு பிடிப்புகளுக்கு திருவாதவூர் சிவன் கோவில் முன்னோடியாய் உள்ளது! இன்னும் சிவனின் நெற்றிக்கண் தான் லேசர் கதிர்..
அவர் ஜடா முடியில் அடங்கியிருந்த கங்கையைப் பார்த்துத் தான் கடல் பாலம் கட்டியதுபோன்ற பலவற்றை சொல்லிக் கொண்டே போகலாம்! ஆனால் சைவமும் வைணமும்தழைத்தோங்கிய அந்த தென் வடக்கில் தான் சூட்சுமம் உள்ளது! வல்லரசுஅமெரிக்காவின் பெண்டகன், வெள்ளை மாளிகை, நாஸா தலைமையகம்..
லிபர்டி சிலை, ஈஃபில் டவர், இஸ்ரேலின் மொஸார்ட் தலைமையகம், இரஷ்யாவின்கேஜிபி தலைமையகம், இங்கிலாந்தின் பக்கிம்ஹாம் அரண்மனை எல்லாமே இந்ததென்வடக்கு திசையில் தான் அமைந்துள்ளது என்பது உலகமே வியக்கும் விந்தையிலும்விந்தையாகும்.!
🙏 “தென்னாடுடைய சிவனே போற்றி 🙏
🙏 “அன்னார்க்கு உதவும் ஆப்தனே போற்றி” 🙏
#வாட்ஸப்_யுனிவர்ஸிட்டி_ஸிலபஸ்
No comments:
Post a Comment