பொழுது விடிந்தது படுக்கையில் இருந்து எழுந்தார் ஹிட்லர்.. சமையலறையில் இருந்து “எழுந்துட்டிங்களா போய் பால் வாங்கிட்டு வாங்க ஃப்ரிட்ஜில் வச்சிருந்த பால் கெட்டுபோச்சு” என்றது அவர் மனைவி ஈவாவின் குரல்! நான் இன்னிக்கு ஆபீஸ் லீவுன்னு இவகிட்ட சொன்னது தப்பா போச்சே என்று முணுமுணுத்தபடியே பாத்ரூமிற்குள் நுழைந்த ஹிட்லர் முகம் கழுவி அவரது உலகப் புகழ் செவ்வக மீசையை ஆசையாகத் தடவிக் கொண்டார்.
முகம் துடைத்து டீ சர்ட் அணிந்து மறக்காமல் பர்சையும் துணிப் பையையும் எடுத்துக் கொண்டு வாசலுக்கு வந்து தன் ஹோண்டா பைக்கில் ஏறி கடைக்கு கிளம்பும் வேளையில் ஏங்க அப்படியே ஒரு கீரைக்கட்டு, அரை டஜன் முட்டை, ஒரு இட்லிபொடி பாக்கெட், 1 கிலோ ரவை நம்ம வேலு அண்ணாச்சி கடையில் வாங்கிருங்க என்று ஒரு பட்டியல் படித்தாள் ஈவா! ஏண்டி நானென்ன ரோசாப்பூ ரவிக்கைக்காரி சிவக்குமாரா? இவ்வளவு லிஸ்ட் தர்றே என்று..
தனது மனதிற்குள் முணுமுணுத்துக் கொண்டு கிளம்பியவர் பால் வாங்கும் போது கையில் பணம் குறைவாக இருப்பதை கவனித்தார். நல்ல வேளை பர்ஸ் எடுத்து கிட்டேன்! என்று அவரை அவரே பாராட்டிக் கொண்டார். ஏடிஎம் சென்றால் நீண்டட வரிசை ஒன்று நின்றது! இதில் நின்னு எப்போ பணம் எடுத்து என ஹிட்லர் யோசித்த போதே மெஷின்ல பணம் வரலை சார்னு உள்ளே போன ஒருவர் சொல்ல கூட்டம் நாட்டாமை கட்சி போல சடாரெனக் கலைந்தது.
நண்பன் கோயபல்ஸ் வீடு மார்க்கெட் அருகில் தானே இருக்கு அவன் கிட்ட கேட்டுப் பார்ப்போம்னு போனார். வீட்டு வாசலிலேயே அடடே வாப்பா ஹிட்லர் உனக்கு ஆயுசு 100 நானே உன் கிட்ட ஒரு 5 ஆயிரம் ரூபாய் கடனா கேட்கணுமுன்னு இப்போதான் நினைச்சேன் கரெக்டா நீயே வந்துட்ட என அவன் சொன்னதும், என்னடா இவனை நம்பி இங்க வந்தா இவன் இப்படி சொல்லிட்டானே என தமிழருவி மணியன் போல அடிவயிறு கலங்கி அங்கிருந்து விடைபெற்றார்!
பாக்கெட்டில் இருந்த செல்போன் கோல்டன் ஸ்பேரோ என் நெஞ்சுல ஆரோ என ரிங்கிட டிஸ்ப்ளேவில் ஈவா காலிங்னு பார்த்து.. சொல்லும்மா என்றார்! பால் வாங்க போனிங்களா இல்ல பசுமாடு வாங்கப் போனிங்களா ஏன் இவ்வளவு நேரம்? என கிண்டலாக ஒலித்த அவள் குரலுக்கு.. பால், ஏடிஎம்மில் பணம் இல்லை, கோயபல்ஸ் என நடந்த ஃப்ளாஷ்பேகை 39 விநாடிகளில் விளக்கினார் ஹிட்லர். சரி சரி அண்ணாச்சி கடையில் இதை அக்கவுண்ட்டில் சொல்லிடுங்க!
எதையும் மறக்காம வாங்கிட்டு வாங்க! இந்த யோசனை கூட வராத உங்களை கட்டிகிட்டு நான் என்ன செய்ய? அப்புறம் கொரோனாவால் 4 மாசமா ஹோம் லோன், வண்டி லோன்லாம் கட்டாம இருந்தோம் இல்ல அதுக்கு இண்ட்ரஸ்ட் கட்டச் சொல்லி நேத்தி ஒரு லட்டர் வந்துச்சு, அது அந்த துணிப்பையில் தான் இருக்கு பத்திரம்! பேக்கு போல பராக்கு பாத்துட்டு நிக்காம சீக்கிரம் எல்லாத்தையும் வாங்கிட்டு வீட்டுக்கு வாங்க என கடுப்புடன் பேசி தொடர்பை துண்டித்தாள்.
இப்போது தான் வாங்கிய கடன்களின் கவலையோடு மீண்டும் அண்ணாச்சி கடைக்கு போனார் ஹிட்லர். என்னடா வாழ்க்கை இது? எங்கிட்டு போனாலும் இப்படி புரட்டிப் புரட்டி அடிக்குது என நினைத்த போது “சார் எல்லா சாமானும் போட்டாச்சு சரி பாத்துகிடுங்க எதுவும் விடுபட்டு போகலை இல்ல” என்றார் அண்ணாச்சி. சட்டென ஹிட்லர் 2 எலிமருந்து பாக்கெட் கொடுங்க அண்ணாச்சி என்ற போது அவர் மனதில் தற்கொலை செய்து கொள்ள தீர்மானித்திருந்தார்.!
🇮🇪 வந்தே மாதரம் 🇨🇮
(தற்போது இந்தியாவில் ஹிட்லர் ஒரு சாதாரண குடும்பஸ்தனாக பிறந்து இருந்தால் இது தான் நடந்திருக்கும்)
No comments:
Post a Comment