#மாமன்_மச்சான்
முரட்டுக்காளை படத்தில் இடம் பெற்ற இந்தப் பாடல் எத்தனை பேர் ப்ளே லிஸ்டில்இருக்குன்னு எனக்கு தெரியாது! ஆனா என்னிடம் சைக்கிளே இல்லாத காலத்தில் ஒரு60 காஸட் முழுக்க இதே பாடலை மட்டும் பொக்கிஷமாக பதிந்து வைத்திருந்தேன்! இந்தப் பாடலின் இசைக் கோர்வை ஆர்க்கெஸ்டிரேஷன் பற்றியெல்லாம் இன்னிக்குபெரிதாக இசை வல்லுநர்கள் போற்றி எழுதுகிறார்கள்!
இந்த இசைக் கோர்வையின் பயணம் மலையிலிருந்து ஓடி வரும் நீர் போல விழுவதும்எழுவதும் அதன் துள்ளலும், வேகமும் கிட்டத்தட்ட ஒரு ஆரட்டா அல்லது சிம்பொனிக்குஇணை என்கின்றனர்! வெளி நாடுகளில் இன்றைக்கு இசைப்பள்ளிகளில் இந்தப்பாடலைபாடமாக வைத்துள்ளனராம்! அதெல்லாம் அன்று எனக்குத் தெரியாது! பொதுவாவேவித்தியாசமான இசை என்பதை என் செவிகள் நுகரும்!
வீட்டில் பாட்டி, தாத்தா, அம்மா, சித்தி, மாமா, அத்தை அனைவருமே முறையாக கர்நாடகசங்கீதம் கற்றவர்கள்! வீணை, வயலின், தவில், மிருதங்கம், கொன்னக்கோல்வாத்தியங்களை கச்சேரி செய்யும் அளவு வாசிப்பவர்கள்! நான் இசைன்னு எழுதியிருந்தாவாசிப்பேன்! என் ஞானம் அவ்வளவு தான்! ஆனா மனிதனின் ஜீன் இருக்கே அது ஒருஅற்புதம்! புலிக்கு பிறந்தது புள்ளி மான் ஆகுமா! அப்படித்தான்..
இசை எனக்குள் வந்து அமர்ந்து கொண்டது! ஒரு சிறிய இசைத் துணுக்கும்மனப்பாடத்தில் இருக்கும்! இந்த இசை எந்தப் பாடலின் இடையிசை அல்லது துவக்கஇசை என்பதை மைக்ரோ விநாடிகளில் என் மூளை கண்டுபிடித்துவிடும்! இதனால்வளர்த்துக் கொண்ட இசையறிவுக்கு மானசீக குரு இசை ஞானிதான்! இந்தப் பாடலில்கூட துவக்க இசையின் நிறைவில் கோழி கூவுது படத்தில் வருகின்ற..
ஏதோ மோகம் பாடலின் இசைத் துணுக்கை அந்த 2 விநாடிகளில் அறிய முடிந்தது! இந்தப் பாடலின் இடை இசை, சைலஜாவின் குரல் தனிக் காட்டு ராஜாவில் வரும்“ராசாவே உன்னை நான்” பாடலையும் காட்டுக்குள் ரஜினி ஓடும் காட்சிகளில் வரும்இசை “மீன் கொடி தேரில் மன்மதராசன்” பாடலின் இசையையும் ஒத்திருக்கும்! (அட்டகாப்பி இல்லாமல் வேற பீட் தான்) இசை ஞானியை தூற்றுவோர்..
ஒரு பக்கம் தூற்றிவிட்டு போகட்டும்! அவர் என்ன சும்மாவா இசை அமைச்சாரு? காசுவாங்கிட்டு தானே என்பவர்களுக்கு.. அவர் வாங்கியது கண்ணாடி கற்களுக்கானவிலையை மட்டுமே! ஆனால் அவர் தந்தது விலை மதிப்பில்லா வைரங்கள்! வைரங்களுக்கு காலம் கடந்த பின்பு தான் மதிப்பும் ஒளியும் கூடுமாம்! ஆம் இப்போதுதான் பேரொளி வீசுகிறது எங்கள் ராகதேவன் தந்த இசை வைரங்கள்!🎵
பாடலின் லிங்க் கீழே கமெண்ட்டில் 👇
No comments:
Post a Comment