#விண்வெளிவீரன்_வெங்கி
சேலத்தில் சிந்தி இந்து பள்ளியில் தான் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரைபடித்தேன் (இன்னிக்கு வரைக்கும் நீ அது தானேடா படிச்சிருக்கேன்னு சொல்ற எல்லார்மைண்ட் வாய்சையும் கேட்ச் பண்ணிட்டேன்) பள்ளியில் படிக்கும் போது உன் எதிர்காலலட்சியம் என்னான்னு எல்லார் கிட்டேயும் கேட்பாங்க! பெரும்பாலும் டாக்டர் என்றோஅல்லது இன்று பெரிதும் விலைக்குப் போகாத..
எஞ்சினியர்ன்னோ (மன்னிக்க) அல்லது கொஞ்சம் பேராசை உள்ளவர்கள் கலெக்டர்என்றோ சொல்வார்கள்! நான் போலீஸ், நான் இராணுவம் என்று சொன்ன பலர் இன்றுதீவிர சிங்கிக் கூட்டமாகி நான் பார்த்திருக்கிறேன் என் இலட்சியம் என்னவென்றுசொல்வதற்கு முன்பு துரைச்சாமி மாமாவை பற்றி அறிந்துக் கொள்வோம்! சேலம்கிச்சிப்பாளையம் வெள்ளாளர் தெருவில் எங்கள் வீடு.
துரைச்சாமி மாமாவின் தாயார் அந்த ஏரியாவில் பைப்புகாரம்மா என்னும் அடைமொழியில் அழைக்கப்பட்டவர். அக்கம் பக்கம் நடக்கும் பிரச்சனைகள், கணவன் மனைவிசண்டை, பங்காளி பிரச்சனை, இப்படி சகலவிதமான பிரச்சனைகளுக்கும் சர்வரோகநிவாரணியாக அந்த ஏரியாவின் பெண் விஜயகுமாராக (country tortoise) இருந்தவர்பைப்புக்காரம்மா!
பைப்புகாரம்மா ஒரு சிறந்த பெண் எண்டர்புரனரும் கூட! ஊர் பஞ்சாயத்துக்கு தீர்ப்புசொல்லும் வேலையோடு குறைந்த வட்டிக்கு கடன் உதவி செய்வது, சேலை வியாபாரம், ஏலச் சீட்டு, நகை சீட்டு முதலிய லாபகரமான தொழில்களோடு காலை மாலைஇருவேளை இயங்கும் பணியாரக்கடையும் வைத்திருந்தார்! அவர் செய்யும் தேங்காய்துருவல் லேயரில் அரிசிமாவில் வேகவைத்த ஃபாயில்டு..
உருண்டைக்கு அந்த ஏரியாவே அடிமை! மாலையில் அல்வா புட்டு, பனங்கிழங்கு, கேப்பை அடை & வெல்லத்தூள், காரப் பணியாரம் தண்ணீராக ஓடினாலும் அபாரசுவையுடன் இருக்கும் தேங்காய்ச் சட்னி என வெரைட்டியாக மெனுக்கள் செய்து தந்துஎங்களை எல்லாம் அவரது கைமணத்தால் கட்டிப்போட்ட அன்னலட்சுமி! இரவானால்கதை சொல்லும் பாட்டி மொத்த தெருப் பிள்ளைகளும்..
அவர் வீட்டில் தான் இருப்பார்கள்! அப்படி அறிமுகமாகி சொந்தமாக இல்லாவிட்டாலும்அவரது மகன் துரைச்சாமியை மாமா என்றும் அவரது மனைவியான பர்வதத்தை அத்தைஎன்றும் அழைப்போம்.. துரைச்சாமி மாமாவின் மகன்களான முரளி, ராம், பாஸ்கர், அவரதுமூத்த மகளான கலா அக்கா எல்லாரும் எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகைனுவாழ்ந்து வந்தோம்! துரைச்சாமி மாமா கார் ஓட்டுநர்.
கம்யூனிஸ ஈடுபாடுள்ளவர்! லித்தோ பேப்பரே பெரிதாகக் கருதப்பட்ட அந்த காலத்தில்அட்டகாசமான ஆர்ட் பேப்பரில் சோவியத் யூனியனின் அரசியல் தமிழ்ப் புத்தகங்கள்அவர் வீட்டிலிருக்கும்! அதில் சிறுவர் மலரும் உண்டு! மீகையில் செர்க்கியோவிச்கார்ப்பசேவ்.. கான்ஸ்தாந்தின் உஸ்கினோவிச் செர்னாங்கோ.. போன்ற முழு ரஷ்யப்பெயர்களெல்லாம் 42 ஆண்டுகளாகியும்..
இப்போதும் என் நினைவிலிருக்கிறது! நீள மூக்கு பையனான கெப்பத்தோவின் கார்ட்டூன்கதைகளும் எனக்குப் பிடிக்கும். என் கடைசித் தம்பி குமரனை கெப்பத்தோஎன்றழைப்போம். அது நாளடைவில் இன்னொரு தம்பியான பாலுவின் குறும்பால்கொப்பச்சு என்றானது! இன்னிக்கும் கடைசி தம்பியை கொப்பச்சுன்னு தான் நாங்ககூப்பிடுவோம். ஓகே ரொம்ப சுத்திட்டேன், அப்படி ஒரு..
சுப நாளில் தான் அப் பத்திரிக்கையில் யூரிக்காகாரின் பற்றிய ஒரு கட்டுரையைபடித்தேன். விண்வெளி ஆராய்ச்சி மீது தீரா காதல் கொண்டேன், அதுபற்றி நிறையபடிக்க ஆரம்பித்தேன்! பேலஸ் தியேட்டர் தாண்டி சேலம் ஆர்ட்ஸ் காலேஜ் போகும்வழியில் இருக்கும் சேலம் மாவட்ட மத்திய நூலகத்தில் தேடித் தேடிப் படித்தேன்! அச்சமயம் இந்தியாவின் ராகேஷ் சர்மாவும்..
அஷோக் மல்ஹோத்ராவும் விண்வெளிக்கு சென்று திரும்ப எனது ஆசை ஒரு விண்வெளிவீரனாக வேண்டும் என்பதாக அடிமனதில் ஆழமாக வேர் விட்டது.! எல்லாரும் டாக்டர், கலெக்டர், எஞ்சினியர் கனவில் இருக்க நான் மட்டும் விண்வெளி வீரன் என்ற போதுஎல்லாரும் என் முதுகிற்கு பின் நமட்டுச் சிரிப்பு சிரித்தனர். அந்த லட்சியம்நிறைவேறவில்லை தான், எனினும் இப்போது நான்..
ஃபேஸ்புக்கில் எழுதுகின்ற நாசா வியந்தது போன்ற வைரல் காமெடிப் பதிவுகளுக்குஅன்று மாமா வீட்டில் படித்தவை மிகவும் உபயோகமாக இருக்கிறது! அடஅமெரிக்காவுக்கே போய் நாசாவின் இராக்கெட் கண்காட்சிக்கே 2 முறை போயி நான்படித்ததை எல்லாம் நேரில் பார்த்துட்டேன்! அதிக முறை விண்வெளிக்கு சென்று வந்தடிஸ்கவரியிலும் ஏறி இறங்கிட்டேன்! இதுக்கு மேல என்ன வேண்டும்!!
No comments:
Post a Comment