“சர்க்கரை நோயும் சாம்பார் சாதமும்”
உலகிலேயே அதிக சர்க்கரை நோயாளிகள் இருக்கும் நாடு இந்தியா! கடந்த 25 ஆண்டுகளில் இந்தியாவில் சர்க்கரை நோய் விகிதம் அதிகமாகி இருக்கிறது என்கிறது பல மருத்துவ ஆராய்ச்சிக் குறிப்புகள். இதற்கு முழுக் காரணம் நமது உணவில் தலையாய இடம் பெற்று இருக்கும் சாம்பாரும் பருப்பும் தான்.
தனது ஆயுட்காலம் முழுவதும் சராசரியாக ஒரு மனிதன் வாரத்திற்கு மூன்று முறையாவது சாம்பார் சாப்பிட்டு விடுகிறான். சாப்பாடு, இட்லி, தோசை, வடை, பொங்கல், உப்புமா என நாம் சாம்பாரை குறைந்த பட்சம் வாரத்திற்கு 10 வேளையாவது உண்கிறோம் 1 மாதத்தில் 30 முறை ஒரு வருடத்தில் 360 முறை!
இந்த சாம்பாருக்கு பயன்படுத்தும் பருப்பில் தான் உங்கள் உடலின் இன்சூலின் சுரப்பை குறைக்கும் ‘பர்ப்போ எத்னாலின்’ 78% உள்ளது. இது ரத்தத்தில் வெள்ளை அணுக்களை பாதிக்கிறது. இதனால் சிலருக்கு ரத்த சோகை கூட வரலாம். ஆனால் பெரும்பாலும் இது நீரிழிவு நோயையே ஏற்படுத்துகிறது.
மேலும் சாம்பாரில் சேர்க்கும் மஞ்சள் பூசணி, சின்ன வெங்காயம், முள்ளங்கி போன்றவை சாம்பாரில் இனிப்பைக் கூட்டக் கூடியவை. சிலர் சாம்பாரில் வெல்லமும் சேர்ப்பார்கள். பரங்கிக் காய் எனும் மஞ்சள் பூசணி இனிப்பு சுவை அதிகம் கொண்டது. அதில் ஸ்வீட்டோலக்ஸ் 134% சதவீதம் நிறைந்துள்ளது.
இது சர்க்கரையில் இருக்கும் இனிப்பை விட 6 மடங்கும் சாக்ரீமில் இருக்கும் இனிப்பை விட 3 மடங்கும் அதிகம் ஆகும். இவ்வளவு இனிப்பும் சேர்த்தால் நம் உடல் என்னாவது? ஆனால் இதை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சித்தர்கள் தங்கள் பாடல்களில் சர்க்கரைப் பூசணி என்றே குறிப்பிட்டு வந்தார்கள்.
மேலும் இந்த பர்ப்போ எத்லினும், ஸ்வீட்டோலக்ஸும் அரிசியோடு சேரும் போது கார்போ பர்ப்போலக்ஸாகி நம் உடலின் இன்சுலின் சுரப்பை குறைத்து நீர் சத்தை உறுஞ்சுகிறது. அதனால் தான் சாம்பார் சாதம் சாப்பிடுபவர்கள் அதிகம் நீர் அருந்துவார்கள். இதில் நெய் ஊற்றிய சாம்பார் சாதம் எனில் நிச்சயம் சங்கு தான்.
ஏனெனில் கார்போ பர்ப்போலக்ஸை நேரடியாக சீறுநீரகத்திற்கு கொண்டு சேர்க்கும் வேலையை மெய்யில் உள்ள லாக்டோ ஒமேகா செய்துவிடுகிறது. பலருக்கு சிறுநீரகம் பாதிப்பது இதனால் தான். தென்னிந்தியாவில் தானே சாம்பார்? அப்போ வட இந்தியாவில் எப்படி சர்க்கரை வியாதி அதிகம் வருகிறது என கேட்கலாம்.
நமக்கு சாம்பார் போல அங்கு பருப்பு (உ.ம்: தால் கிச்சடி) இன்றியமையாத உணவு! அங்கும் மஞ்சள் பூசணிக்காய் சமையலில் உண்டு எனவே தான் அங்கும் இது அதிகம்.நீங்கள் என்றோ பிரியாணி சாப்பிடுவதை விட ஆபத்தானது அடிக்கடி சாப்பிடும் சாம்பார் என்பது இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும்.
சென்னையில் மட்டும் தினமும் கிட்டத்தட்ட 75 ஆயிரம் ஓட்டல்களிலும் 80 லட்சம் வீடுகளிலும் ஒரு வாரத்திற்கு 8 வேளைகள் சாம்பார் தயாரிக்கப்பட்டு நமக்கு உணவாகி வருகிறது. அடுத்த 25 ஆண்டுகளில் இந்திய மக்களில் 100 பேருக்கு 85 பேர் சர்க்கரை நோயாளிகளாக இருப்பார்கள் என்கிறார்கள்.
இவ்வளவு கேடு விளைவிக்கும் சாம்பார் ஒரு சந்ததியையே அழித்து வருவதை நம் தேசம் பார்த்துக் கொண்டு சும்மா இருக்குமா! சாம்பார் சாதத்தில் இவ்வளவு தீங்கு உள்ளது என்பதை கண்டறிந்த பின்னரே தற்போது நம் நாட்டில் ஒருவரை நம்பி “அவர் விரைவில் பருப்பெடுத்துவிடுவார்” என்ற முழக்கத்தை பலர் முன்னிறுத்த இதுவே காரணம்!
வாழும் வீர சிவாஜியாக உழைத்து வரும் அந்த மஹான் நிச்சயம் இதைச் செய்வார். கொரோனாவை ஒழித்தது போல நமது தேசத்தில் சர்க்கரை நோயையும் விரைவில் ஒழித்து சுகர் இல்லாத பாரதத்தை அவர் உருவாக்குவார். ஸ்வச் பாரத் போல சுகர்லெஸ் பாரதத்தையும் நிர்மாணிக்கவிருக்கும் அந்தப் பிதாமகரை வணங்குவோம்!
✅ வாட்ஸப் யுனிவர்சிட்டி சிலபஸ் ✅
No comments:
Post a Comment